Pages

.

.

Tuesday, January 24, 2017

அட்டாளைச்சேனை ஹசனலி முரண்பாடே ஹக்கீமின் முதலீடு

(இப்றாஹீம் மன்சூர் : கிண்ணியா)

பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ஹக்கீம் செய்விக்க வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகி வருகிறது.இங்கு அனைவரும் ஒரு விடயத்தை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

அமைச்சர் ஹக்கீம் தேசியப்பட்டியலை இத்தனை காலமும் வழங்காது இழுத்தடிப்புச் செய்ய அட்டாளைச்சேனை ஹசனலி முரண்பாடே பிரதான காரணமாக முன் வைக்கப்படுகிறது.இவர்கள் இருவரும் ஒரு உடன்பாட்டிற்கு வந்தால் அமைச்சர் ஹக்கீம் எதுவித சாட்டும் சொல்ல முடியாத நிலைக்கு வந்துவிடுவார்.இப் பிரச்சனைகளை இழுத்தடிப்புச் செய்வதற்கான அவருடைய முதலீடும் இது தான்.

இருவரில் யாருக்கு வழங்குவது என்பதில் பிரச்சினை இருந்தாலும் முதலில் இரு குழுவினரும் இணைந்து காலம் தாழ்த்தாது சல்மானின் தேசியப்பட்டியல் ஆளுகையை முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதானால் அது யாருக்கு வழங்குவது என்பதில் முரண்பாடு காணப்பட்டாலும் அட்டாளைச்சேனைக்கே தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்பதில் அட்டாளைச்சேனை மக்கள் எப்படி ஒரு முடிவிற்கு வந்தார்களோ அதே நிலைப்பாட்டை சல்மான் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற விடயத்திலும் எடுக்க வேண்டும்.

இதன் பிறகும் அவர் சாட்டுப் போக்கு சொல்லுவாராக இருந்தால்,தனது நெருங்கிய நண்பன் மீது கொண்ட பாசத்தினால் அவர் தேசியப்பட்டியல் வழங்கினாரா? அல்லது உண்மையில் நிர்ப்பந்தத்தினால் தான் தேசியப்பட்டியல் வழங்கினாரா? என்ற அவரது உண்மை முகத்தை அறிந்து கொள்ளலாம்.


0 comments:

Post a Comment