Pages

.

.

Sunday, July 2, 2017

அல்லக்கை நானா ? நீங்களா?
மனச்சாட்சியுடன் பேசுவோம்..

ஏ. எச்.எம். பூமுதீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வை. எல்.எஸ்.

2013 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன், உங்களின் பங்களாவுக்கு வந்து - அப்போது நான் கடமையாற்றிய சுடரொளி பத்திரிகைக்கு பேட்டி எடுத்து சென்றதை நானும் மறக்கவில்லை, நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

அதனால், உங்கள் பங்களாவையும் அங்குள்ள ஆடம்பர உபகாரணங்களையும் எனக்கு நன்கு தெரியும் என்பது உங்களுக்கு தெரியும்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனை - அவர் எம்பியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர்தான் அவரை உங்களுக்கு தெரியும்.

2000 ஆம் ஆண்டு நான் நவமணியில் அலுவலக செய்தியாளராக வேலை பார்க்கும்போது , ரிஷாத் பதியுதீன் அவர்கள்- மன்னார் மாவட்ட சுக அமைப்பாளர்.

அப்போது அவரிடம் காணப்பட்ட நட்பண்பு , மரியாதையான பேச்சு , அவரது மக்கள் மீது அவர் கொண்டிருந்த பாசம் என்பன என்னை அவர்பக்கம் ஈர்த்தெடுத்தது- இறைவனின் துணையுடன் அவர் , அடுத்து வந்த தேர்தலின் மூலம் எம்பியுமானார். அதட்கு அடுத்து வந்த தேர்தலிலும் மீண்டும் எம்பியானார்.

இதன்பின்னர்தான், 2004 ஆம்   ஆண்டுகளில் அவர் வன்னி புனர்வாழ்வு அமைச்சரானதன் பின்னர்தான் - நீங்கள் வேறு வழி இன்றி, முகா தலைவர் எதிர் தரப்பில் இருப்பதால் தனக்கு பிரயோசனம் இல்லை என்பதை உணர்ந்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் ஒட்டிக்கொண்டீர்கள்.

இந்த விடயம் எனக்கு, உங்களுக்கு, இந்த காலப்பகுதியில் இருந்தோருக்கு நன்கு தெரிந்த விடயம். பின்னர், அமைச்சின் ஊடாக கொழுத்த வருமானத்தை பெட்டீர்கள். சொகுசு வாகனத்தில் வலம் வந்தீர்கள்.

ஆனால் நானோ, அதே நவமணியில்தான் 5000 ரூபா சம்பளத்தில் இருந்தேன். இப்போது கூறுங்கள் அல்லக்கை நானா? நீங்களா? .. அமைச்சர் ரிஷாதுக்கு துளியளவும் உதவி புரிந்திராத உங்களை, அந்த ரிஷாத் என்ற மனிதர் எந்தளவு தூரம் உங்களை கண்ணியப்படுத்தினார். அந்த கண்ணியப்படுத்தலால்தானே இந்த பங்களாவை நிர்மானித்தீர்கள்.

அமைச்சர் றிஷாத்தின் கீழ்வந்த நிறுவனங்களின் தலைவராக இருந்து அதன் மூலம் கிடைத்த பல லட்சங்களை ( கேள்வி பாத்திரம் உட்பட) கொண்டல்லவா அந்த பங்களாவை நிர்மானித்தீர்கள்.

கூலிக்கு எழுதுபவன், மஞ்சள் கவர் என்றெல்லாம் , அமைச்சர் ரிஷாதுக்கு சார்பாக எழுதும் எண்ணையும் ஏனையோரையும் கூறுகிண்றீர்கள். அவ்வாறு நாங்கள் ரிஷாதுக்கு சார்பாக எழுதியதனால்தானே - நிறுவன தலைவர் பதவிகளை , அமைச்சர் ஊடாக பெற்று அந்த பங்களாவை காட்டினீர்கள்.

அமைச்சர் ரிஷாத் பதியூதீனிடம் 2013 தொடக்கம் 2015 வரைக்கும்தான் - நான், அவரின் ஊடக பொறுப்பாளராக இருந்தேன். அதட்கு அவர் ஊதியம் தந்தது உண்மை. ஆனால், இதட்கு முன்பு- அதன் பின்பு இன்றுவரை அவரிடம் - அவருக்கு சார்பாக எழுத எங்கு, எப்போது, எவ்வளவு கூலி எடுத்தேன் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?

2015 ஆம் ஆண்டின் பின்னர் 5 சர்வதேச இணையதளங்களின் கிழக்குக்கு பொறுப்பான பிரதான ஊடக செய்தி மேட்பார்வையாளர் பொறுப்பு எனக்கு கிட்டியது. அவர்களின் நிபந்தனைப்படி, " கட்சி அல்லது அரசியல்வாதி ஒருவரின் கீழ் முழுநேரமாக ஊடக பணி புரியக்கூடாது ". அந்தவகையில் அமைச்சர் றிஷாத்தின் ஊடக பொறுப்பாளர் என்பதில் இருந்து விலகி வந்துவிட்டேன்.

ஆனால், நான் இப்போது வரைக்கும் ரிஷாத் பதியுதீன் என்ற நபரின் ஆதரவாளனே.. இனியும் அப்படிதான். சர்வதேச இணையதளங்கள் தரமான கூலியை வழங்குகின்றன. நான் யாரிடமும் தங்கி வாழவேண்டிய அவசியம் இல்லை. மாறாக, உங்களுக்கு அந்த தங்கி வாழும் நிலை உள்ளது. அதட்கு நீங்கள் 10 வருடங்கள் அல்லது அதட்கு மேல் பழக்கப்பட்டு விடீர்கள். இப்போது அந்த தங்கி வாழும் நிலை இல்லாமல்போனதால், அமைச்சர் ரிஷாத்தை விமர்சிக்கிண்றீர்கள். அதைவிடுத்து, உங்களின் பழைய தொழிலான "டியூசன் மாஸ்டர் " என்ற இடத்துக்கு போவதுதான் பொருத்தமானது.

பல்கலை விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பொறியலாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்துறை சார்ந்தோர் - அமைச்சர் றிஷாத்தின் சமூகம் மீதான பற்றுதலை கண்டு பல்வேறு வகைகளில் அவருக்கு சார்பாக எழுதுகின்றனர். அப்படியானால், அவர்களும் கூலி அல்லது மஞ்சள் கவர் எழுத்தாளர்களா? மடத்தனமாக நீங்கள் புலம்புவது உங்களுக்கு விளங்கவில்லையா?

அப்துல் இபுன் மூஸா, ஷேக் அலி போன்ற உங்களின் போலி முகநூல் போன்ற ஒன்றிலா நாம் எழுதுகின்றோம்.? இல்லையே! சம்சுதீன் யூனுசுலெப்பை என்ற மானம்கெட்ட ஒருவனின் முகநூல் ஊடாக நீங்கள் எழுதுவது போல் நாம் எழுத்தினோமா? இல்லையே..!

இறுதியாக, உங்களின் பிரச்சினை தேசியப்பட்டியல் என்பது.
10 வருடங்கள் கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்தீர்கள். இந்த காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக என்ன கிழித்தீர்கள்.

உங்களின் சொந்த அம்பாறை மாவட்டத்தில் அல்லது கல்முனையில் எதனை பேரை கட்சிக்குள் உள்வாங்கினீர்கள். எதுவுமே இல்லை.

இன்று பாருங்கள்.. முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ஜெமீல்,அப்துல் மஜீத், துல்ஷான்- முன்னாள் மேயர் சிராஸ் , முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ரஹ்மான், ரியாஸ்-முன்னாள் துணை வேந்தர் இஸ்மாயில் என்று மருதமுனை, பொதுவில், கல்முனை, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் உள்ள மக்கள் செல்வாக்குள்ளவர்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர். இதனை உங்களால் இந்த 10 வருடங்களில் செய்ய முடியாது போனது.

கடந்த பொதுத் தேர்தலில், சொந்தமாக ஒரு கூட்டத்தையேனும் ஒழுங்கு செய்தீர்களா? இல்லையே..!
அப்படியிருக்கும்போது உங்களுக்கு எப்பிடி தேசியப்பட்டியலை தர முடியும்..?

பொறுமையாக இருங்கள்..நாகரீகமாக பேச, எழுத பழகுங்கள் இனியாவது. எனவே, மீண்டும் கேட்கிறேன்- அல்லக்கை நீங்களா? அல்லது நானா?..


Saturday, July 1, 2017

வை.எல்.எஸ் ஹமீதின் பதிலாக்கம் – 02 யின் மீதான பார்வை

வை.எல்.எஸ் ஹமீதின் பதிவுகளை நோக்கும் போது கண் பொஞ்சாதி ஒன்றுக்கும் இயலாமல் கிடக்கும் நிலையில் அனைவரையும் வாய்க்கு வந்தபடி திட்டி தீர்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. தனது இந்த நிலையை வை.எல்.எஸ் ஹமீத் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து கொள்கிறேன்.  ஒரு விடயத்துக்கு பதில் எழுதுவதானால் அவர் கேட்கும் அனைத்துக்கும் பதில் வழங்கப்பட வேண்டும். அவ்வாறல்லாமல் அவர் மீது ஆயிரமாயிரம் வினாக்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஒன்றை பிடித்துக்கொண்டு வை.எல்.எஸ் ஹமீத் பதில் எழுத முனைந்திருப்பதானது அவரது இயலாமையை சுட்டிக் காட்டுகிறது என்ற விடயத்தை தொட்டுக்காட்டியவனாய் அவரது பதில் கட்டுரைப்பகுதியினுள் நுழையலாம் என நினைக்கின்றேன்.

வினா – 01

முசலிப் பிரச்சினை தொடர்பாக இரண்டரை வருடங்களாக ஏன் ஜனாதிபதியுடன் பேசவில்லை என்ற வினாவை எழுப்பியதற்கு பகிரங்க விவாதங்களில் முழு நாடே அறியும் வண்ணம் பேசி ஜனாதியின் காதுகளை அடைந்திருக்கும் என பதில் அளிக்கின்றார்கள்? அப்படியானால் இவரை ஏன் மக்கள் பாராளுமன்றம் அனுப்பினார்கள்?

பதில்

முசலி பிரச்சினையெல்லாம் ஒரு பிரச்சினையல்ல. அமைச்சர் றிஷாத் தனது அரசியல் இலாபம் கருதியே அதனை பெரிதாக காட்டுகிறார் என்று கருத்து வெளியிட்டு வந்த வை.எல்.எஸ் ஹமீத், இது தொடர்பில் ஜனாதிபதியிடம் பேசுமாறு கூறியிருப்பதானது நகைப்பிற்குரியது. முசலிப் பிரச்சினை தொடர்பாக இரண்டரை வருடங்களாக ஏன் ஜனாதிபதியுடன் பேசவில்லை என்ற வினாவுக்கு அமைச்சர் றிஷாத் பகிரங்க விவாதங்களில் கலந்து கொண்டு ஜனாதிக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் இவ்விடயத்தை கொண்டு சேர்த்துவிட்டார் என்ற செய்தியையே கூற வந்தேன். இதற்கு அப்படியானால் எதற்கு பாராளுமன்றம் செல்ல வேண்டும்? என்று எனது கருத்தைக் கூட புரிந்துகொள்ள முடியாமல் வை.எல்.எஸ் ஹமீத் வினா எழுப்பியுள்ளார்.

அமைச்சர் றிஷாத் பகிரங்க விவாதங்களில் மாத்திரம் கலந்து கொண்டு விளங்கப்படுத்தினார் என நான் கூற வந்திருந்தால் வை.எல்.எஸ் ஹமீத்தின் வினா சரியாக அமைந்திருக்கும். எனக்கு அதிகமான வேலை இருந்ததன் காரணமாக எழுத்தை சுருக்கும் பொருட்டே அவ்வாறு கூறினேன். அமைச்சர் பாராளுமன்றங்களிலும் பேசியதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. அதனை காட்டினால் வை.எல்.எஸ் ஹமீத்தால் என்ன செய்ய முடியும்? அப்படியானால், இவரை ஏன் மக்கள் பாராளுமன்றம் அனுப்பினார்கள்? என்ற வினாவின் மூலம் தற்போது அமைச்சராக உள்ள றிஷாத் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் பேச வேண்டும் என்ற விடயத்தை கூறுகிறார். இதற்கு முன்பு அவர் எழுதிய “ கபடத் தனத்துக்கும் எல்லை இருக்கின்றது ” என்ற கட்டுரையையில் அமைச்சராக இருந்து கொண்டு இவ்வரசை இகழ்வது பயனற்றது, எமாற்றுக்குரியது என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இவர் அமைச்சர் றிஷாதை விமர்சிப்பதையே தனது கொள்கையாக கொண்டுள்ளாரே தவிர தன்னக்கென்று ஒரு நிலையான கொள்கை இல்லாததை அறிந்து கொள்ள முடிகிறது.

அமைச்சர் றிஷாத் முசலி மக்களின் காணிகள் தொடர்பில் பல தடவைகள் ஜனாதியிடம் பேசியுள்ளார். வை.எல்.எஸ் ஹமீத் தனது குறித்த பதிவில் ஜனாதிபதியை சந்திக்க சென்ற அமைச்சர் றிஷாத் ஜனாதியின் செயலாளரை சந்திக்க சென்றார் என்ற வினாவை எழுப்பியுள்ளார். இதன் மூலம் அமைச்சர் றிஷாத், ஜனாதிபதியை சந்திக்க முயற்சிப்பதை வை.எல்.எஸ் ஹமீத் தனது வாயாலேயே ஒப்புக்கொள்கிறார். முயற்சிகள் என்பது முதலில் பாராட்டத்தக்கதல்லவா?

வினா – 02

அமைச்சுப் பதவியுடன் இருந்து கொண்டு கதைத்தால் தான் எடுபடும் என்கிறார்களே! அப்படியானால் எதற்கு அமைச்சர் றிஷாத் பதவிகளை தூக்கிவீசுவேன் என்கிறார்?

பதில்

அமைச்சுப் பதவியை வைத்துக்கொண்டு விமர்சிப்பதற்கு அலாதித் துணிவு வேண்டும். தனது எதிரி மீது ஒருவர் குற்றம் சுமத்துவதற்கும் தனது பக்கத்தோடு உறவாடிக்கொண்டிருக்கும் ஒருவர்  குற்றம் சாட்டுவதற்கும் இடையில் பாரிய வேறுபாடுள்ளது. இவர்களில் யாருடைய குற்றச்சாட்டு எடுபடும் என்பதை தெளிவு செய்யுமளவு வை.எல்.எஸ் ஹமீத் முட்டாளல்ல என நினைக்கின்றேன். அப்படியானால், அமைச்சர் றிஷாத் தனது பதவியை தூக்கி வீச தான் தயார் என ஏன் கூற வேண்டும்? இங்கு தான் எமது சிந்தனைகளை ஆழமாக்க வேண்டும்.

குறித்த அமைச்சுப் பதவியை வைத்துக்கொண்டு அமைச்சர் றிஷாத் இவ்வாட்சியாளர்களை விமர்சிப்பதன் காரணமாக அவரது அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டு மாத்திரமே அவரை இவ்வாட்சியாளர்கள் முடக்க முயற்சிக்கலாம். இவ்வாறான  நிலை வருகின்ற போது அமைச்சா/ சமூகமா என்ற நிலையில் அமைச்சர் றிஷாத்  தனது அமைச்சுப் பதவியை தூக்கி வீசுவார்  என்ற பொருளில் தான் குறித்த அமைச்சர் றிஷாதின் கூற்றை நோக்க வேண்டும். இன்று அமைச்சர் றிஷாத் இவ்வாட்சியலர்களை விமர்சிப்பதன் ஊடாக படிப்படியாக அமைச்சர் றிஷாத் தனது அமைச்சுப் பதவியை இழந்து கொண்டிருக்கின்றார் என்பதே உண்மையாகும். இதனை அண்மையில் அவருக்கு அதிகாரம் குறைந்த தபால் அமைச்சு வழங்கப்படும் என மு.காவைச் சேர்ந்தவர்கள் கூறித் திருந்தமையிலிருந்தே விளங்கிக்கொள்ளலாம். இவ்வாட்சியளர்கள் இவ்வரசிலிருந்து அமைச்சை ஒருவரை நீக்கும்/ புறக்கணிக்கும் போது அது கூட வேறு வடிவம் பெறும்.

வினா – 03

உங்கள் ஆதரவாளர்கள் நாகரீகமற்ற வார்த்தைகளை பிரயோகிக்கின்றார்களே! அவர்கள் கைகூலிகள் அல்ல ஆதரவாளர்கள் என்கின்றீர்கள். உங்கள் ஆதரவாளர்கள்  எல்லாம் மூன்றாம் தர மனிதர்களா?

பதில்

முதலில் உங்களிடம் நாகரீகமற்ற வார்த்தைகள் பிரயோகிப்போர் அமைச்சர் றிஷாதின் ஆதரவாளர்கள் என யார் ஏற்றுக்கொண்டார்? நீங்கள் தான் என்னை, அமைச்சர் றிஷாத் கூலிக்கு ஆள் வைத்து விமர்சிக்கின்றார் என கூறித் திரிகிறீர்கள். அவர்கள் கூலிகள் அல்ல. ஆதரவாளர்கள் என்றே பலரும் பதில் வழங்கினர்.இதனை வேறு எங்கோ? ஏதோ? முடிச்சி போட்டு பதில் தருகிறீர்கள். உங்கள் சிந்தனை குழம்பிப் போய்விட்டது.

நான் உங்களுக்கு பதில் கட்டுரையை நாகரீகமாகவே எழுதியிருந்தேன். எனக்கு முகநூல்  பேக் ஐடியில் இருந்து ஓரிருவர் மிகக் கேவலமாக எழுதியிருந்தனர். அதில் ஒன்று நீங்கள் பாவிக்கும்  போலி முகநூலாகத் தான் இருக்க வேண்டும். அதைப் பற்றி அதனை நீங்கள் தான் செய்கிறீர்கள் என குற்றம் சாட்டுமளவு நான் மூடனல்ல. நீங்கள் கேட்டிருப்பது போன்று அது உங்கள் பிறப்பு குறைபாடா? வளர்ப்பு குறைபாடா? இடையில் வந்த குறைபாடா என கேட்க எனக்கு அதிக நேரம் எடுக்காது. வளர்ப்பை கேள்விக்குட்படுத்தி பேசுமளவு நான் வக்கிர புத்தியுள்ளவனல்ல.

ஒரு அமைச்சருக்கு/ கட்சிக்கு தனிப்பட்ட ஊடக பிரிவு காணப்படும். இது அமைச்சர் றிஷாத் மாத்திரம் செய்வதல்ல. மு.காவுக்கும் உள்ளது. உத்தியோக ஊடக பிரிவினர் கடமைக்காக ஊடக பணி செய்பவர்கள். அதனைத் தான் கூறியிருந்தேன்.

வினா – 04

உங்கள் ஆதரவாளர்கள் கட்சிக்குள் இருந்த போது, நான் ஏன் இவற்றையெல்லாம் பற்றி பேசாமல் இருந்தேன் என கேட்கின்றனர். நான் இவற்றை பற்றியெல்லாம் பேசாமலா இருந்தேன்? எத்தனை தடவைகள் பேசியுள்ளேன்.

பதில்

நான் ஒருபோதும் வாய் மூடி இருக்கவில்லை. அமைச்சர் றிஷாத் பதுளை, கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் விடயத்தில் சமூக துரோகம் செய்ய இருந்ததை நீங்கள் தான் போராடி தடுத்ததாக கூறியிருந்தீர்கள். இவரின் கூற்றுப்படி அமைச்சர் றிஷாத் சமூகத்து துரோகம் செய்யும் மன நிலை உடையவர். இதனை அறிந்தவுடன் அமைச்சர் றிஷாத் பற்றிய  உண்மைகளை சமூகத்துக்கு கூறி அவரை விட்டு விலகியிருக்கலாமே! அப்போதெல்லாம்  மாறாமல் தேசியப்பட்டியல் கிடைக்காமல் அமைச்சர் றிஷாத்  உங்களை கட்சியை விட்டும் நீக்கிய பிறகே அவரைப் பற்றி சமூகத்துக்கு கூற வேண்டும் என்ற ஞானம் பிறந்ததன் மர்மம் என்ன? சிலருக்கு கஞ்சா அடித்தால் தான் ஞானம் வரும். உங்களுக்கு அதிகாரமும், பதவியும் பறி போன பிறகு தான் ஞானம் பிறக்குமோ?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Thursday, June 29, 2017

அமைச்சர் ஹக்கீம் நல்லாட்சியிடம் நீதியை எதிர்பார்க்குமளவு, நல்லாட்சி என்ன செய்துள்ளது?

அமைச்சர் ஹக்கீம் பெருநாள் வாழ்த்து செய்தியிலும் தற்போதைய அரசை புகழ்ந்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இகழ்ந்தும் அரசியல் செய்ய வேண்டிய வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் சத்தார் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

தற்போதைய அரசானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது பலவாறான குற்றச் சாட்டுக்களை முன் வைத்தே வந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காலத்தையும் தற்போதைய காலத்தையும் அவர்கள் குற்றம் சுமத்திய விடயங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது குற்றச் சாட்டுக்கள் அதிகரித்துள்ளதே தவிர ஒன்றேனும் குறையவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தை விடவும் முஸ்லிம் சமூகம் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதுவரை எங்குமே நீதி நிலைநாட்டப்பட்டதாகவும் அறிய முடியவில்லை. நீதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் முஸ்லிம்கள் மீதான செயற்பாடுகளை மிகச் சிறிய சம்பவங்களாக கூறியுள்ளனர்.

நான்கு பொலிஸ் குழுக்கள் அமைத்து தேடிய ஞானசார தேரர் மிக இலகுவாக நீதி மன்றம் சென்று பிணை எடுத்து சென்றுள்ளார். இந்த பிணை எடுப்பதற்கு நீதித் தாயின் கண்கள் எவ்வாறெல்லாம் கட்டப்பட வேண்டுமோ அத்தனை வழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படியான அரசானது நீதியை நிலை நாட்டும் என எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் ஹக்கீம் கூறியிருப்பதானது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றாகும்.

அமைச்சர் ஹக்கீமுக்கு இவ்வாட்சி நீதியை நிலை நாட்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் அந்த எதிர்பார்ப்பை வழங்கிய ஒரு விடயத்தையாவது அமைச்சர் ஹக்கீம் முன் வைப்பாரா? எங்களால்  இவ்வாட்சி நீதியை நிலை நாட்டாது என்பதற்கு பல ஆயிரம் ஆதாரங்களை எடுத்துரைக்க முடியும்.

அமைச்சர் ஹக்கீம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை இகழ்ந்தும் தற்போதைய அரசை புகழ்ந்திருப்பதானது, முஸ்லிம் மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை தொடர்ந்தும் வில்லனாக காட்டி இவ்வரசை பாதுகாக்க முனைவதை எடுத்து காட்டுகிறது. இதனை பார்க்கின்ற போது தற்போதைய அரசை காப்பாற்ற அமைச்சர் ஹக்கீமுக்கு ஏதேனும் கொந்தராத்து வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமே எழுகிறது.


வை.எல்.எஸ் ஹமீதின் பதில் கட்டுரை – 01 மீதான விமர்சனம்

குற்றச் சாட்டு – 01

எல்லா அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வ ஒரு ஊடக குழு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக பெருந்தொகையான இலட்சக் கணக்கில் சம்பளம் கொடுத்து வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

பதில்

ஒரு அமைச்சருக்கு அரசாங்கத்தால் ஒரு ஊடக குழு வழங்கப்படும். அவர்கள் நேரம், காலம் பார்த்தே வேலை செய்வார்கள். இன்னும் சொல்லப்போனால் வீடியோவும், புகைப்படம் எடுப்பதையுமே அவர்களது தொழிலாக கருதுவர். அவர்களை வைத்துக்கொண்டு ஒரு அமைச்சின் ஊடகப் பிரிவு செயலாற்ற முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை.  இது அமைச்சர் றிஷாத் மாத்திரம் செய்கின்ற வேலையுமல்ல. தற்போது அமைச்சர் றிஷாத் ஒரு கட்சியின் தலைவராக இருப்பதால் அரசு வழங்கும் ஊடக செயற்பாட்டாளர்களுக்கு மேலதிகமான ஊடக செயற்பாட்டாளர்களின் தேவை உள்ளமை மறுதலிக்க முடியாத உண்மை. இச் சிறு விடயத்தை கூட புரிந்து கொள்ள முடியாமல் வை.எல்.எஸ் ஹமீத் விமர்சித்திருப்பதானது அவரது சிறு பிள்ளைத் தனமான பேச்சை காட்டுக்கிறது.

இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அமைச்சர் றிஷாதுக்கு சார்பாக பேசுவோர் அனைவரையும் அவர் பணம் கொடுத்தே பேச வைக்கின்றார் என்ற விடயம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். இன்று சமூக வலைத்தளங்களில் அமைச்சர் றிஷாதுக்கு சார்பாக பேசுவோருக்கு எல்லாம் பணம் வழங்குவதானால் மாதமொன்றுக்கு கோடிக்கணக்கில் பணம் தேவை. அது ஒரு அமைச்சருக்கு சாத்தியமற்ற விடயம். வை.எல்.எஸ் ஹமீத் தனது இக் கூற்றினூடாக தனக்கு மிகப் பெரும் எதிர்ப்புக்களை மக்கள் சமூக வலைத்தளங்களில் ஊடாக வழங்கியதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார். இதனை எதிர்ப்பாக வெளிக்காட்டினால் தனது மரியாதை போய் விடும் என்பதால் அவர்களை கூலியாட்களாக சித்தரித்து மக்களை வேறு பக்கம் திசை திருப்ப முயல்கிறார்.

அமைச்சர் றிஷாதுக்கென்று ஒரு கட்சி உள்ளது. அவரோடு நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அமைச்சர் றிஷாத் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக அமைச்சராக இருப்பதால் பலருக்கு சேவையாற்றி இருப்பார். இவைகளின்  காரணமாக அவரை யாராவது இகழ்ந்தால் அவரை நோக்கி சொல் அம்புகள் வருவது தவிர்க்க முடியாத விடயமாகும். அச் சொல் அம்புகளை எதிர்கொள்ளுமளவு வா.எல்.எஸ் ஹமீதுக்கு மக்கள் ஆதரவு இருந்தால் அவைகள் பெரிதாக தெரியாது. தற்போது வை.எல்.எஸ் ஹமீதை மக்கள் ஆதரிக்காததன் காரணமாக வை.எல்.எஸ் ஹமீதை நோக்கி வரும் அம்புகள் வை.எல்.எஸ் நேரடியாக தாக்குவதால் இவ்வாறான சிந்தனைகள் எழுவது தவிர்க்க முடியாததும் கூட. “அதனால் தான் இப்படியோ” என சிந்திப்பது  தான் மனித சிந்தனையும் கூட.

அமைச்சர் றிஷாத் சமூக வலைத்தளங்களில் எழுதுபவர்களுக்கு எல்லாம் பணம் வழங்குகின்றார் என்றால் அதனை வை.எல்.எஸ் ஹமீத் ஆதாரங்களோடு நிரூபிப்பாரா? பெருந்தொகை பணம் என்றால் அது எவ்வளவு? யாருக்கு? வை.எல்.எஸ் ஹமீதுக்கு தெரிந்தால் ஏன் இத்தனை தயக்கம்? இத்தனை காலமும் அமைச்சர் றிஷாதின் கோட்டைக்குள் உறங்கியவருக்கு இது ஒன்றும் பெரிய விடயமுமல்ல. அவ்வாறு எதனையும் நிரூபணம் செய்யாது தண்ணீரில் எழுதி விளையாடுவதன் மர்மம் என்ன?

குற்றச் சாட்டு – 02

அமைச்சர் றிஷாத் அணியினர் தான் தேசியப்பட்டியல் கிடைக்காமையால் தான் இவ்வாறு கூவித் திரிவதாக எவ்வாறு கூற முடியும்?

பதில்

வை.எல்.எஸ் ஹமீதுக்கும் அமைச்சர் றிஷாதுக்கும் இடையில் உள்ள பிரச்சினை தேசியப்பட்டியல் பிரச்சினை என்பதில் எவ்வித சிறு சந்தேகமுமில்லை. இதனை பல விடயங்களை கொண்டு நிறுவல்களை அமைக்கலாம். இன்று  வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதை விமர்சித்து கொண்டிருக்கும் அனைத்து விடயங்களும் இன்று நேற்று நடந்தவையல்ல. அவர் கட்சியில் இருக்கும் போது நடந்தவைகளே. அக் காலத்தில் இது தொடர்பில் அவர் எங்கும் பேசியதாக இல்லை. இன்னும் சொல்லப் போனால் இன்று ரங்காவுடன் இணைந்து அமைச்சர் றிஷாதை விமர்சித்து கொண்டிருக்கும் வை.எல்.எஸ் ஹமீத் அன்று ரங்கா ஏன் அமைச்சர் றிஷாதை விமர்சிக்கின்றார் என்பதற்கு நியாயம் கற்பித்தவர். இவ்வாறானவர் திடீர் என அமைச்சர் றிஷாதை விமர்சித்தால் அதன் நோக்கம் வேறு எதுவாக இருக்க முடியும்.

அமைச்சர் றிஷாத் வை.எல்.எஸ் ஹமீத் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் மிக நிதானமான கருத்தையே கூறி வந்தார். இல்லை.. இல்லை..  அவர் என்னை இப்படியெல்லாம் கடுமையாக விமர்சித்தார் என வை.எல்.எஸ் ஹமீதால் ஒன்றையேனும் காட்ட முடியாது. வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாத் மீது முன் வைப்பதெல்லாம் போலி முகநூல்களில் வெளியாகிய செய்திகளைத் தான். போலி முகநூல் செய்திகள் ஆயிரம் வரும். அதற்கெல்லாம் அமைச்சர் றிஷாதை குற்றம் சுமத்த முடியுமா? வை.எல்.எஸ் குற்றம் சுமத்தும் குறித்த முக நூல் பதிவுகள் கூட இவர்கள் இருவருக்குமிடையில் பிரச்சினைகள் தோன்றிய ஆரம்ப காலத்தில் தான் பதவிடப்பட்டிருந்தன. அதன் பிறகு அமைச்சர் றிஷாத் அணியினர் வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதை இகழ்ந்த போதே தாக்க தொடங்கினர். இன்றைய பதிவில் வை.எல்.எஸ் ஹமீத் நாகரீகம் பற்றி பதிவிட்டிருந்தார். யாரோ விமர்சித்தமைக்காக அமைச்சர் றிஷாதின் தனிப்பட்ட விடயங்களை கூட விமர்சித்த வை.எல்.எஸ் ஹமீத் நாகரீகம் பற்றிப் பேச எந்த தகுதியுமற்றவர். எனவே, இன்று இவர்களுக்கு இடையிலான பிரச்சினையில் அநாகரிகமாக நடந்து கொண்டவர் வை.எல்.எஸ் ஹமீத் தான்.

குற்றச் சாட்டு - 03

முசலி மக்களின் காணி மீட்புக்கு அமைச்சர் றிஷாத் என்ன செய்தார்?

பதில்

இலங்கை நாடே உண்மைகளை அறியும் வண்ணம் பகிரங்க விவாத நிகழ்வுகளில் கலந்து கொண்டு விளங்கப்படுத்தினார். இது ஜனாதிபதியையும் சென்றடைந்திருக்கும் பிரதமரையும் சென்றடைந்திருக்கும்.இதுவே இதற்கு போதுமான பதிலாக கருதுகிறேன்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்களுக்கு..
மக்கள் உங்களைப்பற்றிப் புரிந்து விட்டார்கள். ஆனால், நீங்கள்தான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் இருக்கும் போது உல்லாசமாக வாழ்ந்து அனுபவித்த பரிதாபத்திற்குரிய சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்களுக்கு இன்று இருப்புக் கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதையே அவரின் கற்பனையான எழுத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றது.
சகோதரர் வை எல் எஸ் ஹமீட் தனது எழுத்தில் அரசியல் பற்றி பேசுகின்றார், மார்க்கம்பற்றி பேசுகின்றார். ஏன் நீதி, நியாயம் என்றெல்லாம் தற்போது பேசத் தொடங்கியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தல் நடந்து தேசியப்பட்டியல் நியமனம் வழங்கும் வரை சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்களுக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் சரியாகவே இருந்தது.
தேசியப்பட்டியல் நியமனத்திற்குப் பிறகு அமைச்சரின் செயல்பாடுகளை வித்தியாசமாகப் சகோதரர் வை எல் எஸ் ஹமீட் பார்ப்பதை மனிதனாகப் படைக்கப்பட்ட ஆறு அறிவுடைய சகலருக்கும் புரியாமல் இருக்க முடியாது.
மர்ஹும் அஷ்ரப் காலத்தில் அன்னாருக்கு செயலாளராக இருந்து செயல்பட்ட போது இந்த  சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்கள் ஒரு வித்தியாசமான மனிதராகத்தான் செயல்பட்டார் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த விடயம்.
இவர் சாய்ந்தமருதை சேர்ந்த ஒருவரை மனைவியாகக் கொண்டிருந்த போதும் பொதுவாகச் சிந்திக்காமல் சாய்ந்தமருது மக்களுக்கு விரோதமாக சாய்ந்தமருதின் எல்லையை மாற்றி அமைப்பதற்கு பாடுபட்டு துரோகம் செய்ததை சாய்ந்தமருது மக்கள் எளிதில் மறந்துவிடப்போவதில்லை.
இப்படிப்பட்டவர் தேசியப்பட்டியலில் எம்.பியாக நியமனம் செய்யப்பட்டிருப்பின் என்ன நடந்திருக்கும் என்பதை சாய்ந்தமருது மக்கள் சிந்தித்துப் பார்க்கிறார்கள். உண்மையில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட நல்ல ஒரு முடிவுதான் தேசியப் பட்டியல் இவருக்கு வழங்கப்படாமையாகும் என அச்சந்தர்ப்பத்தில் மக்கள் பேசிக்கொண்டதை மறக்கமுடியாது.
பதவிகள் இருக்கும்போது ஒரு நிலை பதவிகள் இல்லாத போது வேறு ஒரு நிலை என்ற நிலையில் வாழ்ந்து செயலாற்றும் ஒரு வித்தியாசமான மனிதராகத்தான். சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்கள் செயல்பட்டவர்.
சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்கள் கூறுவது போல் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு ஆதரவாக முகநூலில் எழுதுபவர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள் என நினைப்பது எவ்வளவு கீழ்த்தரமான நினைப்பாகும்.
இன்று இளைஞர்கள் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். இவர்களில் மக்களுக்காக கடுமையாகப் பாடுபடுபவர் யார்? வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கு வெளிநாட்டில் தனவந்தர்களைத் தேடுவதும் அதற்கு உதவுவதும் யார்? முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது அந்த இடத்திற்கு நேரடியாக விரைந்து செல்பவர் யார்? ரமழான் மாதங்களில் ஏழைகளுக்கு உதவுவது யார்? தொழுகைக்கான பள்ளிகளுக்கு உதவுவது யார்? பாராளுமன்றத்தில் அச்சமில்லாமல் விடயத்தை நேரடியாக எடுத்து வைத்து பேசுபவர் யார்? எனபதை எமது இளைஞர்கள் காண்கிறார்கள். இப்படியாக உதவும் மனிதனாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களை இளைஞர்கள் காண்கிறார்கள். அவருக்கு ஆதரவாக அதிகம் அதிகம் எழுதுகிறார்கள்.
சகோதரர் வை எல் எஸ் ஹமீட் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் தற்போது தெரிவித்துக் கொண்டிருப்பது தங்களின் நெடு நாளைய ஆசை ஒன்று நிறைவேறாத நிலையில் சுயநலத்தின் வெளிப்பாடாகத்தான் தங்களின் முகநூலில் பதிவுகளை இடுவதும் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் என்பது மக்களுக்கு நன்கு புரியும்.
சக்தியில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சியில் மக்கள் செல்வாக்கில்லாத உங்களைப் போன்றவர்களை அழைத்து அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு எதிராக வசைபாட வைக்கிறார் என்பது மக்களுக்கு புரியாமலில்லை. நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு வருகிறீர்கள் என்றாலே மக்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக, மக்கள் செல்வாக்குள்ள மர்ஹும் அஷ்ரப் அவர்களோடு இருந்து மக்களின் நல்ல அபிப்பிராயத்தைப் பெறாத நீங்கள் தற்போது மக்களோடு மக்களாக இருந்து செயல்படும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களோடு உங்களால் ஒரு போதும் மானிடத் தன்மையுடன் செயலாற்ற முடியாது என்பதுதான் உண்மை. அதுதான் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கட்சியிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களைப் பிரித்துள்ளான் என நம்புகின்றோம்.
விடயம் உள்ளவன் அதிகம் பேசமாட்டான் ஆனால், நீங்கள் அதிகம் அதிமாகப் பேசுகின்றீர்கள். மக்கள் உங்களைப்பற்றிப் புரிந்து விட்டார்கள். ஆனால், நீங்கள்தான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை.

அல்ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்
சாய்ந்தமருது


Wednesday, June 28, 2017

அமைச்சர் ஹக்கீமுக்கு நல்லாட்சியில் நீதி நிலை நாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம். எனக்கில்லை.. உங்களுக்கு உள்ளதா?

அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் இவ்வரசாங்கத்தின் நீதியின் மீது அவருக்கு நம்பிக்கையுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது பெருநாள் வாழ்த்து செய்தியில்

“ இவ்வாறான சூழ்நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் போலல்லாது, நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நீதியும், நியாயமும் நிலைநாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பில் அல்லாஹ்வின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில் இந் நாட்டு முஸ்லிம்களாகிய நாங்கள் இக்கட்டான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்” என குறிப்பிட்டிருந்தார்.

மிக அண்மையில் ஞானசார தேரர் நீதி மன்றம் சென்று அவருக்கு பிணை வழங்கிய விடயமானது இவ்வாட்சியின் நீதித்துறை மீதுள்ள நம்பிக்கையை பூரணமாக இல்லாமளாக்கியுள்ளது. இல்லை.. இல்லை.. அதில் நீதித் துறையானது நீதியைத் தான் நிலை நாட்டியுள்ளதென அமைச்சர் ஹக்கீமால் கூற முடியுமா?

பிணை வழங்க வேண்டுமென்றே செயற்பட்ட நீதித் துறை மீது நீதியை நிலை நாட்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக, எவ்வாறு அமைச்சர் ஹக்கீமால் கூற முடியும்?

குறித்த வாழ்த்து செய்தியில் முஸ்லிம்கள் இக்கட்டான சூழ் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவராகவே ஏற்றுக்கொள்கிறார். கடந்த ஆட்சி காலத்தை போலல்லாது இவ்வாட்சியானது  நீதியை நிலை நாட்டும் என்ற நம்பிக்கை இருந்தால் ஏன் இந்த இக்கட்டான சூழ் நிலை? ஏன் இந்த முன்னுக்கு பின் முரணான கருத்து?

இந்த வாழ்த்து செய்தியில் கடந்த அரசாங்கத்தை போலல்லாது இவ்வாட்சியின் கீழ் நீதி நிலைநாட்டப்படும் என்ற எதிர்ப்பார்ப்பை அமைச்சர் ஹக்கீமுக்கு வழங்கிய ஒரு விடயத்தையாவது கூற முடியுமா? அமைச்சர் றிஷாத் இவ்வரசை படு மோசமாக விமர்சிக்கின்றார். அப்படி இருந்தும் அது போதாதென்று அவர் மீது சில சொல் அம்புகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு சொல் அம்புகளை வீசுபவர்களின் கண்களுக்கு இது புலப்படத்தான் மர்மம் என்ன?

இந்த விடயமானது அமைச்சர் ஹக்கீம் இவ்வாட்சியாளர்களின் கால்களில் விழுந்து கிடக்கின்றார் என்ற விடயத்தை தெளிவாக்குகின்றது. இவைகளை கண்டும் எமது முஸ்லிம் சமூகம் அமைச்சர் ஹக்கீமின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளவில்லையென்றால் அவர்களை போன்ற ஏமாளிகள் யாருமே இருக்க முடியாது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Tuesday, June 27, 2017

அமைச்சர் றிஷாதின் பாராளுமன்ற குரல் கொடுப்புக்களும் அரசுக்கு எதிரான பேச்சுக்களும் சாதாரணமானவையா?

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதின் அண்மைக் கால பேச்சுக்களை மட்டம் தட்டும் வகையில் தனது பதிவொன்றை பதிவேற்றியுள்ளதை அவதானிக்க முடிந்தது. அப் பதிவின் ஆரம்பத்தில் நோன்பு காலம் என்பதால் அரசியல் பதிவுகளை தவிர்க்க முயற்சித்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான தாக்கம் அவரது கட்டுப்பாட்டையும் மீற வைத்துள்ளதாக கூறி தனது பதிவை ஆரம்பம் செய்கிறார்.
 

நோன்பு காலத்தில் அரசியல் கதைக்க கூடாது என்ற எந்த கட்டுப்பாடுகளும் இஸ்லாத்தில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அரசியல் இஸ்லாத்தின் ஒரு பகுதியாகும். ஏனைய மார்க்கங்களை விட இஸ்லாத்துக்குள்ள சிறப்பு எந்த விடயமாக இருந்தாலும் உளத் தூய்மையோடு செயல்பட்டால்  அதனூடாக  நன்மையை பெற்றுக்கொள்ள முடியும். உளத் தூய்மை அற்ற செயற்பாடுகளே பாவத்தின் பால் வழி காட்டும். வை.எல்.எஸ் ஹமீத் குறித்த தனது கருத்தின் ஊடாக அவருக்கு இஸ்லாம் பற்றிய போதிய புரிதல் இல்லாமல் இருக்க வேண்டும் அல்லது நோன்பு காலத்தில் மனச் சாட்சிக்கு விரோதமான செயற்பாடுகளை செய்து பாவம் சம்பாதிக்க கூடாது என்ற நோக்கம் இருக்க வேண்டும். இவ்விரண்டில் அவர் எதனை ஏற்றுக்கொண்டாலும் அது அவருக்கு இழிவையே கொண்டு சேர்க்கும்.

அவர் முன் வைத்துள்ள குற்றச் சாட்டுக்களை பகுதி பகுதியாக பிரித்து எனது விமர்சனத்தை முன் வைக்கலாம்  என நினைக்கின்றேன். அவரது குற்றச் சாட்டில் எங்கும் அமைச்சர் ரிஷாத்தின் பெயர் குறிப்பிடப்படாதிருப்பினும் இப் பதிவு அவரை நோக்கியது என்பதை சிறு பிள்ளையும் அறியும் என்பதால் அமைச்சர் றிஷாதை நேரடியாக அவர் குறிப்பிட்டார் என கருதி எனது அவரது வினாக்களை அமைச்சர் றிஷாதை நோக்கியதாக அமைத்துள்ளேன். ஒரு நிகழ்வில் ஒரு அமைச்சர் இப்படி பேசினார் என அவரது பெயரை மறைத்து விமர்சனம் செய்வதானால் அவரது குறித்த கருத்து மாத்திரமே விமர்சிக்கப்படல் வேண்டும். அவர் பற்றிய வேறு விடயங்களை விமர்சிப்பதானால் அவர் பெயர் வெளியிடப்பாடல் வேண்டும். ஏனெனில், குறித்த பதிவை அரசியல் தொடர்புடையவர்கள், இவர் தான் என அடையாளம் கண்டு கொண்டாலும் அரசியலுடன் மிகவும் நெருங்கிய தொடர்பற்றவர்கள் யாரை விமர்சிக்கின்றார் என அறிய மாட்டார்கள். வை.எல்.எஸ் ஹமீத் குறித்த விடயத்தையும் கவனத்தில் எடுப்பது சிறப்பாக இருக்கும்.

குற்றச் சாட்டு – 01

அரசின் பங்காளியாக இருக்கின்ற அமைச்சர் றிஷாத் ஏன் ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டது தொடர்பாக கடுமையாக அரசை சாட வேண்டும்?

பதில்:

பதில் வழங்க முன்பு வை.எல்.எஸ் ஹமீத் இங்கு பயன்படுத்தியுள்ள வார்த்தை பிரயோகம் மிகவும் கவனம் செலுத்தக் கூடியது. இங்கு அமைச்சர் றிஷாத் கடுமையாக அரசை  சாடுவதாக  வை.எல்.எஸ் ஹமீத் குறிப்பிடுகிறார். கடுமையாக எனும் வார்த்தை பிரயோகமானது அமைச்சர் றிஷாதின் அண்மைக் கால பேச்சுக்கள் வை.எல்.எஸ் ஹமீதினதும்  உள்ளத்தை தொட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது. அல்லாது போனால் அரசை சாடிப் பேசியுள்ளார் என சாதாரண ஒரு விடயமாக அவர் கூறியிருக்கலாம். அமைச்சர் றிஷாதின் அண்மைக் கால பேச்சுக்கள் முஸ்லிம் மக்களிடையே மிகவும் பலமான பேசு பொருளாகவும் அவரது செல்வாக்கை உயர்த்தும் ஒன்றாகவும்  மாறியுள்ளதால் அந்த செல்வாக்கை தனது இவ்வினவினூடாக உடைக்க முயல்கிறார் என்ற விடயமே இதனூடாக தெளிவாகிறது.

இப்போது விடயத்துக்குள் நுழைவோம். இன்றைய சூழ் நிலையில் தற்போதைய அரசுக்கு முஸ்லிம்களின் வாக்குகளே பிரதானமானதாகும். அமைச்சர் றிஷாத் இவ்வாறு பேசும் போது முஸ்லிம்களின் எதிர்ப்பலைகள் இவ்வரசின் மீது அதிகரிக்க தொடங்கும். மிக விரைவில் தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அமைச்சர் றிஷாதின் இவ்வாறான பேச்சுக்கள் அரசின்  தொடர்ச்சியான இருப்புக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். அமைச்சர் றிஷாத் இவ்வாட்சியாளர்களால் புறக்கணிக்கப்படுவார். இன்றைய நிலையில் அமைச்சர் றிஷாத் தேசிய கட்சிகளுடன் இணைந்து கொண்டு செல்வதே அவரது வளர்ச்சிப் படிகளுக்கு உகந்தது. அவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாதே அமைச்சர் றிஷாத் பேசிக்கொண்டிருக்கின்றார். அமைச்சர் றிஷாத் இவ்வரசை சாடிப் பேசுவதன் மூலம் ஏற்படக் கூடிய விளைவுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

அமைச்சர் றிஷாத் அரசின் பங்காளியாக இருந்து கொண்டு இதனை  கூறலாமா என்ற பகுதியானது ஆழமான சிந்திக்க வேண்டிய ஒரு பகுதியாகும். எப்படியானாலும் அரிசானால் சரி. அரசியல் பல வகைப்படும். உடன்பாட்டு அரசியல்,முரண்பாட்டு அரசியல், ஒப்பந்த அரசியல் என அவற்றை பிரிக்கலாம். இதில் இன்று அமைச்சர் றிஷாத் கடைப்பிடித்து கொண்டிருப்பது முரண்பாட்டு அரசியல் பாணியாகும் (வை.எல்.எஸ் ஹமீத் , அமைச்சர் றிஷாத் அரசை கடுமையாக சாடுகிறார் என கூறுவதன் மூலம் இதனை  ). இந்த முரண்பாட்டு அரசியல் பாணியை எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்போரே அதிகம் செய்வர். ஆனால்,அது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தே செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆளும் கட்சியிலும் இருந்தும் செய்யலாம். ஆளும் கட்சிக்குள் அவர்களது பதவிகளில் இருந்து கொண்டு முரண்பாட்டு அரசியல் பாணியை கடைப்பிடிக்க அலாதித் துணிவு வேண்டும். அது பலருக்கு இருப்பதில்லை.

அமைச்சர் றிஷாத் மாத்திரம் எதிர்க்கட்சியில் அமர்வதால் எதனையும் அவரால் சாதிக்க முடியாது. அவர் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசை விமர்சிப்பார். எதிர்க்கட்சி என்றாலே அரசை விமர்சிப்பது அதன் பண்பு. ஆளும் கட்சியில் இருந்து கொண்டு ஒருவர் அரசி விமர்சிப்பாராக இருந்தால் அவர் எதிர்க்கட்சியில் இருந்து என்ன செய்வாரோ அதனையும் செய்கிறார் அதன் பலா பலன்களையும் அனுபவிக்கின்றார். மேலும், ஆளும் கட்சியில் இருந்தவாறு ஆளும் கட்சியை விமர்சிக்கும் போது அவ் விமர்சனம் உண்மை வடிவம் பெறும். இப்பகுதியை இன்னும் நீளமாக அழுத்தலாம் இருந்தாலும் இத்தோடு நிறுத்துகிறேன்.

எனது வினா?

அளுத்கமை கலவரம் இடம்பெற்ற போது வை.எல்.எஸ் ஹமீத், அமைச்சர் றிஷாதுடனேயே இருந்தார். அப்போது வை.எல்.எஸ் ஹமீத், அமைச்சர் றிஷாத் இவ்வரசை விட்டு வெளியேற வேண்டும் என்ற ஒரு அறிக்கையாவது விட்டாரா என்பதாகும்.

குற்றச் சாட்டு – 02

பொது மக்களும் அரசுக்குத் தான் ஏசுகிறார்கள். இவர்களும் பொது மக்களிடம் வந்து அரசுக்கு ஏசுவதானால் எதற்கு பொது மக்கள் இவர்களை தெரிவு செய்தார்கள்?

பதில்

அமைச்சர் றிஷாத் பொது மக்களிடம் மாத்திரம் இவ்வரசை விமர்சிக்கவில்லை. பாராளுமன்றத்துக்குள் பொது பல சேனாவின் செயலாளரை கைது செய்ததை நாடகம் என்று பகிரங்கமாகவே கூறியிருந்தார். ஒரு பொது மகன் கதைக்கும் விடயங்கள் இவ்வரசின் ஆட்சியாளர்களை சென்றடைவதில்லை.  அதே நேரம் மக்கள் அங்கீகாரம் பெற்ற ஒரு அரசியல் வாதி கதைக்கும் போது அது மிக விரைவாக இவ்வாட்சியாலர்களை சென்றடையும். அதுவே சாதாரண பொது மகன் அரசுக்கு ஏசுவதற்கும் ஒரு மக்கள் அங்கீகாரம் பெற்ற அரசியல் வாதி மக்களிடம் வந்து அரசை விமர்சிப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடாகும்.

இவ்வரசை இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து அமைத்திருப்பதால் அமைச்சர் றிஷாத் வெறும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. அதே நேரம் பொது மக்களிடம் சென்று அரசை விமர்சிக்கும் போது பொது மக்கள் அரசின் மீது தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டுவர். இன்றைய ஆட்சியாளர்களின் வெற்றிக்கு முஸ்லிம்களின் வாக்கே பிரதானமானதாகும். இதன் காரணமாக அமைச்சர் றிஷாத் எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதை  இவ்வாறான பிரச்சாரமே இப் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதில் அதிகம் தாக்கம் செலுத்தும்.

குற்றச் சாற்று – 03

22 இலட்சம் முஸ்லிம்களையும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கும் அமைச்சர் றிஷாத் இப்போது அரசாங்கத்தில் இல்லையா? அவரது முட்டில் அரசாங்கம் தங்கியிருக்கவில்லையா? அடுத்த தேர்தலில் அவருக்கு அனைவரும் வாக்களித்து முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வோமா?

பதில்

இங்கு தான் வை.எல்.எஸ் ஹமீத் தனது புரிதலின் பற்றாக்குறையை வெளிப்படுத்துகிறார். அமைச்சர் றிஷாத் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைக்கின்றாரே தவிர தனது தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைக்கவில்லை. இதனை வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு நினைத்தால் அது அவருடைய தவறாகும்.

அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாத் முஸ்லிம்களையும் முஸ்லிம் தலைவர்களையும் ஒன்றுபடுமாறு அழைத்தே வருகிறார். அமைச்சர் ஹக்கீமையும் அழைத்து அது பாரிய பேசு பொருளாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் விடயமானது அவர் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபடுமாறு அழைத்த  இந்த அழைப்பு முஸ்லிம்களுக்கான பொதுவான அழைப்பாகவே பார்க்க வேண்டும் என்பதை கூறிச் செல்கிறது.

தற்போதைய அரசானது இரு பெரும் தேசிய கட்சிகள் இணைத்து ஆட்சியமைத்துள்ளது. 19ம் அரசியல் அமைப்பு சீர் திருத்தம் மூன்றில் இரண்டு பெரும் பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை உட்பட பல விடயங்கள் இவ்வரசு கொண்டுள்ள பாராளுமன்ற பலத்தின் சான்றாகும். அமைச்சர் றிஷாதின் கட்சியில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதனை வைத்துக் கொண்டு அவரால் எதுவுமே செய்ய முடியாது. இல்லை.. இல்லை.. அவரால் இவ் எண்ணிகையை வைத்துக் கொண்டு ஆட்சியை அசைக்க முடியும் என்றால் அது எவ்வாறேன வை.எல்.எஸ் ஹமீத் சற்று தெளிவு படுத்த வேண்டும்.

அமைச்சர் றிஷாத் கூறியது போன்று அனைவரும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இணைந்தால் இவ்வரசை ஓரளவு அசைத்து பார்க்கலாம் என்பதே உண்மையாகும்.  இன்று அமைச்சர் றிஷாத் மாத்திரமல்ல இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசியல் வாதிகளையும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுவதையே விரும்புகின்றனர். இல்லையென வை.எல்.எஸ் ஹமீத் மறுப்பாரா? அதனைத் தானே அமைச்சர் றிஷாதும் கூறினார்? இலங்கை முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் பிரிந்து நிற்பதும் இன்று முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியாமைக்கான பிரதான காரணமாகும்.

குற்றச் சாட்டு – 04

இன்று பெரும்பான்மையில்லாமல் முஸ்லிம்களின் முட்டில் தங்கியிருக்கின்ற அரசு இவர்களை கால் தூசிக்கும் கணக்கெடுக்க தயாராக இல்லை.

பதில்

இவ்வரசு தனது பெரும்பான்மை பலத்தை மிக அதிகமாக நிரூபித்தே வருகிறது. அதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை எனலாம். தற்போதைய அரசுக்கு முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்காமல் போனால் பெரும்பான்மை கிடைக்காது என்பதை வை.எல்.எஸ் ஹமீத் புள்ளி விபரங்களோடு வெளிப்படுத்துவாரா?

இங்கு வை.எல்.எஸ் ஹமீத் தனது பதிலை அமைச்சர் றிஷாதின் கட்சியின் கீழ் உள்ள ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றே  நிறுவ வேண்டும். ஏனெனில், அவர் அமைச்சர் றிஷாத் அனைவரையும் ஒன்றுபடுமாறு அழைத்ததையும் விமர்சித்துவிட்டாரல்லவா?

குற்றச் சாட்டு – 05

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மரைக்கார் ,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தது முடிவெடுக்க வேண்டும் என்று அவருக்கு இருந்த உணர்வு கூட அமைச்சர் றிஷாதுக்கில்லையா?

பதில்

அமைச்சர் றிஷாத் கூறியது போன்று அனைவரும் ஒன்றிணைந்தால் தானே அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க முடியும். அனைவரும் ஒன்றிணையாமல் முடிவெடுக்க முடியுமா?  பா.உ உறுப்பினர் மரைக்கார் அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறியதை விட அமைச்சர் றிஷாத் அரசை விமர்சிப்பதே கணமிக்கது. பாராளுமன்ற உறுப்பினர் மரைக்கார் அவ்வாறு கூறியதால் இது வரை எதுவும் நடந்த பாடில்லை. அதனை அனைவரும் ஏற்க மாட்டார்கள் என்பதால் அது  சாத்தியமற்ற விடயம் என்பது யாவரும் அறிந்ததே. இங்கு பா.உ மரைக்கார் அனைவரையும் ஒன்று கூட்டி முடிவெடுக்க தேவையில்லை. அவரது முடிவை அனைவருக்கும் முன் மாதிரி ஆக்கலாமே?

அமைச்சர் றிஷாத் அரசை கடுமையாக விமர்சிக்கும் போது அது மக்களின் மன மாற்றத்துக்கு  காரணமாக அமையும். ஏனைய அரசியல் வாதிகளுக்கு அழுத்தம் ஏற்படும். மரைக்காரின் இவ்வாறான வாய் பேச்சை விட அது கனமானது என்பதில் மறு கருத்தில்லை. இருப்பினும் மரைக்காரின் அப் பேச்சானது அரசின் மீதான வெறுப்பை வெளிக்காட்டுவதால் அவரை பாராட்டாமலும் இருக்க முடியாது. அணியும் கண்ணாடியில் தான் விமர்சனப் பாதை அமைந்திருக்கும்.

அமைச்சர் றிஷாத் இதனையாவது செய்கிறார். ஏனைய அரசியல் வாதிகள் இன்னும் அரசுக்கு கூஜா தூக்கும் வேலையை தானே செய்கிறார்கள். அது ஏன் வை.எல்.எஸ் ஹமீதின் கண்களுக்கு தெரியவில்லை. இவ்வாறான குரல் கொடுப்புக்களை யார் செய்வார்கள் என இலங்கை மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அது இவ்வாறான பேச்சுக்களால் மழுங்கடிக்கப்பட்டு விடும்.

உங்கள் வினாக்களுக்கு பதிலை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இருந்தாலும் அதிக வேலை காரணமாக “நல்லது செய்வதை பாராட்டுங்கள். அதனை மழுங்கடிக்கச் செய்ய வேண்டாம்”  என்ற கோரிக்கையோடு நிறைவு செய்கிறேன்.

துறையூர் ஏ.கே. மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை

Thursday, June 15, 2017

பொய்யர் காங்கிரஸினால் நாளை நக்குன்னிகளுக்கா இப்தார் நிகழ்வு ...? 

அகிலம் எல்லாம் படைத்து பரிபாலிக்கின்ற வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனுக்கு பயந்தவனாய்  எனது உணர்வுகளை இறைவனுக்கு சாட்டி  எனது பேனா முனையை நான்வைத்த நோன்பாடு சுளற்றுகின்றேன்.

பொய்யும் ஏமாற்றுதல் எத்தனை காலம் நிலைக்கும் .....?

காலாகாலமாக பொய்யர் காங்கிரஸினால் ஏமாறுகின்ற  கிழக்கில் உள்ள பொய்யர் காங்கிரஸை ஆதரிக்கின்ற மக்கள் அனைவரும் நாளைய இப்தாரை புறக்கணிப்பது மாத்திரமல்லாமல் கறுப்புக்கொடி ஏந்தி இப்தாருக்கு வருகின்ற பொய்யனை விரட்டி அடிக்கவும் வேண்டும்.

முனாபிக்கிக்கு அடயாளம் காட்டுங்கள் என்றால் நான் கூறும் அடயாளம் பொய்யர் காங்கிரஸின் தலைவனைத்தான் கூறுவேன். அந்த அளவுக்கு கிழக்கானை மடயனாக வைத்துக்கொண்டு கிழக்கானுக்கு தேர்தல் காலங்களில் கள்ள வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுகின்ற பொய்யர் காங்கிரஸின் தலைவனை நம்பி நம்பி மக்கள் ஏமாறுவதைவிட தங்கத்தலைவன் பெருந்தலைவர் அஸ்ரப் அவர்களினுடைய அடியொட்டி நடக்கின்ற தங்கமகன் தேசியத் தலைவர் றிஸாட் பதியுதீனை ஆதரிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல்

இறக்காம மாணிக்கமடு சிலை

நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம்

கல்முனை நகர அபிவிருத்தி

சாய்ந்தமருது பிரதேச சபை

மாவடிப்பள்ளி ஜும்மா பள்ளிவாயல்

என்று ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் வழங்கிய வாக்குறுதிகளை இன்னும் ஏறெடுத்தும் பார்க்காமல் ஒவ்வொரு ஊர்களிலும் பித்னாவையும் பொய்யையும் கூறி கூறி மக்களை மடயானாக நினைத்துக்கொண்டு ஏமாற்றி வாக்குப்பிச்சை எடுத்து தானும் தனது குடும்பமும் சுகபோகம் அனுபவிக்கின்ற பொய்யர் காங்கிரஸின் தலைவனை இன்னும் நம்புவதற்கு கிழக்கான் மடயனா என்ற கேள்வி அனைத்து இடங்களிலும் பரவலாக பேசப்படுகின்றது ஒருபுறமிருக்க பாராளுமன்ற ஆசனம் ஒன்றுமே இல்லாமல் கிழக்கிலே சேவை செய்கின்ற தங்கமகன் முஸ்லிம்களின் ஏகோபித்த தலைவன் றிஸாட் பதியுதீனை ஆதரிக்க வேண்டும் என்றும் பரவலாக ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற சுலைமானும், தாஹிரும் , இத்ரீசும், ஆயிஸாவும் பேசுகின்றாள்.

நோன்பு வைத்தவன் அதைத்திறப்பதா முஸ்லிம்களின் பிரட்சினை...?

நீ உன் நாவால் சொன்ன அத்தனை பொய்களையும் மக்கள் மண்றின் முன் போய் மண்ணிப்புக்கேட்டு இந்த றமழான் மாதத்தில் பிரயச்சித்தம் தேடு. இன்னும் இன்னும் உண்பின்னால் ஏமாறுகின்ற மடயனாக கிழக்கானை நினைக்காதே....!

ஈச்சம்பழமும் ஒருமுடர் தன்னீரும் கிழக்கானுக்கு போதும் என்று நினைக்காதே....!

அல்லது அடுத்த தேர்தலுக்கு முன் போய் பொய்கள் 2 சொல்லிவிட்டுப் போனால் போதும் என்று நினைக்காதே ....!

இனி அடுத்த முஸ்லிம்களின் ஆனந்த சங்கரி நீதான் என்பதையும் மறவாதே இறைவன் உன்னை புறந்தள்ளும் நாள் வெகுதூரமில்லை.

₹ புறக்கணிப்போம் ₹ புறம்தள்ளுவோம் ₹ பொய்யர் காங்கிரஸை விரட்டி அடிப்போம் ₹



எஸ். எம். இஹ்ஸான் மாவடிப்பள்ளி

Tuesday, June 13, 2017

பதவிகளை கருத்தில் கொள்ளாது முஸ்லிம்களின் பிரச்சனைகளை சர்வதேசம் கொண்டு செல்லும் றிஷாத்

(ஹபீல் எம்.சுஹைர்)

இன்று அமைச்சர் றிஷாதின் உத்தியோக முக நூல் பக்கத்தில் ஒரு செய்தி பதிவிடப்பட்டிருந்தது

“இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலவரம் குறித்து அமைச்சர் றிஷாத், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்செனிடம் விளக்கமளித்திருந்தார் ”  என்பதே அச் செய்தியாகும்.

இலங்கை அரசு சர்வதேச அழுத்தங்களை எதிர்நோக்கி இருக்கின்ற நிலையில் இலங்கை முஸ்லிம் தலைவர்கள் இவ்வாறான முன்னெடுப்புக்களை செய்வது இலங்கை நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இருந்தாலும் இன்று முஸ்லிம்கள் எதிர்நோக்கி கொண்டிருக்கும் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இதனை செய்யும் முஸ்லிம் அரச தலைவர் இலங்கை ஆட்சியாளர்களின் வெறுப்பை சம்பாதிப்பார் என்பதிலும் ஐயமில்லை. தற்போது அமைச்சர் றிஷாத் இவ்வரசின் அமைச்சுப் பதவியில் இருந்து கொண்டு இவ்வாறான செயற்பாடுகள் தனது பதவிகளுக்கு ஆப்பாக அமைந்து விடும் என நன்கு அறிந்திருந்தும் தைரியமாக முன்னெடுக்கும் அவரது சமூக பற்றை பாராட்டாமல் இருக்க முடியாது.

அமைச்சர் றிஷாத் பதவி பட்டங்களை முதன்மையாக கொண்டிருந்தால் இதனை அவர் பகிரங்கப்படுத்தாமல் இரகசியமாக பாதுகாத்திருக்க முடியும். இதன் மூலம் இவ்வாட்சியாளர்களுக்கு பயப்படும் கோழை நானல்ல என்பதை நிரூபித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பல பக்கங்களை கொண்ட அறிக்கையை 2014ம் ஆண்டு ஹசனலி கட்சி சார்பாக அந் நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளராக இருந்த  நவநீதம் பிள்ளையிடம் ஒப்படைத்திருந்தார்.  இந்த விடயம் இரகசியமாக இருக்கும் என்று நினைத்தே செய்தார். இது பகிரங்கமாக அதனை தான் வழங்கவில்லையென ஹசனலியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் மாட்டிவிட்டு நல்ல பெயர் வாங்கியிருந்தார்.

இதன் மூலம் நான் கூற வருகின்ற விடயமானது அமைச்சர் றிஷாத் இந்த விடயத்தை தனது முக நூல் பக்கத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளதன் மூலம் அன்று அமைச்சர் ஹக்கீம் அதனை செய்தது தானல்ல என மறுத்து நல்ல பெயர் வாங்கி தனது பதவிகளை பாதுக்காத்தது போன்று செய்ய முடியாது என்பதாகும். இவ்விடயமானது அமைச்சர் றிஷாத் பதவி பட்டங்களுக்கு ஆசைப்பட்டவரல்ல என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

இப்படி ஆட்சியாளர்களுக்கு அஞ்சாத ஒரு தலைவரே எமக்கும் தேவையாகும்.


Sunday, June 11, 2017

அம்பாறையில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த அமைச்சர் றிஷாத்

(ஹபீல் எம்.சுஹைர்)

அம்பாறை மாவட்டத்துக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் றிஷாத் செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம் அலை கடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது. இதற்கு முன்பு அமைச்சர் றிஷாத் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட போது காணக்கிடைக்காத பல புதுமுக ஆதரவாளர்கள் இம் முறை கலந்து கொண்டமையே இதிலுள்ள விசேடமாகும்.

அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாதின் துணிவுமிக்க பேச்சுக்கள் பலரை கவர்ந்தமையே புதுமுக ஆதரவர்களின் பிரசன்னத்துக்கு காரணம் என அங்கு வருகை தந்திருந்த புது முக ஆதரவாளர்களிடம் பேசக் கிடைத்த போது அறிந்து கொள்ள முடிந்தது. இதன் பிறகு ஊமைத் தலைவர்களின் கட்சிகளை ஆதரிக்காமல் அஷ்ரப் பாணியில் மிக இளம் வயதில் துணிவுமிக்க அரசியல் பயணம் மேற்கொள்ளும் அமைச்சர் றிஷாத்துடன் அவர்கள் தொடர்ந்து பயணிக்க போவதாக உறுதி மொழி வழங்கினர்.

இவரது இரு நாள் விஜயங்களின் போது ஒன்று கூடிய மக்கள் எண்ணிக்கையானது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆதரவானது பல மடங்கால் அதிகரித்துள்ளதை துல்லியமாக்கியுள்ளது. இதன் பிறகு மு.காவின் ஆதரவாளர்கள் யாருமே நிம்மதியாக தூக்க மாட்டார்கள் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.


Thursday, June 8, 2017

சவூதி நிறுவனம் இலவசமாக வழங்கிய நீர் இணைப்புக்கு இறக்காமம்  முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு பணம் பெற்றதா?

இறக்காம பிரதேச செயலகத்தின் கீழுள்ள முகைதீன் கிராமம் மற்றும் ஜபல் ஆகிய பிரதேச மக்களுக்கான முழுமையான இலவச குடி நீர் இணைப்பை சவூதி அரேபியாவின் நிதாவுல் கைர் நிறுவனம் வழங்கியிருந்தது. இதற்கான நிதியானது அம்பாறை மாவட்ட உலமா சபையின் தலைவர் எஸ்.எச் ஆதம்பாவா மௌலவியினூடாக குறித்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந் நிதி வழங்கலுக்கும் மு.காவுக்குமிடையில்  எந்த தொடர்புமில்லையுமென எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களினூடாக அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்பு செயலாளர் ரகுமத் மன்சூர்  கலந்து கொண்டிருந்தார். இது அரசியல் மயப்படுத்தப்பட்டமை இதிலுள்ள முதற் தவறாகும்.

குறித்த நிகழ்வுகளினூடாக  80 அளவிலானோர் இலவச குடிநீர் இணைப்பை பெற்றிருந்தனர். *இங்கு இலவச குடிநீர் வழங்கப்பட்ட  ஒவ்வொரு குடும்பத்தினரிடையே இருந்தும் தலா 1500 ரூபாய் பணமானது அறவிடப்பட்டுள்ளது.* குறித்த பணத்தை வழங்காவிட்டால் இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்படாது எனவும் அம் மக்களிடம் பகிரங்கமாகவே கூறப்பட்டுள்ளது. அந்த மக்கள் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதால் குறித்த பணத்தை மிகவும் சிரமப்பட்டே வழங்கியுள்ளனர். குறித்த மக்கள் அன்றாடம் உணவு உண்பதற்கே மிகவும் சிரமப்பட்டு வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

*இது தான் இலவச குடிநீர் இணைப்பின் இலட்சணையா?* அன்று குறித்த பணத்தை முழுமையாக பயன்படுத்துமளவு செலவுகள் கூட இடம்பெறவில்லையென குறித்த மக்கள் கூறுவதை அவதானிக்க முடிகிறது. இக் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளராக அறிவிப்பு உட்பட அனைத்து விடயங்களுக்கும் மு,காவின் இறக்காம மத்திய குழுவின் நாமமே போடப்பட்டுள்ளது. யாரோ நீர் வழங்குகிறார்கள். மக்களின் பணம் வசூலிக்கப்பட்டு நிகழ்வு இடம்பெறுகிறது. பெயர் பெறுவது மு.காவினரா? இப் பெயர் பெரளுக்காவது  இந்த சிறு பணத்தை செலவிட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யுமளவாவது மு.காவிடம் பணம் இல்லையா?

வசூலிக்கப்பட்ட பணம் மீள வழங்கப்படுமா?



துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Tuesday, June 6, 2017

அமைச்சர் றிஷாதின் உயிரை பணயம் வைக்கும் துணிவுமிக்க பாராளுமன்ற பேச்சுக்கள்

அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் பேசுகின்ற பேச்சுக்களை அவதானிக்கும் போது அதில் எந்த விதமான ஒழிவு மறைவுகளுமின்றி  அரசை நேரடியாக தாக்கி பேசுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கொண்டு வந்த ஒத்தி வைப்பு பிரேரணையில் உரையாற்றிய அமைச்சர் றிஷாத் குருநாகலில் வைத்து ஞானசார தேரரை கைது செய்வதற்கு பொலீசார் மேற்கொண்ட முயற்சிகள் நாடகம் என நேரடியாகவே கூறி இருந்தார். இன்று ஜெனீவா மனித உரிமைகள் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் றிஷாத் ஞானசார தேரரை கைது செய்ய நான்கு போலிஸ் குழுக்களை நியமித்து அரசு பூச்சாண்டி காட்டுவதாக நேரடியாகவே கூறி இருந்தார்.

இந்த பேச்சுக்கள் பேசுவதற்கு அலாதித் துணிவு வேண்டும். இவ்வரசானது ஞானசார தேரரை கைது செய்ய மேற்கொள்ளும் முயற்சிகள் போலியானது என்பது வெளிப்படையாகவே விளங்குகிறது. இன்று ஆசாத் சாலி ஜனாதிபதி கூறினால் தாங்கள் ஞானசார தேரரை கைது செய்ய தயாராக இருப்பதாக பொலிசார் தன்னிடம் கூறியதாக கூறியுள்ளமை இதனை இன்னும் தெளிவாக்குகிறது. இது தொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகள் யாருமே இப்படி காட்டமான உரையை ஆற்றி இருக்கவில்லை.இரு நாட்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹக்கீம் இனவாத முன்னெடுப்புக்கள் அரசை கவிழ்க்கவே என அரசுக்கு  சார்பான அறிக்கையையே விட்டிருந்தார்.

இப்படியான பேச்சுக்களை அமைச்சர் றிஷாத் தொடர்வாராக இருந்தால் ஆளும் அரசின் இரு தேசிய கட்சிகளின் அதிக எதிர்ப்பை பெறுவார். அமைச்சர் றிஷாத் இவ்வாறு பேசி ஆளும் ஆட்சியாளர்களின் அதிக எதிர்ப்பை மக்களுக்காக சம்பாதித்துள்ளார் என்பதே உண்மை. இன்று அவர் இனவாதிகளிடத்திலும் ஒரு வில்லனாகவே பார்க்கப் டுகிறார்.  குருநாகலில் வைத்து ஞானசார தேரரை கைது செய்ய நாடகம் அரங்கேறிய போது கூட ஞானசார தேரர் அமைச்சர் றிஷாதின் பெயரைக் கூறி தூற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இனவாத ஊடகங்களை எடுத்துக்கொண்டால் நாளாந்தம் அமைச்சர் றிஷாதை இகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பெரும்பான்மை இன மக்களிடத்தில் மாத்திரமல்ல. முஸ்லிம்களின் விடயத்தில் தமிழ் தலைவர்களிடத்திலும் துணிவுடன் பேச தவறவில்லை. இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் றிஷாத் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தடையாக இருப்பதாகவும் நேரடியாக கூறி அவர்களையும் விமர்சித்திருந்தார். துணிவுடன் குரல் கொடுப்பதானது பலவாறான அச்சுறுத்தல்களை தானாக தேடிச் செல்வதற்கு சமனாகும். முஸ்லிம்களுக்காக அனைவருடன் கருத்தியல் முரண்பாடு கொண்டு துணிவுடன் குரல் கொடுத்தால் அமைச்சர் றிஷாதுக்கு அச்சுறுத்தல் வருகின்ற போது உதவப் போவது யார்?

அமைச்சர் றிஷாத் இவ்வாறு மக்களுக்காக பலருடன் முரண்பட்டு துணிவுடன் குரல் கொடுப்பதன் காரணமாக தனது உயிரை பணயம் வைத்துள்ளார் என்பதே உண்மையாகும். அன்று மறைந்த மு.காவின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் எவ்வாறு மரணத்தை எதிர்பார்த்து கபன் சீலையோடு திரிந்தாரோ அதே நிலையில் தான் அமைச்சர் றிஷாதும் திரிகிறார். இதுவெல்லாம் எதற்காக? எமது முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட பற்றுக்கல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? அமைச்சர் றிஷாதின் துணிவுமிக்க பேச்சுக்களால் அவர் ஏந்தளவு முஸ்லிம்களின் எதிரிகளிடத்தில் எதிர்ப்பை சம்பாதிக்கின்றாரோ அதை விட அதிகமான ஆதரவை முஸ்லிம்கள் அவருக்கு வழங்க வேண்டும்.

அல் ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்




அட்டாளைச்சேனை தேசியப்பட்டியலில் தவத்துக்கே அதிகம் அக்கறை

( ஹபீல் எம்.சுஹைர் )

அமைச்சர் ஹக்கீமின் பகிரங்கமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் இன்னும் கனவாகவே உள்ளது. அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதில் அமைச்சர் ஹக்கீமுக்கு எந்த விதமான சிறு பிரச்சினைகளும் இல்லாத போதும் ( தற்போது ஹசனலியின் தடையுமில்லை ) இன்னும் அதனை இழுத்தடிப்பு செய்தே வருகிறார்.

இந்த இழுத்தடிப்பின் பின்னால் அமைச்சர் ஹக்கீமுக்கும் சல்மானுக்கும் இடையில் உள்ள மறைமுக ஒப்பந்தம் இருப்பதான கதைகள் இருப்பதோடு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே மு.கா முதலமைச்சரை பெற்றுக்கொள்ளாது போனால் நஸீர் ஹாபிசுக்கு அதனை வழங்கி பாராளுமன்றம் அனுப்பி வைத்தல் போன்ற பல பல விடயங்கள் உள்ளன. இவற்றுக்கு பின்னாலேயே அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் வழங்கப்படும். பாவம் அட்டாளைச்சேனை மக்கள். பல காலமாக முஸ்லிம் காங்கிரசை ஆதரித்து வருகின்ற போதும் பலர் நுகர்ந்த எச்சியைத் தான் உண்ண வேண்டிய நிலைமை.

நான் சொல்லும் இந்த கதை முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த பலரும் அறிந்த கதையே. இருந்த போதிலும் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்பதில் தவம் குறியாகவே உள்ளார். அட்டாளைச்சேனை மக்கள் தேசியப்பட்டியல் கதையை மறைந்துள்ள நிலையில் தனது சார்பு ஊடகம் ஒன்றினூடாக இன்னும் சில நாட்களிலே அட்டாளைச்சேனையில் நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொள்ளும் போது அட்டாளைச்சேனை முக்கியஸ்தர்கள் சிலர் அமைச்சர் ஹக்கீமிடம் தேசியப்பட்டியல் பற்றி கேட்கவுள்ளதாக கதைகளை பரப்பி அட்டாளைச்சேனை மக்களிடையே தேசியப்பட்டியல் உணர்வை தூண்டி விடும் வேலையை செய்கிறார். அமைச்சர் ஹக்கீமிடம் நல்ல பிள்ளையாக நடிப்பதில் வல்லவர். இதுவெல்லாம் அமைச்சர் ஹக்கீம் அறியாமல் இருக்குமளவு மடையனுமல்ல.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கிடைத்தால் அது மாகாண அமைச்சர் நசீருக்கு கிடைக்கும். அவரது மாகாண அமைச்சு தனக்கு கிடைக்கும். அதனூடாக விரைவான சேவைகளை செய்து எதிர்வரும் கிழக்கு மாகாண சபையில் தெரிவாவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிப்பதே  தவத்தின் சிந்தனையாகும். தவம் என்ன தான் தவம் இருந்தாலும் அந்த தவத்துக்கு அமைச்சர் ஹக்கீம் ஒரு போதும்  ஆட மாட்டார். தவத்தின் இந்த செயற்பாடு ஒரு வகையில் நோக்கும் போது சரியானதும் கூட. இருந்தாலும் அதனை வெளிப்படையாக கூற முடியாது தவிக்கின்றார்.


ஒரு சமூகத்தின் தலைவனது  நோன்பு நாள் ஒன்று...!

இது நோன்பு மாதம்...அதிகாலை மூன்று மணிக்கு ஸஹருக்கு எழுந்து, நோன்பு வைத்து, பஜ்ர் தொழுது முடித்துக் கொஞ்சம் தூங்கலாமென எண்ணித் தலையைச் சாய்த்தால், தொலைபேசி அலறுகிறது. ''முஸ்லிம் ஒருவரின் கடைக்குத் தீ வைத்து விட்டார்கள்...''

உடனே எழுந்து உடுத்தியிருந்த அதே சாரத்துடன் காரிலேறிக் குறிப்பிட்ட இடம் வந்து, கடைக்குச் சொந்தமானவரிடம் விபரங்கள் கேட்டு, போலீஸ் மா அதிபருக்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் நடந்த அநியாயத்தைப் பற்றி உறக்கப் பேசி நியாயம் கேட்டு, தக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி விட்டு வீட்டுக்குப் போனால், மண் சரிவால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரியிலிருந்து தகவல் வருகிறது. அவசர அவசரமாகக் குளித்து முடித்து, ஆடை மாற்றிக் கொழும்பிலிருந்து இரத்தினபுரி போய் அங்கு நிவாரணப் பணிகளைக் கவனித்துவிட்டு, அதிகாரிகளுக்குக் கட்டளை பிறப்பித்து மீண்டும் கொழும்புக்கு வந்து, அமைச்சுக்குப் போய் அலுவல்களைக் கவனித்து, லுஹர் தொழுது, பாராளுமன்றம் போய் அங்கே, நாட்டில் முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அநியாயங்கள் பற்றி யாருக்கும் அஞ்சாமல் நெஞ்சு நிமிர்த்தி , ''நான்கு போலீஸ் குழுக்களை அமைத்து இனவாதியைப் பிடிப்பதாகச் சொல்கிறீர்களே, இன்னும் அவரைப் பிடிக்காமலிருக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா...?'' என ஆக்ரோஷமாகக் குரலெழுப்பி, சீற்றத்துடன் சிங்கமாய்க் கர்ஜித்து வெளியே வந்து, அஸர் தொழுத பின்னர் தமிழ் பேசும்  மக்கள் விடயமாக அந்த வெளிநாட்டுத் தூதுவருடன்  உரையாடி முடிக்கையில்,  சில முக்கியஸ்தர்கள் வந்து 'தோப்பூரில் தொல்பொருள் என்று கூறி தமிழ்,முஸ்லிம்களின் காணிகளை துவேஷம் கொண்ட சிலர் அபகரிக்கப் பார்க்கிறார்கள்.' என்று சொல்ல, உடனடியாகவே அது சம்பந்தமாக உரிய திணைக்களங்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் உரிய பணிப்புரைகளை வழங்கி நோன்பு திறக்க வீடு வந்தால், வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஏழைகளும் தேவையுடையோர் பலரும். அவர்களிடம் அன்பாகப் பேசி நோன்பு திறக்க வைத்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து ஆவன செய்த பின்னர் மக்ரிப் தொழுது முடிக்க, மட்டக்களப்பில் ஒரு சமூக சேவகரின் மரணச் செய்தி வருகிறது. இன்னா லில்லாஹி என்று கூறி, அவசரமாகப் போகும் வழியில் இஷாவைத் தொழுது, அங்கு போய்த் தன்னால் முடிந்த உதவிகளை வழங்கி, ஜனாஸா நல்லடக்கத்திலும் கலந்துவிட்டு, வரும் வழியில் ஸஹர் செய்து வீடு வந்து சுப்ஹு தொழுது, கண்ணை மூடிக் கொஞ்ச நேரம் படுக்கலாமென்று பார்த்தால்....தொலைபேசி ஒலிக்கிறது!

எங்கள் தலைவரே... றிசாத் பதியுதீனே...

காமமும் தூக்கமும் விஸ்கியும் ஓய்வுமாகப்  பலர் தம்மையும்  தலைவர்களெனச் சொல்லிக் கொண்டு வாழும் இந்த உலகில், தனது வாழ்வையே இந்தச் சமூகத்துக்காக அர்ப்பணித்து வாழ்கின்ற உங்களுக்கான நற்கூலியை அந்த இறைவன் நிச்சயம் தருவான். இன்ஷா அல்லாஹ்...!





Monday, June 5, 2017

நுகேகொட பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட்! 

இன்று அதிகாலை நுகேகொட பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடைய கடை தீ வைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

உரிமையாளரின் சில முன்னேடுப்புகள் காரணமாக பல லச்ச ரூபா பெறுமதியான சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. எனவும் அறியமுடிகின்றது.

இதனை பார்வையிடுவதற்காக சற்றுமுன்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பாதியுதீன் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட உரிமையாளரை சந்தித்து இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

(இனவாத சமூகத்திடமிருந்து உங்களையும், பாதுகாத்து கொள்ளுங்கள்)

அமைச்சருக்காக பிராத்திப்போம்







அமைச்சர் ஹக்கீம் சுவிஸ் லொக்கறை திறந்து காட்டுமாறு சவால் விடுவாரா?

( ஹபீல் எம்.சுஹைர் )

அமைச்சர் ஹக்கீம் பற்றிய சில முக்கிய இரகசிய ஆவணங்கள் மு.காவின் முன்னாள் தவிசாளரிடமிருப்பதான கதைகள் பல காலம் தொட்டு சென்றிகொண்டிருக்கின்ற போதும்  தற்போது முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் அவைகள் தன்னிடமிருப்பதாக ஒத்துக்கொண்டுள்ளார். அவ் ஆவணங்களை தான் மாத்திரம் வைத்திருக்கும் போது தனது மரணத்தோடு அது முடிவுக்கு வந்துவிடும் என்பதால் இன்னும் சிலரது வங்கி லொக்கரில் பாதுக்காக்கப்படுவதாக கூறி இருந்தார்.

தனது வங்கி லோக்கருக்கு முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆவணங்களை அனுப்பியதாக ஒருவர் பகிரங்கமாகவே கூறியுள்ளார். இருந்த போதிலும் அமைச்சர் ஹக்கீம் என்னவோ எல்லாம் பேசுகிறார். இவைகள் பற்றி சிறிதும் வாய் திறந்ததாக தெரியவில்லை.மடியிலே கணம் இல்லை என்றால் பயமெதற்கு ?

அமைச்சர் றிஷாதுக்கு வன்னியிலே பல ஏக்கர் காணிகள் உள்ளதாக யாராவது கூறினால் அல்லது வேறு ஏதாவது விமர்சனங்களை முன் வைத்தால் உடனே அவர், அவர்களை நோக்கி முடிந்தால் நிரூபியுங்கள் என சவால் விடுவார்.  அமைச்சர் ஹக்கீமை நோக்கியும் அவரது சவால்கள உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏன் இந்த தைரியம் அமைச்சர் ஹக்கீமுக்கில்லை?

இவ்வாறு அவர் சவால் விட்டால் இதன் பிறகு அவர்கள் இது பற்றி கதைக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். சமூக வலைத்தளங்கள் அவர் பற்றிச் சென்று கொண்டிருக்கும் எல்லையற்ற விமர்சனங்கள் ஒரு நொடியில் முடிந்து விடும். இப்படி இருந்தும் அமைச்சர் ஹக்கீம் இது பற்றி கதைக்காமல் தவிர்ப்பதன் மூலம் அவருக்கெதிராக முன் வைக்கப்படும் விமர்சனங்களின்  உண்மை தன்மையை உறுதி செய்கிறார் என்றே கூற வேண்டும்.

Wednesday, May 24, 2017

நல்லாட்சியின் எனும்  பேயாட்சி

எமது வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளினூடாகவும் பலவிதமான படிப்பினைகளை பெற்றுக்கொள்ளலாம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆட்சி பீடத்திலிருந்து விரட்டி  கொண்டு வந்த ஆட்சிக்கு நல்லாட்சியென  பெயர் சூட்டி அழைத்து,அவ் ஆட்சியை யாவரும் பெருமைப்படுத்தினார்கள்.இன்று அவ் ஆட்சி சென்று கொண்டிருக்கும் பாதையை பார்க்கும் போது நல்லாட்சி என்ற பெயருக்கு இவ் ஆட்சி எந்த விதத்திலும் தகுதியற்றதாகும்.இதனூடாக எப்போதும் மனித சிந்தனைகள் ஒரு எல்லைக்குட்பட்டது தான் என்ற படிப்பினையை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம்.

மாணிக்கமடு விவகாரம்

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இறக்காம பிரதேசமானது  சிறுபான்மையினர் வாழும் பிரதேசமாகும். அந்த பிரதேசத்தில் மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது.இப் புத்தர் சிலை தொல் பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான காணியிலே வைக்கப்பட்டுள்ளது. தொல் பெருள் திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் எந்த விதமான நிர்மாணங்களையும் செய்ய முடியாது. இச் சட்டத்தில் புத்தர் சிலைகளுக்கு மாத்திரம் எந்த  விதி விலக்கும் வழங்கப்படவுமில்லை. அதாவது இங்கு சில வைப்பதாக இருந்தால் தொல் பொருள் இடங்களில் புத்தர் சிலை  வைக்க அனுமதியுள்ளதென சட்டத்தை மாற்ற வேண்டும். முதலில் இப் புத்தர் சிலை நிறுவப்பட்டமையானது சட்டத்துக்கு முரணான செயலாகும். அதற்காகவே அக் குழுவினர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனை மு.கா சட்டரீதியாக கையாள வழக்குத்தாக்கல் செய்திருந்தது. இவ் விடயமானமது நேரடியாக சட்டத்துடன் தொடர்புபடுவதால் இவ் விடயத்தில் மு.கா வழக்குத் தாக்கல் செய்திருந்தமை ஒரு கோணத்தில் சிறந்த வழி முறையாக இருந்தாலும் குறித்த சிலை நிருவலாளர்கள் சட்டத்தை மதிப்பவர்களாகவும் இலங்கை அரசு சட்டத்தை நிலை நிறுத்த எதையும் செய்யும் ஆற்றல் படைத்ததாகவும் இருக்க வேண்டும். ஞானசார தேரர் நீதி மன்ற உத்தரவையே அவமதித்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இப்படி இருக்கையில் வழக்குத் தாக்கல் செய்து இதனை சாதிக்க முடியும் என நம்புவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசை பட்ட கதையாகவே அமையும். இருந்த போதிலும் இவ்விடயத்தில் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் மிகவும் சிரத்தை எடுத்திருந்தமையை மறுக்க முடியாது. இச் சிலையை அகற்ற  இயலுமான அத்தனை வழிகளையும் பயன்படுத்த வேண்டும்.அந்த வகையில் இதுவும் ஒரு வழியாகும்.நீதி மன்றம் சிலை நிருவலாளர்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்கிவிட்டால் அது முஸ்லிம்களுக்கு மிகவும் சாதகமாகவும் அமைந்துவிடும்.

 இது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் உள்ளதன் காரணமாகவும் மாணிக்கமடு பிரதேசமானது தடை செய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதன்  காரணமாகவும் அவர்கள் சிறிதளவாவது சட்டத்தை மதிப்பவர்களாக இருந்தால் குறைந்தது நீதி மன்ற தீர்ப்பு வரும் வரையாவது அங்கு எந்த வித மத அனுஸ்டானங்களை செய்யாமல் பொறுமையாக இருந்திருக்க வேண்டும். கடந்த பத்தாம் திகதி வெசாக் தினமன்று அங்கு பௌத்த தேரர்களினால் மத அனுஸ்டானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீதி மன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகாம வரும் என நினைத்திருந்தால் இவ்வாறு நீதி மன்ற தடையை மீறி செயற்பட முனைந்திருக்க மாட்டார்கள்.இதனூடாக முஸ்லிம்களின் நீதி மன்ற நாடுகை தங்களது சாதகாமான பதிலை வழங்காதென குறித்த இனவாதிகள் கருதி இருக்கலாம். அங்கு மேற்கொள்ளப்பட்ட மத அனுஸ்டானத்துக்கு பாதுகாப்பு படையினரின் அதி உச்ச பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. நீதி மன்றத்தின் கட்டளையை மீற பாதுகாப்பு படையினர் உதவி நல்கியுள்ளனர்.ஒரு நாட்டில் அனைவரும் இறுதியாக நாடிச் செல்கின்ற நீதி மன்றத்தின் கட்டளையை செயற்படுத்த வேண்டிய பாதுகாப்பு படையினர் அதனை மீறுவதற்கு உதவி செய்வது இந் நாடு நீதியற்ற பாதையில் பயணிப்பதை சுட்டிக்காட்டுகிறது. இதுவெல்லாம் முஸ்லிம்களுக்கும் இந் நாட்டின் எதிர்காலத்துக்கும் சிறந்த சமிஞ்சைகள் அல்ல. இன்று பலர் ஒரு தவறு செய்கின்ற போது அது நீதி மன்றத்தில் நிரூபணமானால் தனக்கு இத் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தின் காரணமாக பல விடயங்களை செய்யாது தவிர்ந்து கொள்கின்றனர். அதே நேரம் தனது இந்த அதிகாரத்தை பாவித்தால் நீதி மன்றத்தால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டால் அத் தவறை அஞ்சாமல் செய்வோம். நீதி மன்றத்தை கூட கணக்கில் எடுக்காமல் செல்லும் செயற்பாடுகளானது எதிர்கால பௌத்த தேரர்களுக்கு தவறான பாதையை காட்டி வம்.கடந்த வெசாக் தினமன்று மாணிக்கமடுவில் அதிகமான இளம் வயதுடைய பௌத்த தேரர்கள் கலந்துகொண்டதாக அறிய முடிகிறது.இவர்கள் தவறான வழியின் பால் நடைபயில இவைகள் வழி சமைக்கும் என்பதில் மாற்றமில்லை. இன்றைய ஒரு ஞானசார தேரரால் பல ஞானசார தேரர்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றார்கள்.

இங்கு மாத்திரம் புத்தர் சிலை நிறுவப்படுமாக இருந்தால் ஒன்று தானே என்று பொறுமையுடன் இருந்து விடலாம். அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தொல் பொருள் திணைக்களத்துக்குரிய இடங்கள் உள்ளன.இதனை வேடிக்கை பார்க்கும் போது ஒவ்வொரு இடமாக சில வைத்து வரக் கூடிய அச்சம் தோன்றியுள்ளது.இங்கு சில வைப்பதை ஏற்றுக்கொண்டீர்கள்,ஏன் அங்கு வைப்பதை எதிர்க்கின்றீர்கள் என கேட்டால் எதுவும் கூற முடியாது போய் விடும். தற்போது அச் சிலைக்கு அருகாமையில் பௌத்த மதஸ்தலம் ஒன்றை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கான எல்லை நில அளவைகள் கூட முடிந்துவிட்டன. இப் பௌத்த மதஸ்தலமானது தமிழ் மதத்தை சேர்ந்த ஒரு தனி நபரின் காணி என்பது குறிப்பிடத்தக்கது. அன்றே தீகவாபிக்கு செல்லும் பக்தர்கள் தங்கிச் செல்ல ஒரு மடம் அமைக்கடப் போகிறது என்ற கதை பிசு பிசுத்திருந்தது.அது மீண்டும் ஆறு மாதங்களின் பின் பௌத்த விகாரை அமைக்கப்படப்போவதாக மாறியுள்ளது. இதற்கெல்லாம் இவர்கள் கற்பிக்கும் நியாயம் இங்கு பல வருடங்களுக்கு முன்பு சிலையும் பௌத்த விகாரையும் இருந்தது என்பதாகும். முன்பொரு காலத்தில் சிலையும் பௌத்த விகாரையும் இருந்திருந்தால் முதலில் அவற்றுக்கான ஆதாரங்கள்  வெளிப்படுத்தப்பட வேண்டும். அது யாரால் உடைக்கப்பட்டது என்ற வரலாறுகள் தேடப்படல் வேண்டும். தொல் பொருள் இடங்களை அது  இன்று எவ்வாறு உள்ளதோ அவ்வாறே பாதுக்காப்பட வேண்டுமே தவிர அவைகள் முன்னர் இருந்தது போன்ற புணரமைக்கப்பட முடியாது. அதன் அழிவுகள் கூட சில வரலாற்றை நினைவு கூறும் என்பது குறிப்பிடத்தக்கது. அவைகள் மீள புணர் நிர்மாணம் செய்யப்படும் போது தொல் பொருள் இடம் என்ற அந்தஸ்தை இழந்துவிடும். இவைகள் தொல் பொருள் இடங்களாக இருந்தால் இங்கு கட்டட  நிறுவல்களுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக அவர்களே குறித்த இடங்களை பாதுகாக்கின்றனர். இச் சிலை நிறுவலுக்கும் கட்டட நிறுவலுக்கும் இவற்றினை நிறுவ முயற்சிப்பவர்கள் கூறும் நியாயங்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவையல்ல.

மாணிக்கமடுவில் சிலை வைக்கப்பட்ட போது முஸ்லிம்கள் கொதித்து எழுந்த போதும் அவர்களின் கொதிப்புக்கள் சில நாட்களிலேயே அடங்கிவிட்டது. தொடர்ச்சியான அழுத்தங்களை யாருமே வழங்கவில்லை. அன்று பௌத்த மக்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை எதற்கு போன்ற கருத்துக்களை அமைச்சர் ராஜித கூறியிருந்தார். இவற்றை சாதகமாக பயன்படுத்தி அதனை நீக்க அதன் பின்னால் உறுதியாக நின்றிருக்க வேண்டும். இன்று இந்த சிலை வைப்பானது விமர்சனத்தை தோற்றுவித்துள்ளதால் இச் சிலைக்கு ஏதேனும் பாதிப்புக்கள் நிகழுமாக இருந்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இலங்கை நாட்டில் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களே இச் சிலையை உடைத்துவிட்டு முஸ்லிம் மக்கள் தலை மீது பழி போட்டால் இலங்கை முஸ்லிம்களின் நிலை என்னவாகும்? அதே போன்று முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு ஏதேனும் செய்துவிட்டால் அதன் விளைவுகளை சுமக்க போவது யார்? குறித்த இடத்தில் பன்சலை அமையப்பெறுமாக இருந்தால் அதனை சுற்றி சிங்கள மக்களின் நடமாட்டம் அதிகரிக்கும். அங்கு அவர்களின் மத அனுஸ்டானங்கள் இடம்பெறும். அம்பாறை மாவட்டத்தில் அவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். அதே போன்று அதனை சுற்றியுள்ள சிறுபான்மையினர் தங்களது காணிகளை குறைந்த விலைக்காவது விற்பனை செய்துவிட்டு ஓடும் நிலை ஏற்படும். அவர்கள் தீகவாபியை தளமாக கொண்டு அம்பாறை மாவட்டத்தின் பாரிய நிலப்பரப்பை தங்கள் வசப்படுத்திக்கொள்வர்.பொத்துவில் தொகுதியில் அமைந்துள்ள ஒலுவில் முஸ்லிம் கிராமத்தை உள்ளடக்கியதாக தீகவாபி பிரதேச சபை ஒன்றை நிறுவுவதற்கான கதையாடல்கள் பல ஆண்டு காலமாக உள்ளன. அவற்றுக்கு இப் பிரதேசத்தை அவர்கள் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது வலுச் சேர்க்கும். அண்மையில் ஒலுவில் அஷ்ரப் நகர் வீதி தீகவாபி வீதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தீகவாபிக்கு புனித பிரதேசத்துக்கு சொந்தமானதென பேரினவாதிகள் முஸ்லிம் கிராமங்களை தங்களுடையதென உரிமை கோருகின்றமை குறிப்பிடத்தக்கது. அது போன்று அண்மையில் அமைச்சர் தயா கமகே தீகவாபியை சுற்றியுள்ள 12000 ஏக்கர் காணி தீகவாபி புனித பிரதேசத்துக்கு சொந்தமானதென அம்பாறை மாவட்டத்தின் பல முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் தீகவாபிக்கு போகும் வழியில் தங்க தங்குமிடம் ஒன்றை  அமைக்கப்போவதாக கூறியவர்கள் தற்போது அங்கு பன்சலை நிறுவலுக்கான ஆதாரங்களை முன் வைக்கின்றனர். இவற்றை எல்லாம் வைத்து சிந்தித்தால் இவற்றின் பின்னால் பாரிய சதி ஒன்று உள்ளமை தெளிவாகிறது.

மாணிக்கமடு விவகாரத்தில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தலையீடு செய்துள்ளார். அங்கு சென்ற ஞானசார தேரர் அங்கு சென்று விகாரை அமைப்பதற்கு தனது பூரண ஆதரவை வழங்கியுள்ளார். மேலும்,முஸ்லிம்கள் செறிந்து வாழும் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள விகாரைக்கும் தான் விஜயம் செய்ய போவதாக கூறியுள்ளார். இவரின் இக் கூற்றில் பல விடயங்கள் உள்ளன. இவர் ஏன் அக்கரைப்பற்று விகாரைக்கும் தான் விஜயம் செய்யப்போவதாக கூற வேண்டும்? அதாவது இவர்கள் தங்கள் ஆதிக்கத்தை பௌத்த மதஸ்தலங்கள் ஊடாகவே நிறுவி வருகின்றனர் என்பதை அச் செய்தி வெளிப்படுத்துகிறது. இறக்காமத்தில் பன்சலை அமையப்பெறுவதனூடாக  தங்கள் ஆதிங்களை அதிகரிப்பது இவர்களது நோக்கங்களாக இருக்கலாம். இங்கு சிலை வைக்க வருபவர்களின் செயற்பாடுகளானது பொது பல சேனாவின் செயற்பாடுகளுக்கு ஒத்ததாகவே உள்ளது. இதன் பின்னணியில் பொது பல சேனா இருப்பதாக காட்டாமல் இத் திட்டத்தை செயற்படுவது அவர்களது நோக்கமாக இருக்கலாம். குருநாகலில் பொது பல சேனா அமைப்பானது தனது முகத்தை வெளிக்காட்டாமலேயே முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாட்டை முன்னெடுத்ததாக அவர்கள் பகிரங்கமாக பெருமை பாராட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு முஸ்லிம்களின் எதிர்ப்புக்கள் அதிகமாக இருப்பதால் இறுதியில் தங்களது முகத்தை வெளிக்காட்டி செய்ய வேண்டிய நிலைக்கு பொது பல சேனா அமைப்பினர் தள்ளப்பட்டிருக்கலாம்.

*மாவில்லு வர்த்தமானி*

மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதை போன்றே மாவில்லு வர்த்தமானி பார்க்கப்படுகிறது. 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இருந்து இரவோடு இரவாக விரட்டியடிக்கப்பட்டனர்.அவர்கள் அங்கிருந்து வெளியேறிய பின் அங்கு உயர்ந்த மரங்கள் வளர்ந்து காடுகளாக மாறின. ஏற்கனவே வில்பத்து வனத்துக்கு அருகாமையில் இக் காணிகள் இருந்தமையால் மரங்களோடு மரங்கள் சேர்ந்து காடுகளாக தோற்றமளித்தன.யுத்தம் முடிந்த பிறகு தங்களது பூர்வீக குடிகளில் குடியமரலாம் என்ற  மகிழ்ச்சியோடு சென்ற மக்களை நோக்கி பெரும் பான்மையின இனவாதிகள் போர்க்கொடி தூக்கினர். முஸ்லிம்களின் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் தடுக்கப்பட்டது. அந்த வகையில் 2012ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை வில்பத்து வனத்துக்கு சொந்தமான காணிகளாக வர்த்தமாணிப்படுத்தினார். அதில் முஸ்லிம்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டிருந்தது.அந்த அநீதியை இன்று வரை திருத்திக்கொள்ள முடியாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.இருந்தாலும் அதற்கு பகரமான காணிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் ஒரு குறித்த தொகை (முழுமையான அளவல்ல) வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அப்படி இருக்கையில் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் அரசு மீண்டும் அப் பகுதி முஸ்லிம்களின் தலையில் இடியை விழச் செய்துள்ளது. ஜனாதிபதி மைத்திரி வெளிநாட்டில் இருக்கும் போது மாவில்லு வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளார். அப்படி ஜனாதிபதி மைத்திரிக்கு என்ன அவசரம் என்று சிந்தித்தாலே இவ்விடயத்தில் இனவாதிகளின் வாசிப்புக்கு ஜனாதிபதியின் ஆட்டம் தெளிவாகிறது.

அன்று மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் வனமாக வர்த்தமானிப்படுத்தப்பட்ட போது அன்று அதனை யாருமே அறிந்திருக்கவில்லை.2015ம் ஆண்டு `காலப்பகுதியிலே அது வெளிச்சத்துக்கு வந்திருந்தது.அன்று அதனை யாருமே அறிந்திருக்காகத்தான் காரணமாக அது விடயத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகளை குறை கூற முடியாது. அப்படி குறை கூற வேண்டுமாக இருந்தால் அவர்கள் அக் காலத்தில் அது தொடர்பில் சுட்டிக்காட்டியவர்களாக இருக்க வேண்டும். அன்று முஸ்லிம்களுக்கு தெரியாமல் இவ்விடயம் அரங்கேற்றப்பட்டமையனது பிழையானது என ஒரு வகையில் கூறினாலும் இன்னுமொரு வகையில் எமது முஸ்லிம் மக்கள் இவ்வாறான வர்த்தமானியில் அன்று கவனம் இல்லாமல் இருந்திருக்கலாம். அக் காலத்தில் இப்படியான ஒரு சதி நிகழலாம் என்ற சிந்தனை இருக்கவில்லை. இருந்தாலும் இப்படியானதொரு சதி நிகழ்ந்துவிட்டது என இருக்காமல் அவ் வர்த்தமானியை மீளப் பெறுவதில் எமது முஸ்லிம் சமூகம் உறுதியாக இருக்கவில்லை. ஆறிய கஞ்சு பழங் கஞ்சு என்பது போல அவ் விடயம் தொடர்பில் பெரிதும் கவனம் செலுத்தப்படவில்லை.

இன்று மாவில்லு வர்த்தமானியை ஜனாதிபதி மைத்திரி வெளிநாட்டில் இருந்து தனது கையொப்பத்தை இட்டு அனுமதித்துள்ளார். வெளிநாட்டில் இருந்தவாறு கையொப்பம் இடுமளவு ஜனாதிபதி மைத்திருக்கு என்ன அவசரம். இந்த அவசரத்தின் பின்னால் இனவாத அழுத்தங்கள் இருக்க வேண்டும் என்றே பெரிதும் நம்பப்படுகிறது. இன்று வில்பத்து வனத்தை அண்டிய முசலி பிரதேச காணிகள் தொடர்பில் அப் பகுதியில் முன்னர் வாழ்ந்த,வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கும் சில இனவாதிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவுகிறது. இவ் விடயத்தில் பாரிய பிரச்சினைகள் இருப்பது யாவரும் அறிந்ததே.இங்கு ஏதாவது ஒரு முடிவு எடுப்பதானால் அது தொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் கலந்துரையாடியே  ஜனாதிபதி மைத்திரி எடுத்திருக்க வேண்டும். ஒரு வர்த்தமானி வெளியிடப்பட்டு அதனை மீளப் பெறுவது பெரிய விடயமல்ல.கு றித்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் அதனை ஏற்றுக்கொண்டு மீளப் பெறுமாறு கூறினால் போதுமாகும். இது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் நிலவுகின்ற போது இவ்வாறு செயற்படுவதானது இனவாதிகளின் வாதத்தை வலுக்கச் செய்யும்.மீளப் பெறும் நடவடிக்கைகளுக்கு எதிராக இனவாதிகள் கிளர்ந்து எழுந்தால் அது நிச்சயம் தாக்கம் செலுத்தும். அப்படி இருக்கையில் முஸ்லிம்,தமிழ் அரசியல் வாதிகளிடம் வினவாது இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி செயற்பட்டுள்ளமையானது இனவாதிகளின் ஊதல்கள் மைத்திரியின் காதுகளை நிறைத்துள்ளதை அறிந்து கொள்ளச் செய்கிறது.ஜனாதிபதி மைத்திரி முஸ்லிம்களை புறக்கணித்த பாதையில் பயணிப்பதையும்  எடுத்து காட்டுகிறது.

*கல்குடா மதுபான தொழிற் சாலை*

இலங்கையில் இருக்கின்ற மதங்களில் பௌத்த மதம் உட்பட அனைத்து மதங்களும் மதுபானம் அருந்துவதை தடை செய்துள்ளது.மதங்கள் தடுக்கின்றவோ இல்லையோ அனைவரும் அதனை பிழையான செயலாக கருதுகின்றனர்.இன்று தமிழ் நாட்டிலே பெண்கள் மதுபான சாலைகளை முன்னின்று உடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வரசு ஆட்சிக்கு வரும் கோசங்களில் போதைப் பொருள் ஒழிப்பு கோசம் முதன்மையாக இருந்தது. மைத்திரி ஆட்சியமைத்து போதை பொருளை ஒழிப்பதாக ஓரிரு நிகழ்வுகளையும் நடாத்தி இருந்தார். இன்று இலங்கை நாட்டில் போதை பொருள் பாவனை தலை தூக்கியுள்ளதை கொழும்பு பிரதேசத்தில் பல வருடங்கள் முன்பிருந்தது போன்று குடுக் காரர்கள் நடு வீதிகளில் படுத்துறங்குவதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இவைகள் இவ்வரசின் ஆட்சிக் காலத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டுகின்ற போதும் இவ்வரசை மீறி இவைகள் நடக்கின்றன  என்ற வாதத்தை முன் வைத்து சிறிதளவு தப்பித்துக்கொள்ளலாம்.இவ்வாட்சி காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பிரதேசத்திலே மிகப் பெரும் மதுபான சாலை ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.இதுவும் தன்னை அறியாமலேயே நடக்கின்றது என சிறிதளவும் நியாயம் கற்பிக்க முடியாது.இவ்விடயமானது இலங்கையில் போதை பொருள் பாவனை அதிகரிப்பிற்கு இவ்வரசே காரணம் என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.குறித்த நிறுவனத்தை WD மென்டிஸ் என்ற நிறுவனமே ஆரம்பித்துள்ளது.இந் நிறுவனமானது மத்திய வாங்கி ஆளுநரின் மருமகனுடையது.மத்திய வங்கி ஆளுநர் யாருடைய ஆள் என்பது யாவரும் அறிந்ததே.குறிப்பாக இந்த நிறுவனத்துக்கு வரி விலக்கு அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில தமிழ் நாட்டில் பெண்கள் மது பான சாலைகளை உடைக்கின்ற போதும் பௌத்த மதத்தை காக்கப்போவதாக முஸ்லிம்களுக்கு பல இன்னல்களை வழங்கி கொண்டிருக்கும் பொது பல சேனா அமைப்பானது இவ்வாறான விடயங்களை தங்களது காதுகளுக்கும் எடுக்கவில்லை. இதனை எதிர்க்க அவர்களுக்கு கொந்தராத்து வழங்கப்படாமல் இருக்கலாம். இன்று கல்குடாவிலே மிகப் பெரிய மதுபானசாலை ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதனூடாக இவர்கள் தங்கள் மதத்தையே பூரணமாக பின்பற்றுபவர்களல்ல என்பதை கூறி நிற்கின்றது.இருப்பினும் இன்று இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்கின்ற பிரதேசங்கள் தவிர்ந்து ஏனைய பிரதேசங்களில் மதுபான விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன.இவ்வரசானது மதுபான சாலை ஒன்றை அமைக்க சிந்தித்தால் முஸ்லிம்கள் அதிகம் செறிந்து வாழும் பிரதேசங்களை தவிர்த்து கொள்ள வேண்டும்.இருப்பினும் இத் தொழிற்சாலை அமைப்பிற்கு எத்தனையோ இடங்கள் இருந்தும் இவ்விடம் தெரிவு செய்யப்பட்டதில் இனவாத சூழ்ச்சிகள் இருக்கலாம்.குறிப்பாக இவ்வாறான நிறுவனங்களை நிறுவுவதற்கு மாகாண மற்றும் பிரதேச சபை அனுமதிகள் பெறப்பட வேண்டும்.அவ்வாறான எந்த அனுமதிகளும் இங்கு பெறப்படாமல் நேரடியாக மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.இப்படி ஒழித்து இந் நிறுவனத்தை கொண்டு வந்த விடயமே இதில் வேறு சில சூழ்ச்சிகள் இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இன்று இலங்கை நாட்டில் சிறுபான்மையின மக்களை நோக்கி பல்வேறு சதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.அவற்றில் மிக முக்கியமானது முஸ்லிம்களின் பொருளாதரத்தை முடக்குவதாகும்.முஸ்லிம்களை குடிப் பழக்கத்துக்கு அடிமையாக்குவதன் மூலம் மிக இலகுவாக அவர்களது பொருளாதாரத்தை அழித்துவிடலாம்.இஸ்லாத்தில் வட்டி தடை செய்யப்பட்டுள்ள போதும் முஸ்லிம் பிரதேசங்களில் வட்டிக் கடைகளாக வங்கிகள்  மலிந்து காணப்படுகின்றன.அங்கு சென்று அடகு வைத்தல் போன்ற விடயங்கள் பெரும் பாவமான விடயமாக யாரும் கருதுவதில்லை.இவ்வாறான நிறுவனங்கள் நிறுவப்படுவதனூடாக மதுபானம் அருந்துவதும் ஒரு சாதாரண விடயமாக மாறும்.இங்கு பலவாறான தொழில் வாய்ப்புக்களை வழங்கி இதற்கான எதிர்ப்புக்களை கட்டுப்படுத்த இதன் நிருவனவாளர்கள் சிந்திக்கலாம் இவ்விடயத்தில் சிறுபான்மையின மக்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள சிலர் இதற்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.அது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சிலர் பகிரங்க நிகழ்வுகளிலும் இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இருந்த போதிலும் தமிழ் மக்களின் பலமான எதிர்ப்பின் காரணமாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நேரடியாக தங்களது எதிர்ப்பை வெளிக்காட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இவ்விடயத்தில் கல்குடா பிரதேசத்தில் முஸ்லிம்கள் ஜும்மா தொழுகையை தொடர்ந்து மிகப் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.ஒரு பாதையினூடாகவே தௌஹீத் ஜமாத்தும் கல்குடா ஜம்மியத்துல் உலமாவும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.இவ்விடயத்தில் இவ் இரு அமைப்பும் இணைந்து ஏன் செயற்பட முடியாது.இவ்விடயத்தில் மத,குழு வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவதே வெற்றியை தரும்.ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பௌத்த மத தேரர் ஒருவர் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

*குறிப்பு: இக் கட்டுரை இன்று 24-05-2017ம் திகதி  புதன் கிழமை  கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 82வது கட்டுரையாகும்.*

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Tuesday, May 23, 2017

இனவாதிகள் விடயத்தில் அரசை காப்பாற்ற முன்பு கூறிய உண்மையை மறுக்கும் ஹக்கீம்

21-05-2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஹக்கீம் காத்தான்குடி நூரானியா மையவாடி சுற்று மதிளினை கையளிக்கும் நிகழ்வில் இனவாதிகளின் இன்றைய செயற்பாடுகள் குறித்து பேசியிருந்தார். அவருடைய பேச்சில் முன்பு அரசாங்கத்தின் அனுசரணை இல்லாமல் இவ்வாறான செயற்பாடுகள் நீடிக்க முடியாது என கூறிய அமைச்சர் ஹக்கீம் பின்பு இது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சதியாக சுட்டிக் காட்டுகிறார்.

அவரது குறித்த  உரை (எவ்வித மாற்றமுமின்றி)

//////  “அரசாங்கத்தின் அனுசரணை இல்லாமல் இருந்தால் இந்த எந்த விசயமும் நீடிக்க முடியாது என்பது மிகத் தெளிவான விசயம்.அரசாங்கம் இது தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மிகத் தெளிவாக உள்ளோம். ஆனால்,இது திட்டமிடப்பட்டு வேண்டுமென்று இந்த அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை இல்லாமல் செய்து ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவது இவர்களது பிரதான நோக்கம். இந்த கட்டத்திலே அதிலும் குறிப்பாக இந்த நாட்டின் போக்கிலே தங்களுக்கு சாதகமான விடயங்கள் நடக்கவில்லை என்பதற்கான சர்வதேச சக்திகள் இதன் பின்னால் இருப்பது நாங்கள் முழுமையாக ஒதுக்க முடியாத ஊகமாகும்.” //////

பொது பல சேனாவின் பிரச்சினை இவ்வரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கடந்த இரு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றமை என்பது யாவரும் அறிந்ததே. தற்போது அது உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. அமைச்சர் ஹக்கீமின் “அரசாங்கத்தின் அனுசரணை இல்லாமல் இருந்தால் இந்த எந்த விசயமும் நீடிக்க முடியாது என்பது மிகத் தெளிவான விடயம்” என்ற கூற்றானது இவ்விடயங்களின் பின்னால் இவ்வரசின் அனுசரணை இருப்பதை கூறுகிறது. நாம் இதனை இனவாதங்களின் பின்னால் இவ்வரசின் அனுசரணை உள்ளது என்பதாக எடுத்துக் கொள்ளாது போனாலும் இவ் விடயங்கள் நீடிப்பதன் காரணமாக,அமைச்சர் ஹக்கீமின் இக் கூற்றினூடாக இவ் இனவாதங்களின் பின்னால் இவ்வரசு உள்ளதா என்ற சந்தேகம் அமைச்சர் ஹக்கீமுக்கு இருப்பது தெளிவாகிறது.

அப்படி இருக்க, இது திட்டமிடப்பட்டு வேண்டுமென்று இந்த அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை இல்லாமல் செய்து ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவது இவர்களது பிரதான நோக்கம் என அதன் பின்னர் கூறியிருப்பதானது இவ்வரசுக்கு எதிரான சக்திகளே இவ்விடயத்தை செய்கின்றன என கூறுகிறார். இது அவர் முன்பு குறிப்பிட்ட கூற்றுக்கு முற்று முழுதாக முரணானதல்லவா? இதனூடாக அவர் இவ்வரசை திருப்தி செய்ய முனைகிறார். *அமைச்சர் ஹக்கீமின் இவ்வாறான கூற்றுக்களை பார்க்கும் போது வரும் ஆனா வராது என்ற நகைச்சுவை வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.*

மேலும்,இதன் பின்னால் சர்வதேச சக்திகள் இருப்பதாக கூறுகிறார்.இதைத் தானே அன்று மஹிந்தவின் காலத்திலும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்,அஸ்வர் ஆகியோர் கூறி முஸ்லிம் சமூகத்திடம் இருந்து ஏச்சுகளை வாங்கிக்கட்டினார்கள்.முஸ்லிம்களின் தலை போகும் நிலையிலும் ஒரு புறத்தில் உண்மையையும் மறு புறத்தில் அவ் உண்மையை மறைத்து அரசாங்கத்தையும் காப்பாற்ற முனைகிறார்.குறித்த கூட்டத்தில் உரையாற்றிய பா.உ அலி சாகிர் மௌலான இவைகள் தொடர்ந்தாள் இவ்வரசாங்கத்தில் தொங்கி கொண்டிருக்க முடியாது என உரத்த தொனியில் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Friday, May 19, 2017

றோகிங்ய முஸ்லிம்கள் மீதான ஹக்கீமின் நீலிக் கண்ணீர்



அண்மையில் சீனாவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் ஹக்கீம் மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகியை சந்தித்து ரோகிங்ய முஸ்லிம்கள் தொடர்பில் பேசியதாக இன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் அவர் இலங்கைக்கு வந்துள்ள மியன்மார் அகதிகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் குறிப்படப்பட்டுள்ளது.இதற்கு அவர் என்ன கூறினார் என்ற விடயம் கூறப்படவில்லை.இதுவே இது ஒரு பொய்யான கூற்றின் சாயலை காட்டுவதை அறிந்துகொள்ளச் செய்கிறது.அங்கு இதுவெல்லாம் பேச அமைச்சர் ஹக்கீமுக்கு சந்தர்ப்பம் அமைந்திருக்காது என்பதே உண்மையாகும்.மியன்மாரின் தலைவி *ஆங் சாங் சுகியிற்கு தமிழ் மொழி தெரியாதல்லவா?*

இவர் அங்கு மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகியை சந்தித்து கலந்துரையாடிய வேளையில் இலங்கையில் இனவாதிகளின் கை ஓங்கி இருந்தது.அச் சந்தர்ப்பத்தில்  *“இலங்கை நாட்டின் பிரதமருடன் சுத்தித் திரியும் நீங்கள் முதலில் உங்கள் நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துவிட்டு என்னுடன் வந்து கதையுங்கள்”* என்றால் அமைச்சர் ஹக்கீம் என்ன பதில் அளித்திருக்க முடியும்?

குறித்த சந்திப்பில் மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகி அமைச்சர் ஹக்கீமை மியன்மார் வந்து,நிலைமைகளை நேரில் அவதானித்து  ஆலோசனை வழங்குமாறு கூறியுள்ளார்.இது ரோகிங்ய முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க அமைச்சர் ஹக்கீமுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம்.எப்போது *அமைச்சர் ஹக்கீம் மியன்மார் செல்வார் என்பதை அறிவிப்பாரா?* அமைச்சர் ஹக்கீம் இக் காலத்தில் மியன்மார் செல்ல மாட்டார் என்பதை உறுதிபட கூறுகிறேன்.அமைச்சர் ஹக்கீம் மியன்மார் செல்லாது போனால் அவர் முஸ்லிம்கள் மீது அக்கறை அற்றவராக இருக்க வேண்டும்  அல்லது பொய்யான ஒன்றை கூறி பிரபலம் தேடும் முயற்சியாக இருக்க வேண்டும்.

மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பில் மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகியை சந்தித்து பேசிய அமைச்சர் ஹக்கீம் இலங்கை இலங்கை முஸ்லிம்கள் பற்றி பிரதமர் ரணிலுடன் பேசினாரா? அப்படி பேசியிருந்தால்,பிரதமர் ரணிலால் முன் வைக்கப்பட்ட தீர்வு என்ன என்பதை அமைச்சர் ஹக்கீம் வெளிப்படுத்துவாரா? அமைச்சர் ஹக்கேம் முதலில் தனது அக்கறையை இலங்கை முஸ்லிம்கள் மீது செலுத்த வேண்டும்.

அமைச்சர் ஹக்கீம் மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகியை சந்தித்து பேசிய விடயம் முஸ்லிம்களிடையே மிகவும் அதிருப்தியை தோற்றுவித்திருந்தது.அதனை களைந்து கொள்ள அமைச்சர் ஹக்கீம் இதனை கூறியிருக்க வேண்டும் என்பதாகவே நான் கருதுகிறேன்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Monday, May 15, 2017

சீனாவில் காரியத்தில் கண்ணாக இருக்கும் ரணில்;ஹக்கீம்?



இலங்கைக்கு உதவும் நாடுகள் வரிசையில் முஸ்லிம் நாடுகளின் வகிபாகம் மிக முக்கியமானது.இவ்வாறான உதவிகளை முஸ்லிம் நாடுகளிடமிருந்து இலங்கை நாடு தொடர்ச்சியாக பெற வேண்டுமாக இருந்தால் இலங்கை முஸ்லிம்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

இன்று இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் செயற்பாடுகளை வெளியில் காட்டினால் நிச்சயம் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தி கொள்ளும்.இன்று இலங்கை நாட்டில் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிப்பது சர்வதேசம் வரை சென்றுள்ளது.

இலங்கை நாடு முஸ்லிம் நாடுகளிடமிருந்து உதவிகளை பெற இலங்கை முஸ்லிம்கள் எங்களுடனே உள்ளார்கள் என நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது.அதற்கு இலங்கை முஸ்லிம் அரச தலைவர்கள் தன்னுடன் உள்ளார்கள் என நிரூபித்தால் அதுவே போதுமானது.

மர்ஹூம் அஷ்ரபினால் மு.காவானது சர்வதேசம் வரை பெயர் பெற்ற ஒரு கட்சியாகும்.அந்த கட்சியின் தலைவர் எங்களுடன் உள்ளார் என நிரூபித்தால் அது மிகப் பெரும் சான்றாகிவிடும்.தற்போது சீன சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மலேசியா பிரதமர் நஜீப் ரசாக்குடன் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளார்.இதன் போது அமைச்சர் ஹக்கீமை அறிமுகம் செய்து மகிழ்ந்து கொள்கின்றனர்.

*இங்கு அமைச்சர் ஹக்கீம் மூலமாக இலங்கை முஸ்லிம்கள் எங்கள் ஆட்சியுடனேயே உள்ளார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இலங்கை முஸ்லிம்கள் விற்கப்படுகிறார்கள் என்பதே உண்மையாகும்*.இதற்கு அமைச்சர் ஹக்கீம் துணை போகிறார்.இது சர்வதேச நிகழ்வொன்று என்பதால் இன்னும் பல இடங்களில் இது போன்ற வியாபாரங்கள் இடம்பெறும்.இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் நிலைமை பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற வகையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது உலக முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களின் காதுகளினுள் இலங்கை முஸ்லிம்கள் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் வாழ்கின்றார்கள் என்ற செய்தியையே கொண்டு சேர்க்க வேண்டிய தேவை உள்ளது.அதற்கு அமைச்சர் ஹக்கீமின் இவ்வாறான பயணங்கள் தடையாக அமையும் என்பதே யதார்த்தமாகும்.வெளிநாட்டு முஸ்லிம் தனவந்தர்கள் கட்டிக் கொடுத்த நுரைச்சோலை வீட்டுத் திட்டம் இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அமைச்சர் ஹக்கீம் இவற்றையாவது சாதித்து வருவாரா?  சீனாவிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது காரியத்தில் கண்ணாக உள்ளார்;அமைச்சர் ஹக்கீம்..?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
பலம் பெறும் மஹிந்த,பாதாளம் செல்லும் ரணில்,தொங்கும் மைத்திரி

உலகம் முழுவதும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.இந் நாளானது பலத்த போராட்டங்களின் பின்னர் தொழிலாளர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட தினமாகும்.அன்று தொடக்கம் இன்று வரை ஏனைய நாடுகளை விட இலங்கை நாடு அத் தினத்திற்கு விசேட முக்கியத்துவம் அளிப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.இது ஒரு வகையில் தொழிலாளர்களை கௌரவப்படுத்துவதாக அமைந்தாலும் தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களின் விடயங்கள் முன்னிலைப்படுத்தப்படாது,அது அரசியல் களமாக மாறியிருப்பது அத் தொழிலாளர் தினத்தை அகௌரவப் படுத்துவதாகவும் அமைகிறது.தொழிலார் தினத்தில் தொழிலார்களை வெயியில் வாட்டி வதைக்கும் நிகழ்வு அரங்கேறுவதும் கண்டிக்கத்தக்கதாகும்.தொழிலாளர்கள் எனும் போது பல்வேறு மட்டத்தில் தொழிலாளர்கள் உள்ள போதும் அடிமட்ட தொழிலாளர்களை நோக்கிய பார்வையே மிகவும் அவசியமானது.இன்று இலங்கை நாட்டில் தொழிலாளர்கள் பல இன்னல்களை முகம் கொடுத்துள்ளனர்.மலையக தோட்ட தொழிலாளர்கள் தங்களது பல்வேறு தேவைகளை முன்னிறுத்தி பல வருடங்களாக தீர்வை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர்.இலங்கையில் நிலவும் வறட்சி காரணமாக 14 மாவட்டங்களை சேர்ந்த ஒன்பது இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந் நிகழ்வு நடைபெற்ற சமகாலத்தில் வறட்சி நிலவுவதன் காரணமாக அடிமட்ட தொழிலாளர்களான விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்குவது பற்றியதான கருத்தாடல்கள் சென்றிருக்க வேண்டும்.அவைகள் பற்றியெல்லாம் அரசியல் கட்சிகள் சிறிதும் கவனத்திற் கொண்டிருக்கவில்லை.

இலங்கையில் தொழிலாளர்களின் உரிமைகளை முன்னிறுத்தி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நாளாந்தம் மேற்கொள்ளப்படுகின்றன.அவைகளை கட்டுப்படுத்தவென்றே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான  தனியான பாதுகாப்பு பிரிவு அமைக்கவும் சிந்திக்கப்படுகிறது.எதிர்காலத்தில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்களை செய்ய தொழிற் சங்கங்கள் தயாராகி வருவதாகவும் அறிய முடிகிறது.இப்படி இலங்கை தொழிலாளர்களுக்கு ஆயிரம் தேவைகள் உள்ள போதும் அவற்றை பற்றியெல்லாம் பேசாமல் அரசியல் பேசி மகிழ்ந்தமையானது மரண வீட்டில் திருமண கதை கதைப்பது போன்றே உள்ளது.நடைபெற்ற மே தின நிகழ்வுகலினுள் ஜாதிக ஹெல உறுமயவானது அடிப்படை வசதிகளற்ற தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஒன்றினைவோம் என்ற தொனிப் பொருளில் நடாத்தி சற்று தொழிலாளர்களை நினைவு கூர்ந்திருந்தனர்.மக்கள் விடுதலை முன்னணியினரின் மே தின கூட்டத்தில் தொழிலாளர்களின் அர்ப்பணிப்புக்களை வெளிக்காட்டும் வகையிலான அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள் இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இவர்களின் கூட்டத்தில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கென  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான  தனியான பாதுகாப்பு பிரிவு அமைப்பது தொடர்பிலான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.இதற்கு பதில் அளித்துள்ள ஜனாதிபதி மைத்திரி அரசியல் நோக்கோடு நடாத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தவே இப் பாதுகாப்பு பிரிவை அமைக்கவுள்ளதாக கூறியுள்ளார்.அவ்வாறானால் ஒரு ஆர்ப்பாட்டம் நிகழும் போது அது அரசியல் இலாபம் கொண்டது என உறுதி செய்த பின்பு தான் இப் பிரிவு அதனை கட்டுப்படுத்த செல்ல வேண்டும்.ஒரு ஆர்ப்பாட்டம் அரசியல் இலாபம் கருதி மேற்கொள்ளப்படுகிறது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்தால் அதனை மக்களிடம் வெளிப்படுத்தினாலேயே அவ் ஆர்ப்பாட்டம் தானாகவே பிசு பிசுத்து போகும்.ஜனாதிபதி  முன் வைக்கும் காரணம் ஏற்க முடியாததாகும்.இதனூடாக இவ்வரசு தாங்கள் ஆர்ப்பாட்டங்களினூடாக பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளோம் என பகிரங்கமாக வெளிப்படுத்துகிறது.எதிர்வரும் காலங்களிலாவது குறைந்தது தொழிலாளர் தினங்களில் தொழிலார்களின் விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கி தொழிலாளர்களை அரசியல் கட்சிகள் கௌரவப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இலங்கையில் இடம்பெறும் மே தின நிகழ்வுகளை அரசியல் கட்சிகள் தங்களது மக்கள் பலத்தை வெளிக்காட்டவே பயன்படுத்தி வருகின்றன.ஆட்சி மாற்றத்திற்கு முன்பு இடம்பெற்ற தொழிலாளர் தினங்களுக்கும் ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு இடம்பெற்ற தொழிலாளர் தினங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகளுள்ளன.ஆட்சி மாற்றத்திற்கு முன்பு மிக நீண்ட காலமாக சு.க,ஐ.தே.க,ம.வி.மு ஆகியனவே தங்களது மக்கள் பலத்தை நிரூபிப்பதன் மூலம் தங்களது மக்கள் செல்வாக்கை வெளிக்காட்டின.ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு சு.க இரு அணிகளாக பிரிந்ததன் காரணமாக சு.க,ஐ.தே.க,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான பொது கூட்டணி,ம.வி.மு ஆகிய  குழுவினரிடையே பலத்த மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.இதில் மஹிந்த ராஜபக்ஸவின் மக்கள் செல்வாக்கு எவ்வாறு அமையும் என்பதே அனைவரினதும் பலத்த எதிர்பார்ப்பு எனலாம்.ஆட்சி மாற்றம் நிகழ்ந்த வருடமான 2015ம் ஆண்டு மஹிந்த அணியினர் கிருலப்பனையில் ஒரு மே தின கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொள்ளவில்லை.இருப்பினும் இக் கூட்டம் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமையில் சென்று அவர்  திரும்பி வந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.அவ்வருடம் இந் நிகழ்வை  பிரமாண்டமாக ஏற்பாடு செய்யும் வகையில் மஹிந்த அணியினர் பலம் பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை.இதில் பெருமளவான மக்கள் கலந்து கொள்ளாமையால்,இதில் மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டிருந்தால் அவரது மக்கள் செல்வாக்கை குறைத்துக் கொள்ளச் செய்திருக்கும்.இது ஆட்சி மாற்றம் நிகழ்ந்து ஒரு சில மாதங்களில் இடம்பெற்ற நிகழ்வு என்பதால் மஹிந்தவின் பின்னால் அணி திரள பலர் ஒஞ்சிக் கொண்டிருந்தனர்.இந் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொள்ளாமையினால்,இந் நிகழ்வு மஹிந்த அணியினரின் மக்கள் செல்வாக்கை ஏளனம் செய்த ஒன்று எனலாம்.இருந்தாலும் இன்று மஹிந்தவின் பின்னால் மக்கள் அலை திரண்டு செல்வதற்கு இவ்வாறான ஏளனங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு அவர்கள் பயணித்தமையே என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.அவ்வாண்டு ஐ.தே.கவும்,சு.கவும் மஹிந்த ராஜபக்ஸவின் சவால் இல்லாமையின் காரணமாக பலத்த மகிழ்ச்சியில் மே தினத்தை கொண்டாடின.

2016ம் ஆண்டய  மே தினமானது இலங்கை மக்களின் பலத்த எதிர்பார்ப்பை பெற்றிருந்தது.அவ் வருடமானது  மஹிந்த ராஜபக்ஸ தனது பலத்தை உணர்ந்து இவ்வாட்சியை கவிழ்க்க தனது திட்டங்களை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டு இவ்வாட்சிக்கு சவால் விடுத்துக் கொண்டிருந்த காலமாகும்.அவர் அவ்வாண்டு தனித்து தொழிலாளர் தினத்தை நடாத்துவார் என்று அனைவரும் நம்பினார்.2015ம் ஆண்டு மஹிந்த அணியினரின் மே தினத்தை சவாலாக கருதாதவர்கள் 2016ம் ஆண்டய மஹிந்த அணியினரின் மே தினத்தை தங்களுக்கான சவாலாக கருதி செயற்பட்டனர்.மஹிந்த அணியினர் மே தினத்திற்கு முன்பே இவ்வரசை கவிழ்ப்பதற்கான நிகழ்வுகளை பல்வேறு இடங்களிலும் நடாத்திக்கொண்டிருந்தார்.இவற்றினூடாக இம் முறை தாங்கள் மே தினத்தை தனித்து நடாத்தினால் பாரிய வெற்றியை பெறாது போனாலும் தோல்வியை சந்திக்க மாட்டோம் என்ற செய்தியை பெற்றுக்கொண்டனர்.மஹிந்த ராஜபக்ஸ,தனியாக மே தினத்தை நடாத்தாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் நடாத்தப்பட்டன.2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மஹிந்தவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டிருந்தார்.மார்ச் மாதமளவிலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.இன்னும் மஹிந்த குடும்பத்தினர் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவியது.அன்று குறித்த மே தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  கலந்து கொள்வதா என்பது கூட சற்று சந்தேகமாகவே இருந்தது.இதில் கலந்து கொள்வோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென சு.கவினால் எச்சரிக்கப்பட்டுமிருந்தது.இவ்வாறான தடைகள் அனைத்தையும் கவனத்திற் கொள்ளாமலேயே அன்று மஹிந்த ராஜபக்ஸ தனியாக மே தினத்தை நடாத்திக் காட்டியிருந்தார்.அவ் ஆண்டு அவர் நினைத்தளவு மக்களை திரட்ட முடியாது போனாலும் தோல்வியை சந்திக்கவில்லை எனலாம்.இந் நிகழ்வினூடாக இன்னும்  சிறிது முயற்சி செய்தால் அவர்  தனது இலக்கை அடையலாம் என்பதை புரிந்து கொண்டார்.இதன் பின்னரான அவர்களது செயற்பாடுகள் மிகவும் வீரியத்துடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.அவ்வாண்டு அவர் அவர்களது அணியினர் ஏற்பாடு செய்திருந்த  கூட்டத்தில் கலந்து கொள்வதில் சற்று உறுதியாக இல்லாமல் இருந்தமையே அவர் இவ்வரசின் எச்சரிக்கைகளுக்கு சிறிது அஞ்சியதை எடுத்துக் காட்டுகிறது.

எதிர்வரும் மே தினத்தினுள் இலங்கை அரசு மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்தியே ஆக வேண்டும்.இன்னும் இவற்றை இழுத்தடிக்க முடியாது.இவ்வருடம் இடம்பெற்ற மே தினத்தில் பிரதான அரசியல் கட்சிகள் கூட்டும் மக்கள் எண்ணிக்கை எதிர்வரும் தேர்தல்களின் முடிவில்  மிகவும் தாக்கம் செலுத்தும்.இதன் காரணமாக பிரதான அரசியல் கட்சிகளின் மக்களை ஒன்று திரட்டும் முயற்சி தீவிரமாக இருந்தது.இவ்வருடம் மஹிந்த ராஜபக்ஸ முன்னர் போன்றல்லாது சிறிதும் அச்சமின்றி முழு மூச்சுடன் மே தின விடயங்களை முன்னெடுத்தார்.இதனை தனது பலத்தை நிரூபிக்கும் ஒன்றாகவும் கருதினார்.பொதுவாக அரசியல் கட்சிகள் சிறிய பரப்பினுள் கூட்டமொன்றை நடாத்தி,அங்கு சன நெரிசலை ஏற்படுத்தி,மக்கள் அதிகம் கலந்து கொண்டதான தோற்றத்தை ஏற்படுத்தி  தங்களது ஆதரவாளர்களை மகிழ்ச்சிப் படுத்துவதோடு உளவியல் ரீதியாக பலப்படுத்திக் கொள்வர்.இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது மே தினத்தை நடாத்துவதற்கு காலி முகத் திடலை தெரிவும் செய்தார்.முதலில் இவ் இடத்தை தெரிவு செய்ததற்கே அலாதித் துணிவு வேண்டும்.மஹிந்த ராஜபக்ஸ காலி முகத் திடலை தெரிவு செய்தமையை மஹிந்தவுக்கு எதிரான அணியினர் தங்களுக்கு சாதகமான விடயமாக கருதினர்.காலி முகத் திடல் 18 எக்கார் பரப்பளவு கொண்ட மிகப் பெரும் நிலப் பரப்பு என்பதால் அதனை மக்களால் நிரப்புவது சாதாரண விடயமல்ல எனவும் கருதினர்.சஜித் பிரேமதாசா போன்ற ஐக்கிய தேசிய கட்சியின் உயர் மட்டத்தினர் முடிந்தால் காலி முகத்திடலை நிரப்பிக் காட்டுமாறு மஹிந்த அணியினருக்கு பகிரங்க சவால் விட்டனர்.மஹிந்த அணியினர் இம்முறை இடம்பெற்ற  மே தினத்தின் போது தனது எதிரணியினரின் முகத்தில் கரியை பூசி அதனை நிரப்பி காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனை யாராலும் மறுக்க முடியாது.கடந்த ஒரு வார காலமாக இலங்கை மக்களின் வாய்களில் மஹிந்த ஒன்று கூட்டி காட்டிய மக்கள் எண்ணிக்கை பற்றிய கதைகளைத் தான் அவதானிக்க முடிந்தது.அதே நேரம் அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றோர் மக்களை திரட்டுவதால் ஆட்சி மாறாது என கூறி மகிந்தவின் மக்கள் செல்வாக்கை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

2016ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி நடாத்திய மே தின கூட்டத்தின் போது 75000 இற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.அவ் வருடம் ஐ.தே.க ஒன்று  கூட்டிக் காட்டிய  மக்கள் எண்ணிக்கையானது ஏனைய கட்சிகள் ஒன்று கூட்டிக் காட்டிய  மக்கள் எண்ணிகையை சிறிதும் எட்டாத காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சி தனது மக்கள் செல்வாக்கை உறுதியாக  நிலை நிறுத்துக்கொண்டது.இவ் வருடம் 65000 மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் எண்ணிக்கையானது 13.33 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது.இது மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது நம்பிக்கையிழந்து ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஒரு இருண்ட யுகத்தை நோக்கி பயணிப்பதை எடுத்துக் காட்டுகிறது.கடந்த முறை இடம்பெற்ற மே தினத்தில் மைத்திரி தலைமையிலான சு.க, முப்பதாயிரம் அளவிலானோரை ஒன்று கூட்டி இருந்தது.இம் முறை 58000 பேரை ஒன்று கூட்டியுள்ளது.இது 93.33 வீத அதிகரிப்பாகும்.கடந்த ஆண்டு மஹிந்த அணியினர் இருபத்தையாயிரம் அளவிலானோரை ஒன்று கூட்டி இருந்தனர்.இம்முறை ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரை ஒன்று கூட்டி இருந்தனர்.இது 300 வீத அதிகரிப்பாகும்.இவ் இரு வருட மக்கள் எண்ணிக்கையானது பல்வேறு விடயங்களை சுட்டிக் காட்டுகின்றது.தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் எந்தவிதமான அரசியல் அதிகாரங்களுமில்லை.ஏனைய ஐ.தே.க,சு.க அணியினரிடம் அனைத்து அதிகாரங்களும் உள்ளன.இவ்வாறான நிலையில் இவர்கள் அனைவரையும் புறந்தள்ளி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அதிகமான மக்களை ஒன்று கூட்டியுள்ளமை அவர் எட்ட முடியாத மக்கள் ஆதரவை தன் வசப்படுத்தியுள்ளார் என்பதை எடுத்து காட்டுகிறது.இம் முறை ஒன்று கூடியுள்ள மக்கள் எண்ணிகையை வைத்து நோக்கும் போது ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எண்ணிகையில் சிறிதளவே குறைவு உள்ளது.சு.காவின் மக்கள் எண்ணிகையில் பல மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இது சு.கவின் ஆதரவாளர்கள் கடந்த முறை யாரை ஆதரிப்பது என்ற சிந்தனையில் எவரையும் ஆதரிக்காது நடுநிலை பேணியுள்ளனர்.இம் முறை அனைவரும் ஒரு முடிவெடுத்து எவரையாவது ஆதரிக்க வேண்டும் என்ற ரீதியிலும் சிந்திக்க தோன்றுகிறது.கடந்த வருடம் ம.வி.மு 7000 அளவிலானோரையே ஒன்று கூட்டி இருந்தது.இவ்வருடம் 20000 அளவிலானோரை ஒன்று கூட்டி காட்டியுள்ளது.இவ்விடயமானது ம.வி.மு பாரிய வளர்ச்சி கண்டு வருவதை அறிந்து கொள்ளச் செய்கிறது.மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்த மக்கள் இவ்வாட்சியை கொண்டு வந்தார்கள்.அன்றைய ஆட்சியை விட இன்றைய ஆட்சி ஒப்பீட்டளவில் மோசமாகவே உள்ளது.இதன் காரணமாக இவ்விரு ஆட்சியாளர்களின் மீது வெறுப்புக் கொண்டு இலங்கை மக்கள் மூன்றாவது தெரிவான ம.வி.மு பக்கம் தங்களது பார்வைகளை திருப்புவதை வெளிப்படுத்தி நிற்கின்றது.

மைத்திரி தலைமையிலான சு.க அணியினரே ஐ.தே.கவின் மக்கள் எண்ணிகையை நெருங்கியுள்ளனர்.ஒரு கோணத்தில் நோக்கினால்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூட்டிய மக்கள் எண்ணிகையும் சு.கவின் மக்கள் எண்ணிக்கையாக குறிப்பிடலாம்.காலியில் இடம்பெற்ற மே தின கூட்டமும் எங்களுடையதென ஸ்ரீ.சு.க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவை இரண்டையும் ஒன்று சேர்த்து நோக்கினால் ஐக்கிய தேசிய கட்சியை விட பல மடங்கு மக்கள் பலத்தில் சு.க உள்ளது எனலாம்.சுதந்திர கட்சியானது இலங்கையின் பழம் பெரும் கட்சிகளில் ஒன்று.இக் கட்சியை உயர் நிலைக்கு கொண்டு போராடியவர்கள் இக் கட்சியை அழியாமல் பாதுகாக்கும் சிந்தனையில் இருப்பார்கள்.அன்று மைத்திரி சு.கவை உடைத்து வெளியேறிய போது மஹிந்த மீது பூரண திருப்தி இல்லாத போதும் சு.க தோல்வியை சந்திக்கப்போகின்றதே என மேடையில் அழுதவர்களும் உள்ளனர்.இன்று மைத்திரி தலைமையிலான சு.கவில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் கட்சி பற்றாளர்களே தவிர மைத்திரி அணியினர் அல்ல.அதிலுள்ள மேலும் சிலர் பதவியை நோக்காக கொண்டவர்களே.இவர்கள் அனைவருக்கும் மீண்டும் சு.கவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸ இணைவதே சிறந்ததாகும்.அப்போது தான் கட்சி பற்றாளர்கள் கட்சியை பாதுகாப்பார்கள்,பதவி மீது பற்றுக்கொண்டவர்கள் பதவிகளை பாதுகாத்து கொள்வார்கள்.தொழிலாளர் தினம் இடம்பெற்ற மறு தினமே மைத்திரியையும் மஹிந்தவையும் இணைப்பது தொடர்பிலான முயற்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியாக சு.கவை சேர்ந்த மைத்திரி இருந்தாலும் நாட்டின் அதிகாரமிக்க செயற்பாடுகளில் பிரதமரே ஈடுபட்டு வருகிறார்.இன்று ஐக்கிய தேசிய கட்சியை விட சு.க பல மடங்கு மக்கள் பலத்தில் உள்ள போது ரணிலுக்கு இத்தனை அதிகாரங்கள் இருப்பதை சு.கவை சேர்ந்தவர்களால் ஜீரணிக்க முடியாது.பல விடயங்களில் ரணிலும் மைத்திரியும் மோதிக் கொள்வதை அவதானிக்க முடிகிறது.இதன் பிற்பாடு மோதல் ஏற்படும் போதெல்லாம் சு.கவுடன் மகிந்தவை இணைத்து ஆட்சியமைக்கும் சிந்தனைகள் சு.கவினரிடையே எழும். ஜனாதிபதி மைத்திரியை பொறுத்தமட்டில் மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொள்வது மிகவும் ஆபத்தானது.மகிந்தவின் இத்தனை வீழ்ச்சிக்கும் இவரே பிரதான காரணகர்த்தாவாவார்.அவரை மஹிந்த ராஜபக்ஸ மன்னித்து கொள்வார் என்று நம்பினால் அவரைப் போன்ற ஏமாளியாக யாரும் இருக்க மாட்டார்கள்.இவருடைய செயற்பாடுகள் ஐ.தே.கவுடனான தனது பயணத்தை மீண்டும் உறுதி செய்து கொள்வதாக அமையும்.மே தினத்தை தொடர்ந்து இடம்பெற்ற அமைச்சரை கூட்டத்தில் ஐ.தே.காக்கும் சு.கவுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளை களைவதற்காக மைத்திரியினால் ஒரு யோசனை முன் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்த மக்கள் எண்ணிகையை எதிர்கொள்ளுமளவு ஐக்கிய தேசிய கட்சிக்கும் பலமில்லை.அவர்கள் தங்களது ஆட்சியை உறுதி செய்து கொள்ள மைத்திரியுடன்  பயணிப்பதே பொருத்தமானது.

இந்தளவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு  மக்கள் செல்வாக்கு அதிகரிக்க என்ன காரணம் என்பது மிகவும் ஆழமாய் சிந்திக்க வேண்டிய பகுதியாகும்.இவ்வரசு அமையும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மீது பலவாறான குற்றச் சாட்டுக்களை முன் வைத்தனர்.அக் குற்றச் சாட்டுக்களில் ஒன்றையேனும் இவர்களால் இது வரை நிரூபிக்க முடியவில்லை.அவர்களை விசாரணைக்கு அழைத்தல்,அவமானப்படுத்தல் போன்ற பல செயற்பாடுகள் இவ்வரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டன.அதிலும் குறிப்பாக யோசித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது மஹிந்த குடும்பத்தினர் கண்ணீர் சிந்தியமையானது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்ததோடு  அனுதாபத்தை பெறச் செய்திருந்தது.மேலும்,இவ்வாறானவற்றை அவதானிக்கும் போது மஹிந்த ராஜபக்ஸ மீது இவ்வரசினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் வெறும் போலியானவை என்பதை வெளிப்படுத்துகின்றன.அன்று மஹிந்த நாட்டை ஆட்சி செய்ததன் காரணமாக அவரது ஆட்சியில் அது நொட்டை இது சொட்டை என குறை கூறவும் விமர்சனம் செய்யவும் முடிந்தது.எப்போதும் விமர்சனம் செய்வதும் குறை கூறுவதும் மிக இலகுவானது.தற்போது அன்று குறை கூறியவர்கள் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.தற்போது அவர்களது ஆட்சியை மஹிந்த விமர்சித்து கொண்டிருக்கின்றார்.இவ்வாறான விமர்சனங்களையும் இன்றைய சவால்களையும் இவ்வரசினரால் முகம் கொடுக்க முடியாதுள்ளது.மிக நீண்டகாலமாக எதிர்கட்சி அரசியல் செய்து பழக்கப்பட்ட ஐ.தே.கவுக்கு ஒரு சிறந்த ஆட்சியை ஏற்படுத்திக் கொள்ள சில ஆண்டுகள் தேவைப்படும்.அவ்வாறான நேர இடைவெளி ஐ.தே.கவுக்கில்லை.

கடந்த வருட மே தினத்தை தொடர்ந்து மே இரண்டாம் திகதி மஹிந்த ராஜபக்ஸவின் இராணுவ பாதுகாப்பு குறைக்கப்பட்டிருந்தது.அதே போன்று இவ்வருடமும் மே தினத்தை தொடர்ந்து அவரது இராணுவ பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.இவ்வரசு அவரின் பாதுகாப்பை குறைப்பதனூடாக அவரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த சிந்திக்கலாம்.பல விடயங்களில் மஹிந்த ராஜபக்ஸவை குறை கூறினாலும் யுத்தத்தை முடித்த கதாநாயகனாக மக்கள் மனங்களில் இருப்பதை மறுக்க முடியாது.இதன் காரணமாக அவருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளமை மறுக்க முடியாத உண்மை.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அல்லாமால் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததால் உள்ள அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு விசேட பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவை இவ்வரசுக்குள்ளது.

இவ்வரசு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதன் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஸவின் அச்சுறுத்தல் உள்ளமை மறுக்க முடியாத உண்மை.இவ்வரசு எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டுகின்ற போதும் அதன் செயற்பாடுகள் திட்டமிட்டு மிகவும் மந்தகரியில் இடம்பெறுவது போன்ற தோற்றப்பாட்டை தற்போது அவதானிக்க முடிகின்றமை இதனை உறுதி செய்கிறது.இந் நிலையில் அவரது மே தின கூட்டத்தை பார்த்தால் இவ்வரசு இக் காலத்தில் தேர்தலை நடத்தாது என்றே எண்ணத் தோன்றுகிறது.இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஸ மே தின கூட்டத்தில் வைத்து தேர்தலுக்கான சவாலை விடுத்துள்ளதால் தேர்தலை இன்னும் காலம் தாழ்த்துவது மிகவும் ஏளனமான செயலாக அமைந்துவிடும்.முன்னாள் ஜனாதிபதி பகிரங்கமாக தேர்தலை நடாத்துங்கள் என சவால் விட்டுள்ள போதும் அதனை ஏற்க யாருமே தயாரில்லை.எல்லை நிர்ணயத்தை இனியும் காரணம் காட்ட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இறுதியாக கூறப்போனால் இவ்வாண்டு மஹிந்த ராஜபக்ஸ ஒன்று கூட்டி காட்டிய மக்கள் எண்ணிக்கையினூடாக ஐ.தே.க.சு.க ஆகியவற்றை மதி கலங்கச் செய்துள்ளார் என்பதே யதார்த்தமாகும்.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 15-05-2017ம் திகதி திங்கள்  கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது *அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 81வது கட்டுரையாகும்.*

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.