Pages

.

.

Thursday, January 19, 2017

பிரதி அமைச்சர் ஹரீஸ் எனது கருத்தை ஏற்றார்

(இப்றாஹீம் மன்சூர்)

சில நாட்கள் முன்பு நான் “பிரதி அமைச்சர் ஹரீஸ் மாலைதீவு சென்றிருக்க தேவையில்லை” என்ற கட்டுரையை எழுதியிருந்தேன்.அக் கட்டுரையில்  கல்முனை பிரதேசத்தை சேர்ந்த  காணாமல் போனா ஆறு மீனவர்களும் இத்தனை இடர்களை எதிர்கொள்ள அவர்களிடம் தொலைத் தொடர்பு சாதனமும் அதனை பயன்படுத்தக் கூடிய அறிவும் இல்லாமையே பிரதான காரணம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்.

இதனை எழுதியவுடன் என்னை நோக்கி சில நபர்களிடமிருந்து (மு.காவின் மடத்தனமான போராளிகளிடமிருந்து) பலமான எதிர்ப்புகளை அவதானிக்க முடிந்தது.இதற்கெல்லாம் மனம் சோர்ந்து போபவன் நான் அல்ல.யார்? என்ன? கூறினாலும் பிரதி அமைச்சர் ஹரீசே எனது கருத்தை பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்.அப்போது என்னை எதிர்த்தவர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள்?

பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது அறிக்கையில்

“பிரதி அமைச்சர் ஹரீஸ் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட மீனவர்களுடன் அவர்களது கசப்பான அனுபவங்கள் குறித்து கலந்துரையாடிய போது இம் மீனவர்கள் காணாமல் போனமைக்கு தொலைத் தொடர்பு சாதனங்கள் இல்லாமையே பிரதான காரணம் என்பதை உணர்ந்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அல் ஹம்துலில்லாஹ்

இது தொடர்பில் பிரதி அமைச்சர் ஹரீஸ் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்து உரையாடியுள்ளார்.இதன் போது மீனவர்களுக்கு தொலைத் தொடர்பு சாதங்களை வழங்குமாறு வேண்டுகோலும் விடுத்துள்ளார்.பிரதி அமைச்சர் ஹரீசின் வேண்டுகோளை ஏற்று அதற்கான நடவடிக்கைகளை செய்ய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.அதாவது,இதனை ஏற்பாடு செய்து கொடுப்பது  ஒரு அரசியல் வாதியின் கடமை என்பதை இதனூடாக மிக இலகுவாக புரிந்து கொள்ளலாம்.இதனை தான்,நான் எனது கட்டுரையினூடாக குறிப்பிட்டிருந்தேன்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் இதற்கு முன்பு  ஒரு நாள் ஒரு மீனவரிடம் சென்று அவரின்  தேவைகள் குறித்து கேட்டறிந்து இதனை ஏற்பாடு செய்திருந்தால் அவர் மாலைதீவு சென்றிருக்க தேவையில்லை தானே? இப்போதாவது இதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

எனது கருத்தை ஏற்றுக்கொண்ட பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எனது நன்றிகள் கோடி உரித்தாகட்டும்.

0 comments:

Post a Comment