சல்மான் இராஜினாமா செய்ய வேண்டும்
(அபு ரஷாத்)
அமைச்சர் ஹக்கீம் தனது தேசியப்பட்டியல் பொக்கிசத்தை சல்மானின் பெட்டகத்தில் வைத்து பாதுகாத்தார்.அது இன்னமும் உரியவரின் கைகளுக்கு சென்றடையவில்லை.அதனை இன்னும் தனது பெட்டகத்தில் வைத்து பாதுகாப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
சில நாட்களாக சல்மான் மீதும் வசை மாரிகள் பொழிந்த வண்ணமே உள்ளன.சல்மான் மீதான வசை மாரிக்கு மு.காவின் எதிரிகள் தான் காரணம் என பலரும் கருதலாம்.
இல்லை..இல்லை.. இது ஹக்கீமின் திருவிளையாடலாக ஏன் இருக்கக் கூடாது? ஊடகங்களை ஏற்றி விட்டு சிலதை சாதிப்பதும் சாணக்கிய (சாணக்கியத்தின்) விளையாட்டுத் தான்.
அமைச்சர் ஹக்கீமைப் பொறுத்தமட்டில் இக் காலத்தில் தேசியப்பட்டியலை வழங்குவது ஆபத்தானது.அதனால் இதன் மீதான குற்றச் சாட்டை சல்மான் மீது போட்டுவிட்டால் ஹசனலி என்ன சொல்ல முடியும்? அட்டாளைச்சேனை மக்களால் தான் என்ன செய்ய முடியும்? ஒன்றும் சொல்ல முடியாதே!
சில வேளை அமைச்சர் ஹக்கீம்,தான் இவ்வாறு செய்யும் போது வேறு சவால்களும் வந்துவிடலாம் என்பதால் இதற்கான எதிரொலிகள் எவ்வாறு அமையும் என்பதற்கான வெள்ளோட்டமாகவும் இதனை நோக்கலாம்.இவ்வாறான நகர்வுகளை பா.உ சல்மான் கவனத்திற் கொண்டு இது வரை தான் பாதுக்காத்து வந்த மரியாதையை பாதுகாத்துக்கொள்வது சிறந்தது.சல்மானின் பெயர் தாருஸ்ஸலாம் விவகாரத்தில் நாற்றம் எடுக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சல்மான் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதை விட வேறு வழி இல்லை.
அட்டாளைச்சேனை மக்கள் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்குவதை தடை செய்வதற்கு மாத்திரம் துள்ளிக் குதிக்காமால் சல்மானிடமுள்ள தேசியப்பட்டியலை முதலில் எடுத்துக்கொள்ள போராட்டம் செய்ய வேண்டும்.
0 comments:
Post a Comment