Pages

.

.

Wednesday, May 24, 2017

நல்லாட்சியின் எனும்  பேயாட்சி

எமது வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளினூடாகவும் பலவிதமான படிப்பினைகளை பெற்றுக்கொள்ளலாம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆட்சி பீடத்திலிருந்து விரட்டி  கொண்டு வந்த ஆட்சிக்கு நல்லாட்சியென  பெயர் சூட்டி அழைத்து,அவ் ஆட்சியை யாவரும் பெருமைப்படுத்தினார்கள்.இன்று அவ் ஆட்சி சென்று கொண்டிருக்கும் பாதையை பார்க்கும் போது நல்லாட்சி என்ற பெயருக்கு இவ் ஆட்சி எந்த விதத்திலும் தகுதியற்றதாகும்.இதனூடாக எப்போதும் மனித சிந்தனைகள் ஒரு எல்லைக்குட்பட்டது தான் என்ற படிப்பினையை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம்.

மாணிக்கமடு விவகாரம்

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இறக்காம பிரதேசமானது  சிறுபான்மையினர் வாழும் பிரதேசமாகும். அந்த பிரதேசத்தில் மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது.இப் புத்தர் சிலை தொல் பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான காணியிலே வைக்கப்பட்டுள்ளது. தொல் பெருள் திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் எந்த விதமான நிர்மாணங்களையும் செய்ய முடியாது. இச் சட்டத்தில் புத்தர் சிலைகளுக்கு மாத்திரம் எந்த  விதி விலக்கும் வழங்கப்படவுமில்லை. அதாவது இங்கு சில வைப்பதாக இருந்தால் தொல் பொருள் இடங்களில் புத்தர் சிலை  வைக்க அனுமதியுள்ளதென சட்டத்தை மாற்ற வேண்டும். முதலில் இப் புத்தர் சிலை நிறுவப்பட்டமையானது சட்டத்துக்கு முரணான செயலாகும். அதற்காகவே அக் குழுவினர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனை மு.கா சட்டரீதியாக கையாள வழக்குத்தாக்கல் செய்திருந்தது. இவ் விடயமானமது நேரடியாக சட்டத்துடன் தொடர்புபடுவதால் இவ் விடயத்தில் மு.கா வழக்குத் தாக்கல் செய்திருந்தமை ஒரு கோணத்தில் சிறந்த வழி முறையாக இருந்தாலும் குறித்த சிலை நிருவலாளர்கள் சட்டத்தை மதிப்பவர்களாகவும் இலங்கை அரசு சட்டத்தை நிலை நிறுத்த எதையும் செய்யும் ஆற்றல் படைத்ததாகவும் இருக்க வேண்டும். ஞானசார தேரர் நீதி மன்ற உத்தரவையே அவமதித்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இப்படி இருக்கையில் வழக்குத் தாக்கல் செய்து இதனை சாதிக்க முடியும் என நம்புவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசை பட்ட கதையாகவே அமையும். இருந்த போதிலும் இவ்விடயத்தில் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் மிகவும் சிரத்தை எடுத்திருந்தமையை மறுக்க முடியாது. இச் சிலையை அகற்ற  இயலுமான அத்தனை வழிகளையும் பயன்படுத்த வேண்டும்.அந்த வகையில் இதுவும் ஒரு வழியாகும்.நீதி மன்றம் சிலை நிருவலாளர்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்கிவிட்டால் அது முஸ்லிம்களுக்கு மிகவும் சாதகமாகவும் அமைந்துவிடும்.

 இது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் உள்ளதன் காரணமாகவும் மாணிக்கமடு பிரதேசமானது தடை செய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதன்  காரணமாகவும் அவர்கள் சிறிதளவாவது சட்டத்தை மதிப்பவர்களாக இருந்தால் குறைந்தது நீதி மன்ற தீர்ப்பு வரும் வரையாவது அங்கு எந்த வித மத அனுஸ்டானங்களை செய்யாமல் பொறுமையாக இருந்திருக்க வேண்டும். கடந்த பத்தாம் திகதி வெசாக் தினமன்று அங்கு பௌத்த தேரர்களினால் மத அனுஸ்டானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீதி மன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகாம வரும் என நினைத்திருந்தால் இவ்வாறு நீதி மன்ற தடையை மீறி செயற்பட முனைந்திருக்க மாட்டார்கள்.இதனூடாக முஸ்லிம்களின் நீதி மன்ற நாடுகை தங்களது சாதகாமான பதிலை வழங்காதென குறித்த இனவாதிகள் கருதி இருக்கலாம். அங்கு மேற்கொள்ளப்பட்ட மத அனுஸ்டானத்துக்கு பாதுகாப்பு படையினரின் அதி உச்ச பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. நீதி மன்றத்தின் கட்டளையை மீற பாதுகாப்பு படையினர் உதவி நல்கியுள்ளனர்.ஒரு நாட்டில் அனைவரும் இறுதியாக நாடிச் செல்கின்ற நீதி மன்றத்தின் கட்டளையை செயற்படுத்த வேண்டிய பாதுகாப்பு படையினர் அதனை மீறுவதற்கு உதவி செய்வது இந் நாடு நீதியற்ற பாதையில் பயணிப்பதை சுட்டிக்காட்டுகிறது. இதுவெல்லாம் முஸ்லிம்களுக்கும் இந் நாட்டின் எதிர்காலத்துக்கும் சிறந்த சமிஞ்சைகள் அல்ல. இன்று பலர் ஒரு தவறு செய்கின்ற போது அது நீதி மன்றத்தில் நிரூபணமானால் தனக்கு இத் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தின் காரணமாக பல விடயங்களை செய்யாது தவிர்ந்து கொள்கின்றனர். அதே நேரம் தனது இந்த அதிகாரத்தை பாவித்தால் நீதி மன்றத்தால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டால் அத் தவறை அஞ்சாமல் செய்வோம். நீதி மன்றத்தை கூட கணக்கில் எடுக்காமல் செல்லும் செயற்பாடுகளானது எதிர்கால பௌத்த தேரர்களுக்கு தவறான பாதையை காட்டி வம்.கடந்த வெசாக் தினமன்று மாணிக்கமடுவில் அதிகமான இளம் வயதுடைய பௌத்த தேரர்கள் கலந்துகொண்டதாக அறிய முடிகிறது.இவர்கள் தவறான வழியின் பால் நடைபயில இவைகள் வழி சமைக்கும் என்பதில் மாற்றமில்லை. இன்றைய ஒரு ஞானசார தேரரால் பல ஞானசார தேரர்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றார்கள்.

இங்கு மாத்திரம் புத்தர் சிலை நிறுவப்படுமாக இருந்தால் ஒன்று தானே என்று பொறுமையுடன் இருந்து விடலாம். அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தொல் பொருள் திணைக்களத்துக்குரிய இடங்கள் உள்ளன.இதனை வேடிக்கை பார்க்கும் போது ஒவ்வொரு இடமாக சில வைத்து வரக் கூடிய அச்சம் தோன்றியுள்ளது.இங்கு சில வைப்பதை ஏற்றுக்கொண்டீர்கள்,ஏன் அங்கு வைப்பதை எதிர்க்கின்றீர்கள் என கேட்டால் எதுவும் கூற முடியாது போய் விடும். தற்போது அச் சிலைக்கு அருகாமையில் பௌத்த மதஸ்தலம் ஒன்றை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கான எல்லை நில அளவைகள் கூட முடிந்துவிட்டன. இப் பௌத்த மதஸ்தலமானது தமிழ் மதத்தை சேர்ந்த ஒரு தனி நபரின் காணி என்பது குறிப்பிடத்தக்கது. அன்றே தீகவாபிக்கு செல்லும் பக்தர்கள் தங்கிச் செல்ல ஒரு மடம் அமைக்கடப் போகிறது என்ற கதை பிசு பிசுத்திருந்தது.அது மீண்டும் ஆறு மாதங்களின் பின் பௌத்த விகாரை அமைக்கப்படப்போவதாக மாறியுள்ளது. இதற்கெல்லாம் இவர்கள் கற்பிக்கும் நியாயம் இங்கு பல வருடங்களுக்கு முன்பு சிலையும் பௌத்த விகாரையும் இருந்தது என்பதாகும். முன்பொரு காலத்தில் சிலையும் பௌத்த விகாரையும் இருந்திருந்தால் முதலில் அவற்றுக்கான ஆதாரங்கள்  வெளிப்படுத்தப்பட வேண்டும். அது யாரால் உடைக்கப்பட்டது என்ற வரலாறுகள் தேடப்படல் வேண்டும். தொல் பொருள் இடங்களை அது  இன்று எவ்வாறு உள்ளதோ அவ்வாறே பாதுக்காப்பட வேண்டுமே தவிர அவைகள் முன்னர் இருந்தது போன்ற புணரமைக்கப்பட முடியாது. அதன் அழிவுகள் கூட சில வரலாற்றை நினைவு கூறும் என்பது குறிப்பிடத்தக்கது. அவைகள் மீள புணர் நிர்மாணம் செய்யப்படும் போது தொல் பொருள் இடம் என்ற அந்தஸ்தை இழந்துவிடும். இவைகள் தொல் பொருள் இடங்களாக இருந்தால் இங்கு கட்டட  நிறுவல்களுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக அவர்களே குறித்த இடங்களை பாதுகாக்கின்றனர். இச் சிலை நிறுவலுக்கும் கட்டட நிறுவலுக்கும் இவற்றினை நிறுவ முயற்சிப்பவர்கள் கூறும் நியாயங்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவையல்ல.

மாணிக்கமடுவில் சிலை வைக்கப்பட்ட போது முஸ்லிம்கள் கொதித்து எழுந்த போதும் அவர்களின் கொதிப்புக்கள் சில நாட்களிலேயே அடங்கிவிட்டது. தொடர்ச்சியான அழுத்தங்களை யாருமே வழங்கவில்லை. அன்று பௌத்த மக்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை எதற்கு போன்ற கருத்துக்களை அமைச்சர் ராஜித கூறியிருந்தார். இவற்றை சாதகமாக பயன்படுத்தி அதனை நீக்க அதன் பின்னால் உறுதியாக நின்றிருக்க வேண்டும். இன்று இந்த சிலை வைப்பானது விமர்சனத்தை தோற்றுவித்துள்ளதால் இச் சிலைக்கு ஏதேனும் பாதிப்புக்கள் நிகழுமாக இருந்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இலங்கை நாட்டில் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களே இச் சிலையை உடைத்துவிட்டு முஸ்லிம் மக்கள் தலை மீது பழி போட்டால் இலங்கை முஸ்லிம்களின் நிலை என்னவாகும்? அதே போன்று முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு ஏதேனும் செய்துவிட்டால் அதன் விளைவுகளை சுமக்க போவது யார்? குறித்த இடத்தில் பன்சலை அமையப்பெறுமாக இருந்தால் அதனை சுற்றி சிங்கள மக்களின் நடமாட்டம் அதிகரிக்கும். அங்கு அவர்களின் மத அனுஸ்டானங்கள் இடம்பெறும். அம்பாறை மாவட்டத்தில் அவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். அதே போன்று அதனை சுற்றியுள்ள சிறுபான்மையினர் தங்களது காணிகளை குறைந்த விலைக்காவது விற்பனை செய்துவிட்டு ஓடும் நிலை ஏற்படும். அவர்கள் தீகவாபியை தளமாக கொண்டு அம்பாறை மாவட்டத்தின் பாரிய நிலப்பரப்பை தங்கள் வசப்படுத்திக்கொள்வர்.பொத்துவில் தொகுதியில் அமைந்துள்ள ஒலுவில் முஸ்லிம் கிராமத்தை உள்ளடக்கியதாக தீகவாபி பிரதேச சபை ஒன்றை நிறுவுவதற்கான கதையாடல்கள் பல ஆண்டு காலமாக உள்ளன. அவற்றுக்கு இப் பிரதேசத்தை அவர்கள் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது வலுச் சேர்க்கும். அண்மையில் ஒலுவில் அஷ்ரப் நகர் வீதி தீகவாபி வீதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தீகவாபிக்கு புனித பிரதேசத்துக்கு சொந்தமானதென பேரினவாதிகள் முஸ்லிம் கிராமங்களை தங்களுடையதென உரிமை கோருகின்றமை குறிப்பிடத்தக்கது. அது போன்று அண்மையில் அமைச்சர் தயா கமகே தீகவாபியை சுற்றியுள்ள 12000 ஏக்கர் காணி தீகவாபி புனித பிரதேசத்துக்கு சொந்தமானதென அம்பாறை மாவட்டத்தின் பல முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் தீகவாபிக்கு போகும் வழியில் தங்க தங்குமிடம் ஒன்றை  அமைக்கப்போவதாக கூறியவர்கள் தற்போது அங்கு பன்சலை நிறுவலுக்கான ஆதாரங்களை முன் வைக்கின்றனர். இவற்றை எல்லாம் வைத்து சிந்தித்தால் இவற்றின் பின்னால் பாரிய சதி ஒன்று உள்ளமை தெளிவாகிறது.

மாணிக்கமடு விவகாரத்தில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தலையீடு செய்துள்ளார். அங்கு சென்ற ஞானசார தேரர் அங்கு சென்று விகாரை அமைப்பதற்கு தனது பூரண ஆதரவை வழங்கியுள்ளார். மேலும்,முஸ்லிம்கள் செறிந்து வாழும் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள விகாரைக்கும் தான் விஜயம் செய்ய போவதாக கூறியுள்ளார். இவரின் இக் கூற்றில் பல விடயங்கள் உள்ளன. இவர் ஏன் அக்கரைப்பற்று விகாரைக்கும் தான் விஜயம் செய்யப்போவதாக கூற வேண்டும்? அதாவது இவர்கள் தங்கள் ஆதிக்கத்தை பௌத்த மதஸ்தலங்கள் ஊடாகவே நிறுவி வருகின்றனர் என்பதை அச் செய்தி வெளிப்படுத்துகிறது. இறக்காமத்தில் பன்சலை அமையப்பெறுவதனூடாக  தங்கள் ஆதிங்களை அதிகரிப்பது இவர்களது நோக்கங்களாக இருக்கலாம். இங்கு சிலை வைக்க வருபவர்களின் செயற்பாடுகளானது பொது பல சேனாவின் செயற்பாடுகளுக்கு ஒத்ததாகவே உள்ளது. இதன் பின்னணியில் பொது பல சேனா இருப்பதாக காட்டாமல் இத் திட்டத்தை செயற்படுவது அவர்களது நோக்கமாக இருக்கலாம். குருநாகலில் பொது பல சேனா அமைப்பானது தனது முகத்தை வெளிக்காட்டாமலேயே முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாட்டை முன்னெடுத்ததாக அவர்கள் பகிரங்கமாக பெருமை பாராட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு முஸ்லிம்களின் எதிர்ப்புக்கள் அதிகமாக இருப்பதால் இறுதியில் தங்களது முகத்தை வெளிக்காட்டி செய்ய வேண்டிய நிலைக்கு பொது பல சேனா அமைப்பினர் தள்ளப்பட்டிருக்கலாம்.

*மாவில்லு வர்த்தமானி*

மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதை போன்றே மாவில்லு வர்த்தமானி பார்க்கப்படுகிறது. 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இருந்து இரவோடு இரவாக விரட்டியடிக்கப்பட்டனர்.அவர்கள் அங்கிருந்து வெளியேறிய பின் அங்கு உயர்ந்த மரங்கள் வளர்ந்து காடுகளாக மாறின. ஏற்கனவே வில்பத்து வனத்துக்கு அருகாமையில் இக் காணிகள் இருந்தமையால் மரங்களோடு மரங்கள் சேர்ந்து காடுகளாக தோற்றமளித்தன.யுத்தம் முடிந்த பிறகு தங்களது பூர்வீக குடிகளில் குடியமரலாம் என்ற  மகிழ்ச்சியோடு சென்ற மக்களை நோக்கி பெரும் பான்மையின இனவாதிகள் போர்க்கொடி தூக்கினர். முஸ்லிம்களின் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் தடுக்கப்பட்டது. அந்த வகையில் 2012ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை வில்பத்து வனத்துக்கு சொந்தமான காணிகளாக வர்த்தமாணிப்படுத்தினார். அதில் முஸ்லிம்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டிருந்தது.அந்த அநீதியை இன்று வரை திருத்திக்கொள்ள முடியாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.இருந்தாலும் அதற்கு பகரமான காணிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் ஒரு குறித்த தொகை (முழுமையான அளவல்ல) வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அப்படி இருக்கையில் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் அரசு மீண்டும் அப் பகுதி முஸ்லிம்களின் தலையில் இடியை விழச் செய்துள்ளது. ஜனாதிபதி மைத்திரி வெளிநாட்டில் இருக்கும் போது மாவில்லு வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளார். அப்படி ஜனாதிபதி மைத்திரிக்கு என்ன அவசரம் என்று சிந்தித்தாலே இவ்விடயத்தில் இனவாதிகளின் வாசிப்புக்கு ஜனாதிபதியின் ஆட்டம் தெளிவாகிறது.

அன்று மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் வனமாக வர்த்தமானிப்படுத்தப்பட்ட போது அன்று அதனை யாருமே அறிந்திருக்கவில்லை.2015ம் ஆண்டு `காலப்பகுதியிலே அது வெளிச்சத்துக்கு வந்திருந்தது.அன்று அதனை யாருமே அறிந்திருக்காகத்தான் காரணமாக அது விடயத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகளை குறை கூற முடியாது. அப்படி குறை கூற வேண்டுமாக இருந்தால் அவர்கள் அக் காலத்தில் அது தொடர்பில் சுட்டிக்காட்டியவர்களாக இருக்க வேண்டும். அன்று முஸ்லிம்களுக்கு தெரியாமல் இவ்விடயம் அரங்கேற்றப்பட்டமையனது பிழையானது என ஒரு வகையில் கூறினாலும் இன்னுமொரு வகையில் எமது முஸ்லிம் மக்கள் இவ்வாறான வர்த்தமானியில் அன்று கவனம் இல்லாமல் இருந்திருக்கலாம். அக் காலத்தில் இப்படியான ஒரு சதி நிகழலாம் என்ற சிந்தனை இருக்கவில்லை. இருந்தாலும் இப்படியானதொரு சதி நிகழ்ந்துவிட்டது என இருக்காமல் அவ் வர்த்தமானியை மீளப் பெறுவதில் எமது முஸ்லிம் சமூகம் உறுதியாக இருக்கவில்லை. ஆறிய கஞ்சு பழங் கஞ்சு என்பது போல அவ் விடயம் தொடர்பில் பெரிதும் கவனம் செலுத்தப்படவில்லை.

இன்று மாவில்லு வர்த்தமானியை ஜனாதிபதி மைத்திரி வெளிநாட்டில் இருந்து தனது கையொப்பத்தை இட்டு அனுமதித்துள்ளார். வெளிநாட்டில் இருந்தவாறு கையொப்பம் இடுமளவு ஜனாதிபதி மைத்திருக்கு என்ன அவசரம். இந்த அவசரத்தின் பின்னால் இனவாத அழுத்தங்கள் இருக்க வேண்டும் என்றே பெரிதும் நம்பப்படுகிறது. இன்று வில்பத்து வனத்தை அண்டிய முசலி பிரதேச காணிகள் தொடர்பில் அப் பகுதியில் முன்னர் வாழ்ந்த,வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கும் சில இனவாதிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவுகிறது. இவ் விடயத்தில் பாரிய பிரச்சினைகள் இருப்பது யாவரும் அறிந்ததே.இங்கு ஏதாவது ஒரு முடிவு எடுப்பதானால் அது தொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் கலந்துரையாடியே  ஜனாதிபதி மைத்திரி எடுத்திருக்க வேண்டும். ஒரு வர்த்தமானி வெளியிடப்பட்டு அதனை மீளப் பெறுவது பெரிய விடயமல்ல.கு றித்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் அதனை ஏற்றுக்கொண்டு மீளப் பெறுமாறு கூறினால் போதுமாகும். இது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் நிலவுகின்ற போது இவ்வாறு செயற்படுவதானது இனவாதிகளின் வாதத்தை வலுக்கச் செய்யும்.மீளப் பெறும் நடவடிக்கைகளுக்கு எதிராக இனவாதிகள் கிளர்ந்து எழுந்தால் அது நிச்சயம் தாக்கம் செலுத்தும். அப்படி இருக்கையில் முஸ்லிம்,தமிழ் அரசியல் வாதிகளிடம் வினவாது இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி செயற்பட்டுள்ளமையானது இனவாதிகளின் ஊதல்கள் மைத்திரியின் காதுகளை நிறைத்துள்ளதை அறிந்து கொள்ளச் செய்கிறது.ஜனாதிபதி மைத்திரி முஸ்லிம்களை புறக்கணித்த பாதையில் பயணிப்பதையும்  எடுத்து காட்டுகிறது.

*கல்குடா மதுபான தொழிற் சாலை*

இலங்கையில் இருக்கின்ற மதங்களில் பௌத்த மதம் உட்பட அனைத்து மதங்களும் மதுபானம் அருந்துவதை தடை செய்துள்ளது.மதங்கள் தடுக்கின்றவோ இல்லையோ அனைவரும் அதனை பிழையான செயலாக கருதுகின்றனர்.இன்று தமிழ் நாட்டிலே பெண்கள் மதுபான சாலைகளை முன்னின்று உடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வரசு ஆட்சிக்கு வரும் கோசங்களில் போதைப் பொருள் ஒழிப்பு கோசம் முதன்மையாக இருந்தது. மைத்திரி ஆட்சியமைத்து போதை பொருளை ஒழிப்பதாக ஓரிரு நிகழ்வுகளையும் நடாத்தி இருந்தார். இன்று இலங்கை நாட்டில் போதை பொருள் பாவனை தலை தூக்கியுள்ளதை கொழும்பு பிரதேசத்தில் பல வருடங்கள் முன்பிருந்தது போன்று குடுக் காரர்கள் நடு வீதிகளில் படுத்துறங்குவதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இவைகள் இவ்வரசின் ஆட்சிக் காலத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டுகின்ற போதும் இவ்வரசை மீறி இவைகள் நடக்கின்றன  என்ற வாதத்தை முன் வைத்து சிறிதளவு தப்பித்துக்கொள்ளலாம்.இவ்வாட்சி காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பிரதேசத்திலே மிகப் பெரும் மதுபான சாலை ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.இதுவும் தன்னை அறியாமலேயே நடக்கின்றது என சிறிதளவும் நியாயம் கற்பிக்க முடியாது.இவ்விடயமானது இலங்கையில் போதை பொருள் பாவனை அதிகரிப்பிற்கு இவ்வரசே காரணம் என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.குறித்த நிறுவனத்தை WD மென்டிஸ் என்ற நிறுவனமே ஆரம்பித்துள்ளது.இந் நிறுவனமானது மத்திய வாங்கி ஆளுநரின் மருமகனுடையது.மத்திய வங்கி ஆளுநர் யாருடைய ஆள் என்பது யாவரும் அறிந்ததே.குறிப்பாக இந்த நிறுவனத்துக்கு வரி விலக்கு அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில தமிழ் நாட்டில் பெண்கள் மது பான சாலைகளை உடைக்கின்ற போதும் பௌத்த மதத்தை காக்கப்போவதாக முஸ்லிம்களுக்கு பல இன்னல்களை வழங்கி கொண்டிருக்கும் பொது பல சேனா அமைப்பானது இவ்வாறான விடயங்களை தங்களது காதுகளுக்கும் எடுக்கவில்லை. இதனை எதிர்க்க அவர்களுக்கு கொந்தராத்து வழங்கப்படாமல் இருக்கலாம். இன்று கல்குடாவிலே மிகப் பெரிய மதுபானசாலை ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதனூடாக இவர்கள் தங்கள் மதத்தையே பூரணமாக பின்பற்றுபவர்களல்ல என்பதை கூறி நிற்கின்றது.இருப்பினும் இன்று இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்கின்ற பிரதேசங்கள் தவிர்ந்து ஏனைய பிரதேசங்களில் மதுபான விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன.இவ்வரசானது மதுபான சாலை ஒன்றை அமைக்க சிந்தித்தால் முஸ்லிம்கள் அதிகம் செறிந்து வாழும் பிரதேசங்களை தவிர்த்து கொள்ள வேண்டும்.இருப்பினும் இத் தொழிற்சாலை அமைப்பிற்கு எத்தனையோ இடங்கள் இருந்தும் இவ்விடம் தெரிவு செய்யப்பட்டதில் இனவாத சூழ்ச்சிகள் இருக்கலாம்.குறிப்பாக இவ்வாறான நிறுவனங்களை நிறுவுவதற்கு மாகாண மற்றும் பிரதேச சபை அனுமதிகள் பெறப்பட வேண்டும்.அவ்வாறான எந்த அனுமதிகளும் இங்கு பெறப்படாமல் நேரடியாக மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.இப்படி ஒழித்து இந் நிறுவனத்தை கொண்டு வந்த விடயமே இதில் வேறு சில சூழ்ச்சிகள் இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இன்று இலங்கை நாட்டில் சிறுபான்மையின மக்களை நோக்கி பல்வேறு சதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.அவற்றில் மிக முக்கியமானது முஸ்லிம்களின் பொருளாதரத்தை முடக்குவதாகும்.முஸ்லிம்களை குடிப் பழக்கத்துக்கு அடிமையாக்குவதன் மூலம் மிக இலகுவாக அவர்களது பொருளாதாரத்தை அழித்துவிடலாம்.இஸ்லாத்தில் வட்டி தடை செய்யப்பட்டுள்ள போதும் முஸ்லிம் பிரதேசங்களில் வட்டிக் கடைகளாக வங்கிகள்  மலிந்து காணப்படுகின்றன.அங்கு சென்று அடகு வைத்தல் போன்ற விடயங்கள் பெரும் பாவமான விடயமாக யாரும் கருதுவதில்லை.இவ்வாறான நிறுவனங்கள் நிறுவப்படுவதனூடாக மதுபானம் அருந்துவதும் ஒரு சாதாரண விடயமாக மாறும்.இங்கு பலவாறான தொழில் வாய்ப்புக்களை வழங்கி இதற்கான எதிர்ப்புக்களை கட்டுப்படுத்த இதன் நிருவனவாளர்கள் சிந்திக்கலாம் இவ்விடயத்தில் சிறுபான்மையின மக்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள சிலர் இதற்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.அது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சிலர் பகிரங்க நிகழ்வுகளிலும் இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இருந்த போதிலும் தமிழ் மக்களின் பலமான எதிர்ப்பின் காரணமாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நேரடியாக தங்களது எதிர்ப்பை வெளிக்காட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இவ்விடயத்தில் கல்குடா பிரதேசத்தில் முஸ்லிம்கள் ஜும்மா தொழுகையை தொடர்ந்து மிகப் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.ஒரு பாதையினூடாகவே தௌஹீத் ஜமாத்தும் கல்குடா ஜம்மியத்துல் உலமாவும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.இவ்விடயத்தில் இவ் இரு அமைப்பும் இணைந்து ஏன் செயற்பட முடியாது.இவ்விடயத்தில் மத,குழு வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவதே வெற்றியை தரும்.ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பௌத்த மத தேரர் ஒருவர் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

*குறிப்பு: இக் கட்டுரை இன்று 24-05-2017ம் திகதி  புதன் கிழமை  கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 82வது கட்டுரையாகும்.*

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Tuesday, May 23, 2017

இனவாதிகள் விடயத்தில் அரசை காப்பாற்ற முன்பு கூறிய உண்மையை மறுக்கும் ஹக்கீம்

21-05-2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஹக்கீம் காத்தான்குடி நூரானியா மையவாடி சுற்று மதிளினை கையளிக்கும் நிகழ்வில் இனவாதிகளின் இன்றைய செயற்பாடுகள் குறித்து பேசியிருந்தார். அவருடைய பேச்சில் முன்பு அரசாங்கத்தின் அனுசரணை இல்லாமல் இவ்வாறான செயற்பாடுகள் நீடிக்க முடியாது என கூறிய அமைச்சர் ஹக்கீம் பின்பு இது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சதியாக சுட்டிக் காட்டுகிறார்.

அவரது குறித்த  உரை (எவ்வித மாற்றமுமின்றி)

//////  “அரசாங்கத்தின் அனுசரணை இல்லாமல் இருந்தால் இந்த எந்த விசயமும் நீடிக்க முடியாது என்பது மிகத் தெளிவான விசயம்.அரசாங்கம் இது தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மிகத் தெளிவாக உள்ளோம். ஆனால்,இது திட்டமிடப்பட்டு வேண்டுமென்று இந்த அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை இல்லாமல் செய்து ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவது இவர்களது பிரதான நோக்கம். இந்த கட்டத்திலே அதிலும் குறிப்பாக இந்த நாட்டின் போக்கிலே தங்களுக்கு சாதகமான விடயங்கள் நடக்கவில்லை என்பதற்கான சர்வதேச சக்திகள் இதன் பின்னால் இருப்பது நாங்கள் முழுமையாக ஒதுக்க முடியாத ஊகமாகும்.” //////

பொது பல சேனாவின் பிரச்சினை இவ்வரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கடந்த இரு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றமை என்பது யாவரும் அறிந்ததே. தற்போது அது உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. அமைச்சர் ஹக்கீமின் “அரசாங்கத்தின் அனுசரணை இல்லாமல் இருந்தால் இந்த எந்த விசயமும் நீடிக்க முடியாது என்பது மிகத் தெளிவான விடயம்” என்ற கூற்றானது இவ்விடயங்களின் பின்னால் இவ்வரசின் அனுசரணை இருப்பதை கூறுகிறது. நாம் இதனை இனவாதங்களின் பின்னால் இவ்வரசின் அனுசரணை உள்ளது என்பதாக எடுத்துக் கொள்ளாது போனாலும் இவ் விடயங்கள் நீடிப்பதன் காரணமாக,அமைச்சர் ஹக்கீமின் இக் கூற்றினூடாக இவ் இனவாதங்களின் பின்னால் இவ்வரசு உள்ளதா என்ற சந்தேகம் அமைச்சர் ஹக்கீமுக்கு இருப்பது தெளிவாகிறது.

அப்படி இருக்க, இது திட்டமிடப்பட்டு வேண்டுமென்று இந்த அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை இல்லாமல் செய்து ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவது இவர்களது பிரதான நோக்கம் என அதன் பின்னர் கூறியிருப்பதானது இவ்வரசுக்கு எதிரான சக்திகளே இவ்விடயத்தை செய்கின்றன என கூறுகிறார். இது அவர் முன்பு குறிப்பிட்ட கூற்றுக்கு முற்று முழுதாக முரணானதல்லவா? இதனூடாக அவர் இவ்வரசை திருப்தி செய்ய முனைகிறார். *அமைச்சர் ஹக்கீமின் இவ்வாறான கூற்றுக்களை பார்க்கும் போது வரும் ஆனா வராது என்ற நகைச்சுவை வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.*

மேலும்,இதன் பின்னால் சர்வதேச சக்திகள் இருப்பதாக கூறுகிறார்.இதைத் தானே அன்று மஹிந்தவின் காலத்திலும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்,அஸ்வர் ஆகியோர் கூறி முஸ்லிம் சமூகத்திடம் இருந்து ஏச்சுகளை வாங்கிக்கட்டினார்கள்.முஸ்லிம்களின் தலை போகும் நிலையிலும் ஒரு புறத்தில் உண்மையையும் மறு புறத்தில் அவ் உண்மையை மறைத்து அரசாங்கத்தையும் காப்பாற்ற முனைகிறார்.குறித்த கூட்டத்தில் உரையாற்றிய பா.உ அலி சாகிர் மௌலான இவைகள் தொடர்ந்தாள் இவ்வரசாங்கத்தில் தொங்கி கொண்டிருக்க முடியாது என உரத்த தொனியில் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Friday, May 19, 2017

றோகிங்ய முஸ்லிம்கள் மீதான ஹக்கீமின் நீலிக் கண்ணீர்



அண்மையில் சீனாவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் ஹக்கீம் மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகியை சந்தித்து ரோகிங்ய முஸ்லிம்கள் தொடர்பில் பேசியதாக இன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் அவர் இலங்கைக்கு வந்துள்ள மியன்மார் அகதிகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் குறிப்படப்பட்டுள்ளது.இதற்கு அவர் என்ன கூறினார் என்ற விடயம் கூறப்படவில்லை.இதுவே இது ஒரு பொய்யான கூற்றின் சாயலை காட்டுவதை அறிந்துகொள்ளச் செய்கிறது.அங்கு இதுவெல்லாம் பேச அமைச்சர் ஹக்கீமுக்கு சந்தர்ப்பம் அமைந்திருக்காது என்பதே உண்மையாகும்.மியன்மாரின் தலைவி *ஆங் சாங் சுகியிற்கு தமிழ் மொழி தெரியாதல்லவா?*

இவர் அங்கு மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகியை சந்தித்து கலந்துரையாடிய வேளையில் இலங்கையில் இனவாதிகளின் கை ஓங்கி இருந்தது.அச் சந்தர்ப்பத்தில்  *“இலங்கை நாட்டின் பிரதமருடன் சுத்தித் திரியும் நீங்கள் முதலில் உங்கள் நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துவிட்டு என்னுடன் வந்து கதையுங்கள்”* என்றால் அமைச்சர் ஹக்கீம் என்ன பதில் அளித்திருக்க முடியும்?

குறித்த சந்திப்பில் மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகி அமைச்சர் ஹக்கீமை மியன்மார் வந்து,நிலைமைகளை நேரில் அவதானித்து  ஆலோசனை வழங்குமாறு கூறியுள்ளார்.இது ரோகிங்ய முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க அமைச்சர் ஹக்கீமுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம்.எப்போது *அமைச்சர் ஹக்கீம் மியன்மார் செல்வார் என்பதை அறிவிப்பாரா?* அமைச்சர் ஹக்கீம் இக் காலத்தில் மியன்மார் செல்ல மாட்டார் என்பதை உறுதிபட கூறுகிறேன்.அமைச்சர் ஹக்கீம் மியன்மார் செல்லாது போனால் அவர் முஸ்லிம்கள் மீது அக்கறை அற்றவராக இருக்க வேண்டும்  அல்லது பொய்யான ஒன்றை கூறி பிரபலம் தேடும் முயற்சியாக இருக்க வேண்டும்.

மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பில் மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகியை சந்தித்து பேசிய அமைச்சர் ஹக்கீம் இலங்கை இலங்கை முஸ்லிம்கள் பற்றி பிரதமர் ரணிலுடன் பேசினாரா? அப்படி பேசியிருந்தால்,பிரதமர் ரணிலால் முன் வைக்கப்பட்ட தீர்வு என்ன என்பதை அமைச்சர் ஹக்கீம் வெளிப்படுத்துவாரா? அமைச்சர் ஹக்கேம் முதலில் தனது அக்கறையை இலங்கை முஸ்லிம்கள் மீது செலுத்த வேண்டும்.

அமைச்சர் ஹக்கீம் மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகியை சந்தித்து பேசிய விடயம் முஸ்லிம்களிடையே மிகவும் அதிருப்தியை தோற்றுவித்திருந்தது.அதனை களைந்து கொள்ள அமைச்சர் ஹக்கீம் இதனை கூறியிருக்க வேண்டும் என்பதாகவே நான் கருதுகிறேன்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Monday, May 15, 2017

சீனாவில் காரியத்தில் கண்ணாக இருக்கும் ரணில்;ஹக்கீம்?



இலங்கைக்கு உதவும் நாடுகள் வரிசையில் முஸ்லிம் நாடுகளின் வகிபாகம் மிக முக்கியமானது.இவ்வாறான உதவிகளை முஸ்லிம் நாடுகளிடமிருந்து இலங்கை நாடு தொடர்ச்சியாக பெற வேண்டுமாக இருந்தால் இலங்கை முஸ்லிம்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

இன்று இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் செயற்பாடுகளை வெளியில் காட்டினால் நிச்சயம் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தி கொள்ளும்.இன்று இலங்கை நாட்டில் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிப்பது சர்வதேசம் வரை சென்றுள்ளது.

இலங்கை நாடு முஸ்லிம் நாடுகளிடமிருந்து உதவிகளை பெற இலங்கை முஸ்லிம்கள் எங்களுடனே உள்ளார்கள் என நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது.அதற்கு இலங்கை முஸ்லிம் அரச தலைவர்கள் தன்னுடன் உள்ளார்கள் என நிரூபித்தால் அதுவே போதுமானது.

மர்ஹூம் அஷ்ரபினால் மு.காவானது சர்வதேசம் வரை பெயர் பெற்ற ஒரு கட்சியாகும்.அந்த கட்சியின் தலைவர் எங்களுடன் உள்ளார் என நிரூபித்தால் அது மிகப் பெரும் சான்றாகிவிடும்.தற்போது சீன சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மலேசியா பிரதமர் நஜீப் ரசாக்குடன் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளார்.இதன் போது அமைச்சர் ஹக்கீமை அறிமுகம் செய்து மகிழ்ந்து கொள்கின்றனர்.

*இங்கு அமைச்சர் ஹக்கீம் மூலமாக இலங்கை முஸ்லிம்கள் எங்கள் ஆட்சியுடனேயே உள்ளார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இலங்கை முஸ்லிம்கள் விற்கப்படுகிறார்கள் என்பதே உண்மையாகும்*.இதற்கு அமைச்சர் ஹக்கீம் துணை போகிறார்.இது சர்வதேச நிகழ்வொன்று என்பதால் இன்னும் பல இடங்களில் இது போன்ற வியாபாரங்கள் இடம்பெறும்.இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் நிலைமை பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற வகையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது உலக முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களின் காதுகளினுள் இலங்கை முஸ்லிம்கள் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் வாழ்கின்றார்கள் என்ற செய்தியையே கொண்டு சேர்க்க வேண்டிய தேவை உள்ளது.அதற்கு அமைச்சர் ஹக்கீமின் இவ்வாறான பயணங்கள் தடையாக அமையும் என்பதே யதார்த்தமாகும்.வெளிநாட்டு முஸ்லிம் தனவந்தர்கள் கட்டிக் கொடுத்த நுரைச்சோலை வீட்டுத் திட்டம் இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அமைச்சர் ஹக்கீம் இவற்றையாவது சாதித்து வருவாரா?  சீனாவிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது காரியத்தில் கண்ணாக உள்ளார்;அமைச்சர் ஹக்கீம்..?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
பலம் பெறும் மஹிந்த,பாதாளம் செல்லும் ரணில்,தொங்கும் மைத்திரி

உலகம் முழுவதும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.இந் நாளானது பலத்த போராட்டங்களின் பின்னர் தொழிலாளர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட தினமாகும்.அன்று தொடக்கம் இன்று வரை ஏனைய நாடுகளை விட இலங்கை நாடு அத் தினத்திற்கு விசேட முக்கியத்துவம் அளிப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.இது ஒரு வகையில் தொழிலாளர்களை கௌரவப்படுத்துவதாக அமைந்தாலும் தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களின் விடயங்கள் முன்னிலைப்படுத்தப்படாது,அது அரசியல் களமாக மாறியிருப்பது அத் தொழிலாளர் தினத்தை அகௌரவப் படுத்துவதாகவும் அமைகிறது.தொழிலார் தினத்தில் தொழிலார்களை வெயியில் வாட்டி வதைக்கும் நிகழ்வு அரங்கேறுவதும் கண்டிக்கத்தக்கதாகும்.தொழிலாளர்கள் எனும் போது பல்வேறு மட்டத்தில் தொழிலாளர்கள் உள்ள போதும் அடிமட்ட தொழிலாளர்களை நோக்கிய பார்வையே மிகவும் அவசியமானது.இன்று இலங்கை நாட்டில் தொழிலாளர்கள் பல இன்னல்களை முகம் கொடுத்துள்ளனர்.மலையக தோட்ட தொழிலாளர்கள் தங்களது பல்வேறு தேவைகளை முன்னிறுத்தி பல வருடங்களாக தீர்வை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர்.இலங்கையில் நிலவும் வறட்சி காரணமாக 14 மாவட்டங்களை சேர்ந்த ஒன்பது இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந் நிகழ்வு நடைபெற்ற சமகாலத்தில் வறட்சி நிலவுவதன் காரணமாக அடிமட்ட தொழிலாளர்களான விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்குவது பற்றியதான கருத்தாடல்கள் சென்றிருக்க வேண்டும்.அவைகள் பற்றியெல்லாம் அரசியல் கட்சிகள் சிறிதும் கவனத்திற் கொண்டிருக்கவில்லை.

இலங்கையில் தொழிலாளர்களின் உரிமைகளை முன்னிறுத்தி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நாளாந்தம் மேற்கொள்ளப்படுகின்றன.அவைகளை கட்டுப்படுத்தவென்றே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான  தனியான பாதுகாப்பு பிரிவு அமைக்கவும் சிந்திக்கப்படுகிறது.எதிர்காலத்தில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்களை செய்ய தொழிற் சங்கங்கள் தயாராகி வருவதாகவும் அறிய முடிகிறது.இப்படி இலங்கை தொழிலாளர்களுக்கு ஆயிரம் தேவைகள் உள்ள போதும் அவற்றை பற்றியெல்லாம் பேசாமல் அரசியல் பேசி மகிழ்ந்தமையானது மரண வீட்டில் திருமண கதை கதைப்பது போன்றே உள்ளது.நடைபெற்ற மே தின நிகழ்வுகலினுள் ஜாதிக ஹெல உறுமயவானது அடிப்படை வசதிகளற்ற தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஒன்றினைவோம் என்ற தொனிப் பொருளில் நடாத்தி சற்று தொழிலாளர்களை நினைவு கூர்ந்திருந்தனர்.மக்கள் விடுதலை முன்னணியினரின் மே தின கூட்டத்தில் தொழிலாளர்களின் அர்ப்பணிப்புக்களை வெளிக்காட்டும் வகையிலான அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள் இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இவர்களின் கூட்டத்தில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கென  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான  தனியான பாதுகாப்பு பிரிவு அமைப்பது தொடர்பிலான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.இதற்கு பதில் அளித்துள்ள ஜனாதிபதி மைத்திரி அரசியல் நோக்கோடு நடாத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தவே இப் பாதுகாப்பு பிரிவை அமைக்கவுள்ளதாக கூறியுள்ளார்.அவ்வாறானால் ஒரு ஆர்ப்பாட்டம் நிகழும் போது அது அரசியல் இலாபம் கொண்டது என உறுதி செய்த பின்பு தான் இப் பிரிவு அதனை கட்டுப்படுத்த செல்ல வேண்டும்.ஒரு ஆர்ப்பாட்டம் அரசியல் இலாபம் கருதி மேற்கொள்ளப்படுகிறது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்தால் அதனை மக்களிடம் வெளிப்படுத்தினாலேயே அவ் ஆர்ப்பாட்டம் தானாகவே பிசு பிசுத்து போகும்.ஜனாதிபதி  முன் வைக்கும் காரணம் ஏற்க முடியாததாகும்.இதனூடாக இவ்வரசு தாங்கள் ஆர்ப்பாட்டங்களினூடாக பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளோம் என பகிரங்கமாக வெளிப்படுத்துகிறது.எதிர்வரும் காலங்களிலாவது குறைந்தது தொழிலாளர் தினங்களில் தொழிலார்களின் விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கி தொழிலாளர்களை அரசியல் கட்சிகள் கௌரவப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இலங்கையில் இடம்பெறும் மே தின நிகழ்வுகளை அரசியல் கட்சிகள் தங்களது மக்கள் பலத்தை வெளிக்காட்டவே பயன்படுத்தி வருகின்றன.ஆட்சி மாற்றத்திற்கு முன்பு இடம்பெற்ற தொழிலாளர் தினங்களுக்கும் ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு இடம்பெற்ற தொழிலாளர் தினங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகளுள்ளன.ஆட்சி மாற்றத்திற்கு முன்பு மிக நீண்ட காலமாக சு.க,ஐ.தே.க,ம.வி.மு ஆகியனவே தங்களது மக்கள் பலத்தை நிரூபிப்பதன் மூலம் தங்களது மக்கள் செல்வாக்கை வெளிக்காட்டின.ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு சு.க இரு அணிகளாக பிரிந்ததன் காரணமாக சு.க,ஐ.தே.க,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான பொது கூட்டணி,ம.வி.மு ஆகிய  குழுவினரிடையே பலத்த மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.இதில் மஹிந்த ராஜபக்ஸவின் மக்கள் செல்வாக்கு எவ்வாறு அமையும் என்பதே அனைவரினதும் பலத்த எதிர்பார்ப்பு எனலாம்.ஆட்சி மாற்றம் நிகழ்ந்த வருடமான 2015ம் ஆண்டு மஹிந்த அணியினர் கிருலப்பனையில் ஒரு மே தின கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொள்ளவில்லை.இருப்பினும் இக் கூட்டம் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமையில் சென்று அவர்  திரும்பி வந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.அவ்வருடம் இந் நிகழ்வை  பிரமாண்டமாக ஏற்பாடு செய்யும் வகையில் மஹிந்த அணியினர் பலம் பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை.இதில் பெருமளவான மக்கள் கலந்து கொள்ளாமையால்,இதில் மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டிருந்தால் அவரது மக்கள் செல்வாக்கை குறைத்துக் கொள்ளச் செய்திருக்கும்.இது ஆட்சி மாற்றம் நிகழ்ந்து ஒரு சில மாதங்களில் இடம்பெற்ற நிகழ்வு என்பதால் மஹிந்தவின் பின்னால் அணி திரள பலர் ஒஞ்சிக் கொண்டிருந்தனர்.இந் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொள்ளாமையினால்,இந் நிகழ்வு மஹிந்த அணியினரின் மக்கள் செல்வாக்கை ஏளனம் செய்த ஒன்று எனலாம்.இருந்தாலும் இன்று மஹிந்தவின் பின்னால் மக்கள் அலை திரண்டு செல்வதற்கு இவ்வாறான ஏளனங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு அவர்கள் பயணித்தமையே என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.அவ்வாண்டு ஐ.தே.கவும்,சு.கவும் மஹிந்த ராஜபக்ஸவின் சவால் இல்லாமையின் காரணமாக பலத்த மகிழ்ச்சியில் மே தினத்தை கொண்டாடின.

2016ம் ஆண்டய  மே தினமானது இலங்கை மக்களின் பலத்த எதிர்பார்ப்பை பெற்றிருந்தது.அவ் வருடமானது  மஹிந்த ராஜபக்ஸ தனது பலத்தை உணர்ந்து இவ்வாட்சியை கவிழ்க்க தனது திட்டங்களை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டு இவ்வாட்சிக்கு சவால் விடுத்துக் கொண்டிருந்த காலமாகும்.அவர் அவ்வாண்டு தனித்து தொழிலாளர் தினத்தை நடாத்துவார் என்று அனைவரும் நம்பினார்.2015ம் ஆண்டு மஹிந்த அணியினரின் மே தினத்தை சவாலாக கருதாதவர்கள் 2016ம் ஆண்டய மஹிந்த அணியினரின் மே தினத்தை தங்களுக்கான சவாலாக கருதி செயற்பட்டனர்.மஹிந்த அணியினர் மே தினத்திற்கு முன்பே இவ்வரசை கவிழ்ப்பதற்கான நிகழ்வுகளை பல்வேறு இடங்களிலும் நடாத்திக்கொண்டிருந்தார்.இவற்றினூடாக இம் முறை தாங்கள் மே தினத்தை தனித்து நடாத்தினால் பாரிய வெற்றியை பெறாது போனாலும் தோல்வியை சந்திக்க மாட்டோம் என்ற செய்தியை பெற்றுக்கொண்டனர்.மஹிந்த ராஜபக்ஸ,தனியாக மே தினத்தை நடாத்தாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் நடாத்தப்பட்டன.2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மஹிந்தவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டிருந்தார்.மார்ச் மாதமளவிலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.இன்னும் மஹிந்த குடும்பத்தினர் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவியது.அன்று குறித்த மே தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  கலந்து கொள்வதா என்பது கூட சற்று சந்தேகமாகவே இருந்தது.இதில் கலந்து கொள்வோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென சு.கவினால் எச்சரிக்கப்பட்டுமிருந்தது.இவ்வாறான தடைகள் அனைத்தையும் கவனத்திற் கொள்ளாமலேயே அன்று மஹிந்த ராஜபக்ஸ தனியாக மே தினத்தை நடாத்திக் காட்டியிருந்தார்.அவ் ஆண்டு அவர் நினைத்தளவு மக்களை திரட்ட முடியாது போனாலும் தோல்வியை சந்திக்கவில்லை எனலாம்.இந் நிகழ்வினூடாக இன்னும்  சிறிது முயற்சி செய்தால் அவர்  தனது இலக்கை அடையலாம் என்பதை புரிந்து கொண்டார்.இதன் பின்னரான அவர்களது செயற்பாடுகள் மிகவும் வீரியத்துடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.அவ்வாண்டு அவர் அவர்களது அணியினர் ஏற்பாடு செய்திருந்த  கூட்டத்தில் கலந்து கொள்வதில் சற்று உறுதியாக இல்லாமல் இருந்தமையே அவர் இவ்வரசின் எச்சரிக்கைகளுக்கு சிறிது அஞ்சியதை எடுத்துக் காட்டுகிறது.

எதிர்வரும் மே தினத்தினுள் இலங்கை அரசு மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்தியே ஆக வேண்டும்.இன்னும் இவற்றை இழுத்தடிக்க முடியாது.இவ்வருடம் இடம்பெற்ற மே தினத்தில் பிரதான அரசியல் கட்சிகள் கூட்டும் மக்கள் எண்ணிக்கை எதிர்வரும் தேர்தல்களின் முடிவில்  மிகவும் தாக்கம் செலுத்தும்.இதன் காரணமாக பிரதான அரசியல் கட்சிகளின் மக்களை ஒன்று திரட்டும் முயற்சி தீவிரமாக இருந்தது.இவ்வருடம் மஹிந்த ராஜபக்ஸ முன்னர் போன்றல்லாது சிறிதும் அச்சமின்றி முழு மூச்சுடன் மே தின விடயங்களை முன்னெடுத்தார்.இதனை தனது பலத்தை நிரூபிக்கும் ஒன்றாகவும் கருதினார்.பொதுவாக அரசியல் கட்சிகள் சிறிய பரப்பினுள் கூட்டமொன்றை நடாத்தி,அங்கு சன நெரிசலை ஏற்படுத்தி,மக்கள் அதிகம் கலந்து கொண்டதான தோற்றத்தை ஏற்படுத்தி  தங்களது ஆதரவாளர்களை மகிழ்ச்சிப் படுத்துவதோடு உளவியல் ரீதியாக பலப்படுத்திக் கொள்வர்.இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது மே தினத்தை நடாத்துவதற்கு காலி முகத் திடலை தெரிவும் செய்தார்.முதலில் இவ் இடத்தை தெரிவு செய்ததற்கே அலாதித் துணிவு வேண்டும்.மஹிந்த ராஜபக்ஸ காலி முகத் திடலை தெரிவு செய்தமையை மஹிந்தவுக்கு எதிரான அணியினர் தங்களுக்கு சாதகமான விடயமாக கருதினர்.காலி முகத் திடல் 18 எக்கார் பரப்பளவு கொண்ட மிகப் பெரும் நிலப் பரப்பு என்பதால் அதனை மக்களால் நிரப்புவது சாதாரண விடயமல்ல எனவும் கருதினர்.சஜித் பிரேமதாசா போன்ற ஐக்கிய தேசிய கட்சியின் உயர் மட்டத்தினர் முடிந்தால் காலி முகத்திடலை நிரப்பிக் காட்டுமாறு மஹிந்த அணியினருக்கு பகிரங்க சவால் விட்டனர்.மஹிந்த அணியினர் இம்முறை இடம்பெற்ற  மே தினத்தின் போது தனது எதிரணியினரின் முகத்தில் கரியை பூசி அதனை நிரப்பி காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனை யாராலும் மறுக்க முடியாது.கடந்த ஒரு வார காலமாக இலங்கை மக்களின் வாய்களில் மஹிந்த ஒன்று கூட்டி காட்டிய மக்கள் எண்ணிக்கை பற்றிய கதைகளைத் தான் அவதானிக்க முடிந்தது.அதே நேரம் அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றோர் மக்களை திரட்டுவதால் ஆட்சி மாறாது என கூறி மகிந்தவின் மக்கள் செல்வாக்கை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

2016ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி நடாத்திய மே தின கூட்டத்தின் போது 75000 இற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.அவ் வருடம் ஐ.தே.க ஒன்று  கூட்டிக் காட்டிய  மக்கள் எண்ணிக்கையானது ஏனைய கட்சிகள் ஒன்று கூட்டிக் காட்டிய  மக்கள் எண்ணிகையை சிறிதும் எட்டாத காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சி தனது மக்கள் செல்வாக்கை உறுதியாக  நிலை நிறுத்துக்கொண்டது.இவ் வருடம் 65000 மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் எண்ணிக்கையானது 13.33 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது.இது மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது நம்பிக்கையிழந்து ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஒரு இருண்ட யுகத்தை நோக்கி பயணிப்பதை எடுத்துக் காட்டுகிறது.கடந்த முறை இடம்பெற்ற மே தினத்தில் மைத்திரி தலைமையிலான சு.க, முப்பதாயிரம் அளவிலானோரை ஒன்று கூட்டி இருந்தது.இம் முறை 58000 பேரை ஒன்று கூட்டியுள்ளது.இது 93.33 வீத அதிகரிப்பாகும்.கடந்த ஆண்டு மஹிந்த அணியினர் இருபத்தையாயிரம் அளவிலானோரை ஒன்று கூட்டி இருந்தனர்.இம்முறை ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரை ஒன்று கூட்டி இருந்தனர்.இது 300 வீத அதிகரிப்பாகும்.இவ் இரு வருட மக்கள் எண்ணிக்கையானது பல்வேறு விடயங்களை சுட்டிக் காட்டுகின்றது.தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் எந்தவிதமான அரசியல் அதிகாரங்களுமில்லை.ஏனைய ஐ.தே.க,சு.க அணியினரிடம் அனைத்து அதிகாரங்களும் உள்ளன.இவ்வாறான நிலையில் இவர்கள் அனைவரையும் புறந்தள்ளி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அதிகமான மக்களை ஒன்று கூட்டியுள்ளமை அவர் எட்ட முடியாத மக்கள் ஆதரவை தன் வசப்படுத்தியுள்ளார் என்பதை எடுத்து காட்டுகிறது.இம் முறை ஒன்று கூடியுள்ள மக்கள் எண்ணிகையை வைத்து நோக்கும் போது ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எண்ணிகையில் சிறிதளவே குறைவு உள்ளது.சு.காவின் மக்கள் எண்ணிகையில் பல மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இது சு.கவின் ஆதரவாளர்கள் கடந்த முறை யாரை ஆதரிப்பது என்ற சிந்தனையில் எவரையும் ஆதரிக்காது நடுநிலை பேணியுள்ளனர்.இம் முறை அனைவரும் ஒரு முடிவெடுத்து எவரையாவது ஆதரிக்க வேண்டும் என்ற ரீதியிலும் சிந்திக்க தோன்றுகிறது.கடந்த வருடம் ம.வி.மு 7000 அளவிலானோரையே ஒன்று கூட்டி இருந்தது.இவ்வருடம் 20000 அளவிலானோரை ஒன்று கூட்டி காட்டியுள்ளது.இவ்விடயமானது ம.வி.மு பாரிய வளர்ச்சி கண்டு வருவதை அறிந்து கொள்ளச் செய்கிறது.மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்த மக்கள் இவ்வாட்சியை கொண்டு வந்தார்கள்.அன்றைய ஆட்சியை விட இன்றைய ஆட்சி ஒப்பீட்டளவில் மோசமாகவே உள்ளது.இதன் காரணமாக இவ்விரு ஆட்சியாளர்களின் மீது வெறுப்புக் கொண்டு இலங்கை மக்கள் மூன்றாவது தெரிவான ம.வி.மு பக்கம் தங்களது பார்வைகளை திருப்புவதை வெளிப்படுத்தி நிற்கின்றது.

மைத்திரி தலைமையிலான சு.க அணியினரே ஐ.தே.கவின் மக்கள் எண்ணிகையை நெருங்கியுள்ளனர்.ஒரு கோணத்தில் நோக்கினால்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூட்டிய மக்கள் எண்ணிகையும் சு.கவின் மக்கள் எண்ணிக்கையாக குறிப்பிடலாம்.காலியில் இடம்பெற்ற மே தின கூட்டமும் எங்களுடையதென ஸ்ரீ.சு.க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவை இரண்டையும் ஒன்று சேர்த்து நோக்கினால் ஐக்கிய தேசிய கட்சியை விட பல மடங்கு மக்கள் பலத்தில் சு.க உள்ளது எனலாம்.சுதந்திர கட்சியானது இலங்கையின் பழம் பெரும் கட்சிகளில் ஒன்று.இக் கட்சியை உயர் நிலைக்கு கொண்டு போராடியவர்கள் இக் கட்சியை அழியாமல் பாதுகாக்கும் சிந்தனையில் இருப்பார்கள்.அன்று மைத்திரி சு.கவை உடைத்து வெளியேறிய போது மஹிந்த மீது பூரண திருப்தி இல்லாத போதும் சு.க தோல்வியை சந்திக்கப்போகின்றதே என மேடையில் அழுதவர்களும் உள்ளனர்.இன்று மைத்திரி தலைமையிலான சு.கவில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் கட்சி பற்றாளர்களே தவிர மைத்திரி அணியினர் அல்ல.அதிலுள்ள மேலும் சிலர் பதவியை நோக்காக கொண்டவர்களே.இவர்கள் அனைவருக்கும் மீண்டும் சு.கவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸ இணைவதே சிறந்ததாகும்.அப்போது தான் கட்சி பற்றாளர்கள் கட்சியை பாதுகாப்பார்கள்,பதவி மீது பற்றுக்கொண்டவர்கள் பதவிகளை பாதுகாத்து கொள்வார்கள்.தொழிலாளர் தினம் இடம்பெற்ற மறு தினமே மைத்திரியையும் மஹிந்தவையும் இணைப்பது தொடர்பிலான முயற்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியாக சு.கவை சேர்ந்த மைத்திரி இருந்தாலும் நாட்டின் அதிகாரமிக்க செயற்பாடுகளில் பிரதமரே ஈடுபட்டு வருகிறார்.இன்று ஐக்கிய தேசிய கட்சியை விட சு.க பல மடங்கு மக்கள் பலத்தில் உள்ள போது ரணிலுக்கு இத்தனை அதிகாரங்கள் இருப்பதை சு.கவை சேர்ந்தவர்களால் ஜீரணிக்க முடியாது.பல விடயங்களில் ரணிலும் மைத்திரியும் மோதிக் கொள்வதை அவதானிக்க முடிகிறது.இதன் பிற்பாடு மோதல் ஏற்படும் போதெல்லாம் சு.கவுடன் மகிந்தவை இணைத்து ஆட்சியமைக்கும் சிந்தனைகள் சு.கவினரிடையே எழும். ஜனாதிபதி மைத்திரியை பொறுத்தமட்டில் மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொள்வது மிகவும் ஆபத்தானது.மகிந்தவின் இத்தனை வீழ்ச்சிக்கும் இவரே பிரதான காரணகர்த்தாவாவார்.அவரை மஹிந்த ராஜபக்ஸ மன்னித்து கொள்வார் என்று நம்பினால் அவரைப் போன்ற ஏமாளியாக யாரும் இருக்க மாட்டார்கள்.இவருடைய செயற்பாடுகள் ஐ.தே.கவுடனான தனது பயணத்தை மீண்டும் உறுதி செய்து கொள்வதாக அமையும்.மே தினத்தை தொடர்ந்து இடம்பெற்ற அமைச்சரை கூட்டத்தில் ஐ.தே.காக்கும் சு.கவுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளை களைவதற்காக மைத்திரியினால் ஒரு யோசனை முன் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்த மக்கள் எண்ணிகையை எதிர்கொள்ளுமளவு ஐக்கிய தேசிய கட்சிக்கும் பலமில்லை.அவர்கள் தங்களது ஆட்சியை உறுதி செய்து கொள்ள மைத்திரியுடன்  பயணிப்பதே பொருத்தமானது.

இந்தளவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு  மக்கள் செல்வாக்கு அதிகரிக்க என்ன காரணம் என்பது மிகவும் ஆழமாய் சிந்திக்க வேண்டிய பகுதியாகும்.இவ்வரசு அமையும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மீது பலவாறான குற்றச் சாட்டுக்களை முன் வைத்தனர்.அக் குற்றச் சாட்டுக்களில் ஒன்றையேனும் இவர்களால் இது வரை நிரூபிக்க முடியவில்லை.அவர்களை விசாரணைக்கு அழைத்தல்,அவமானப்படுத்தல் போன்ற பல செயற்பாடுகள் இவ்வரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டன.அதிலும் குறிப்பாக யோசித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது மஹிந்த குடும்பத்தினர் கண்ணீர் சிந்தியமையானது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்ததோடு  அனுதாபத்தை பெறச் செய்திருந்தது.மேலும்,இவ்வாறானவற்றை அவதானிக்கும் போது மஹிந்த ராஜபக்ஸ மீது இவ்வரசினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் வெறும் போலியானவை என்பதை வெளிப்படுத்துகின்றன.அன்று மஹிந்த நாட்டை ஆட்சி செய்ததன் காரணமாக அவரது ஆட்சியில் அது நொட்டை இது சொட்டை என குறை கூறவும் விமர்சனம் செய்யவும் முடிந்தது.எப்போதும் விமர்சனம் செய்வதும் குறை கூறுவதும் மிக இலகுவானது.தற்போது அன்று குறை கூறியவர்கள் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.தற்போது அவர்களது ஆட்சியை மஹிந்த விமர்சித்து கொண்டிருக்கின்றார்.இவ்வாறான விமர்சனங்களையும் இன்றைய சவால்களையும் இவ்வரசினரால் முகம் கொடுக்க முடியாதுள்ளது.மிக நீண்டகாலமாக எதிர்கட்சி அரசியல் செய்து பழக்கப்பட்ட ஐ.தே.கவுக்கு ஒரு சிறந்த ஆட்சியை ஏற்படுத்திக் கொள்ள சில ஆண்டுகள் தேவைப்படும்.அவ்வாறான நேர இடைவெளி ஐ.தே.கவுக்கில்லை.

கடந்த வருட மே தினத்தை தொடர்ந்து மே இரண்டாம் திகதி மஹிந்த ராஜபக்ஸவின் இராணுவ பாதுகாப்பு குறைக்கப்பட்டிருந்தது.அதே போன்று இவ்வருடமும் மே தினத்தை தொடர்ந்து அவரது இராணுவ பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.இவ்வரசு அவரின் பாதுகாப்பை குறைப்பதனூடாக அவரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த சிந்திக்கலாம்.பல விடயங்களில் மஹிந்த ராஜபக்ஸவை குறை கூறினாலும் யுத்தத்தை முடித்த கதாநாயகனாக மக்கள் மனங்களில் இருப்பதை மறுக்க முடியாது.இதன் காரணமாக அவருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளமை மறுக்க முடியாத உண்மை.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அல்லாமால் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததால் உள்ள அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு விசேட பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவை இவ்வரசுக்குள்ளது.

இவ்வரசு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதன் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஸவின் அச்சுறுத்தல் உள்ளமை மறுக்க முடியாத உண்மை.இவ்வரசு எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டுகின்ற போதும் அதன் செயற்பாடுகள் திட்டமிட்டு மிகவும் மந்தகரியில் இடம்பெறுவது போன்ற தோற்றப்பாட்டை தற்போது அவதானிக்க முடிகின்றமை இதனை உறுதி செய்கிறது.இந் நிலையில் அவரது மே தின கூட்டத்தை பார்த்தால் இவ்வரசு இக் காலத்தில் தேர்தலை நடத்தாது என்றே எண்ணத் தோன்றுகிறது.இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஸ மே தின கூட்டத்தில் வைத்து தேர்தலுக்கான சவாலை விடுத்துள்ளதால் தேர்தலை இன்னும் காலம் தாழ்த்துவது மிகவும் ஏளனமான செயலாக அமைந்துவிடும்.முன்னாள் ஜனாதிபதி பகிரங்கமாக தேர்தலை நடாத்துங்கள் என சவால் விட்டுள்ள போதும் அதனை ஏற்க யாருமே தயாரில்லை.எல்லை நிர்ணயத்தை இனியும் காரணம் காட்ட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இறுதியாக கூறப்போனால் இவ்வாண்டு மஹிந்த ராஜபக்ஸ ஒன்று கூட்டி காட்டிய மக்கள் எண்ணிக்கையினூடாக ஐ.தே.க.சு.க ஆகியவற்றை மதி கலங்கச் செய்துள்ளார் என்பதே யதார்த்தமாகும்.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 15-05-2017ம் திகதி திங்கள்  கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது *அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 81வது கட்டுரையாகும்.*

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.



Sunday, May 14, 2017

அமைச்சர் ஹக்கீம் ரணிலுடனான தொடர்பை பயன்படுத்தி முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்கலாமே?



அமைச்சர் ஹக்கீம் இலங்கை வந்திருந்த மோடியை முன் வரிசையில் நின்று சந்தித்திருந்தார்.தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து சீனா பறந்துவிட்டார்.ஒரு முஸ்லிம் தலைவர்  இலங்கை நாட்டின் ஆட்சியாளர்களுடன் இத்தனை உயரிய இடத்தில் இருப்பது நமக்கும் பெருமை தான்.இருந்தாலும் இந்த உயரிய மதிப்பை கொண்டு அமைச்சர் ஹக்கீம் சாதித்ததென்ன?

சாய்ந்தமருது அம்பாறைக்கு இடமாற்றப்பட்டு விடுமா என்று பேசுமளவு மு,காவின் கோட்டையாக அம்பாறை மாவட்டத்தின் நிலை உள்ளது.அண்மையில் கூட சாய்ந்தமருதில் இயங்கி வந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம் இடமாற்றப்பட்டிருந்தது.அமைச்சர் ஹக்கீம் இந்த தொடர்புகளை வைத்துக்கொண்டு இவற்றை சாதிக்க முடியாதா? தூப்பாங்கட்டென்றால்,அது குப்பைகளை அகற்ற வேண்டும்.அதனை அலுமாரியில் வைத்து அழகு பார்ப்பதாக பெருமை படுவதில் எதுவுத அர்த்தமில்லை.

ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் சர்வதேசத்துக்கு  பல பக்க ஆதரவுகள் இருப்பதாக காட்டுவது மிக முக்கியமானது.அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு தனக்கு இருக்கின்றதென காட்ட அமைச்சர் ஹக்கீமை சீனா போன்ற நாடுகளுக்கு அழைத்து செல்வது இவ்வாட்சியாளர்களுக்கு சிறப்பானது.அவர்களுக்கு சிறந்தது என்பதற்காக நாம் வால் பிடித்து செல்ல முடியாது.அவ்வாறான தொடர்புகளை வைத்து கொண்டு அமைச்சர் ஹக்கீம் சாதித்ததென்ன என்பதே மிக முக்கியமானதாகும்.

மஹிந்த ராஜபக்ஸ தனது ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பௌசி மற்றும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஆகியோரை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார்.இவர்களை இவ்வாறான விஜயங்களின் போது அழைத்தும் செல்வார்.அவற்றுக்கான காரணம் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எச் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்குவார்கள்.ஒரு போதும் அழுத்தம் வழங்க மாட்டார்கள்.இது போன்று தான் இன்று ஐ.தே.க அமைச்சர் ஹக்கீமை பயன்படுத்தி கொண்டிருக்கின்றதா என்று சிந்திக்க தோன்றுகிறது.இலங்கையின் பிரபலமான முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் இவர்களுக்கு ஆதரவாக இருப்பது கௌரவம் தான் என்பதில் மறுப்பில்லை.

இன்று இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாணிக்கமடுவில் வைக்கப்பட்ட சிலையை ஒரு வாரத்தில் அகற்றித் தருவாக அமைச்சர் ஹக்கீமிடம் வாக்குறுதி அளித்திருந்ததாக அமைச்சர் ஹக்கீம் கூறியிருந்தார்.அது ஆறு மாதம் சென்றும் நிறைவேற்றப்படவில்லை.சீனா சென்று வரும் வழியிலாவது அதனை அமைச்சர் ஹக்கீம் பிரதமரிடம் கேட்டு வர வேண்டும்.அமைச்சர் ஹக்கீம் இது போன்ற சமூக விடயங்களை கேட்கும் இடத்தில் அவரை இறக்கிவிட்டு சில வேளை பிரதமர் ரணில் சென்று விடலாம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Thursday, May 11, 2017

அமைச்சர் றிஷாத் மறிச்சுக்கட்டி போராட்டத்தை சுயநலத்துக்காக கை விட்டாரா?

ஜனாதிபதி மைத்திரியினால் முசலி பிரதேசத்தின் சில பகுதிகள் வனமாக வர்த்தமானிப்படுத்தப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து முசலி பிரதேசத்து மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

அண்மையில் இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து பேசிய போது இது தொடர்பில் சாதகாமான முடிவு எட்டப்பட்டிருந்தது.அதனை தொடர்ந்து இவர்களின் வேண்டுகோளின் பெயரில் அப் போராட்டம் கை விடப்பட்டிருந்தது.

இது மோடியின் வருகையை முன்னிட்டும் தனது அமைச்சுக்கான பேரம் பேசலை அடிப்படையாக கொண்டும் கை விடப்பட்டதாக மு.கவை சேர்ந்த சில கதைகளை பரப்பி வருகின்றனர்.

மோடி அந்த மக்கள் போராட்டம் செய்து கொண்டிருக்கும் பிரதேசத்தின் பக்கம் தலை வைத்து தூங்கவும் மாட்டார்.அந்த மக்கள் காட்டுக்குள் போராட்டம் செய்து கொண்டிருக்கின்றனர்.இதனை சிந்தித்தால் இது பொய் என்பதை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

தற்போது அமைச்சு மாற்றம் எதுவும் இடம்பெறாது என அமைச்சரை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.அமைச்ச ராஜிதவின் வாக்குறுதியை வேத வாக்காக கொள்ளாது போனாலும் அமைச்சரை மாற்றம் இடம்பெறும் என்ற உறுதியான முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.இப்படி இருக்க அமைச்சர் றிஷாதின் அமைச்சு மாற்றத்துக்கான ஒப்பந்தம் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை.

அது போன்று ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்காவின் தலைவர் என்.எம் அமீன் உட்பட பல சமூக ஆர்வலர்கள்  கலந்து கொண்டிருந்தனர்.அந்த போராட்டத்தை இவர்களும் சேர்ந்தே நிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.இவர்களுக்கு அமைச்சர் றிஷாதுக்கு கூஜா தூக்க வேண்டிய அவசியமில்லை.

இவற்றினை எல்லாம் வைத்து சிந்தித்தால் அமைச்சர் றிஷாத் மீது முன் வைக்கப்பட்ட குற்றச் சாட்டுக்கள் போலியானவை என்பதை சாதாரணமாகவே அறிந்து கொள்ளலாம்.

இப் போராட்டம் தற்காலிகமாகவே இடை நிறுத்தப்பட்டுள்ளது.இதற்கு சாதகமான தீர்வு எட்டப்படாத போது மீண்டும் அமைச்சர் றிஷாத் இப் போராட்டத்தை தொடர வேண்டும்.அல்லாது போனால் தற்போதைய விமர்சனங்களை உண்மை படுத்தி விடுவார்.அமைச்சர் றிஷாதின் இச் செயற்பாடு சுயநலத்தை அடிப்படையாக கொண்டதா என்பதை உறுதி செய்ய இன்னும் காலம் உள்ளது என்பதே உண்மை.

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள சந்திப்புக்களின் போது இவ் விடயத்திற்கு தீர்வு எட்டப்படுமாக இருந்தால் அவர் இது தொடர்பில் ஏன்ன சுயநல ஒப்பந்தங்களை செய்திருந்தாலும் அவற்றை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.

அமைச்சர் றிஷாதுக்கு எதிரானவர்கள் முன் வைக்கும் விமர்சனங்களின் ஊடாக அமைச்சர் றிஷாதே இப் போராட்ட காரர்களின் பின்னால் இருப்பதை அவ் விமர்சனவாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.அமைச்சர் றிஷாத் அரசில் இருந்து கொண்டு அரசின் செயற்பாட்டிற்கு எதிராக இப்படியானதொரு தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தை செய்து அழுத்தம் வழங்க அலாதித் துணிவு வேண்டும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அமைச்சர் றிஷாத் அதனை தீர்க்காது அதனை காட்டியே அரசியல் செய்வதாகவும் மேலுள்ள விமர்சனங்களை முன் வைப்பவர்களே குற்றம் சுமத்துகின்றனர்.அப்படியானால் அவர் எதற்கு இப்படியானதொரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க வேண்டும்?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


இறக்காமத்து பிரச்சினை தீர்ந்துவிட்டதாக கூறிய மு.கா எங்கே?

அண்மையில் அமைச்சர் ஹக்கீம் விசேட உலங்கு வானூர்தி ஏற்பாடு செய்து இறக்காமத்திற்கு விஜயம் செய்திருந்தார்.அங்கு தனது படை பட்டாளங்களுடன் சென்று ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்பட்டிருந்ததாக கூறியிருந்த விடயம் யாவரும் அறிந்ததே!

நேற்று இறக்காமத்திற்கு சென்ற சில இனவாதிகள் பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.அங்கு எந்த மத அனுஸ்டானங்களும் மேற்கொள்ள முடியாதென்ற நீதி மன்ற தடை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்படியானால்,அமைச்சர் ஹக்கீம் விசேட உலங்கு வானூர்தியில் சென்று ஜனாதிபதியுடனான சந்திப்பில் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விட்டதாக கூறியது என்ன?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Monday, May 8, 2017

அமைச்சர் ஹக்கீமின் யாப்பு மாற்ற அழைப்பில் தேர்தல் முறை மாற்றம்

அமைச்சர் ஹக்கீம் இம் முறை இடம்பெற்ற ஐ.தே.கவின் மே தின கூட்டத்தின் போது புதிதாக வரவுள்ள அரசியலமைப்புக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.இதன் போது புதிதாக வரவுள்ள அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றம் வரவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

தற்போதுள்ளது போன்ற தேர்தல் முறையே முஸ்லிம்களின் பிரநிதித்துவ காப்புக்கு சிறந்தது என்பது இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம்.அப்படி இருக்க இவர் அதனை கூறியே அழைப்பு விடுத்தமை எதற்காக? அனைவரும் கெடுதி உள்ளதெனும் போது அமைச்சர் ஹக்கீம் மாத்திரம் நலவு உள்ளது என்கின்றார் என்றால் அதில் அமைச்சர் ஹக்கீமுக்கு மாத்திரம் நலவு உள்ளது என்பதுவே உண்மை.அவர் இன்று ஆதரவு வழங்க கோரும் தேர்தல் முறை மாற்றம் முஸ்லிம்களுக்கு பாதிப்பானதென பல இடங்களில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தேர்தல் முறைமை ஏற்படுத்தப்படும் போது கண்டி மாவட்டத்தில் தனக்கு வாசியான வகையில் ஒரு தொகுதியை அமைத்து அதில் தன்னையே ஐ.தே.க சார்பாக போட்டியிடச் செய்ய வேண்டும் என ஒப்பந்தம் ஒன்றை செய்தால் இன்று அவரது அரசியலுக்குள்ள பாரிய சவால்களை மிக இலகுவாக எதிர்கொண்டு விடுவார்.

அமைச்சர் ஹக்கீமுக்கு கண்டி மாவட்டத்தில் சொல்லுமளவு வாக்கு வங்கி இல்லை.இம் முறை ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குக்களில் நனைந்து கொண்டார் என்பதே உண்மை.இவ்வாறு செய்வதனூடாக தொடர்ச்சியாக தனது அரசியல் தெரிவை அவரால் உறுதி செய்ய முடியும்.

தொகுதி முறை வருகின்ற போது இன்று அவருக்கு பெருந் தலையிடியை வழங்கி வரும் அமைச்சர் றிஷாத் பாராளுமன்றம் தெரிவாவது கடினமாகிவிடும்.வன்னி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஒரு தொகுதியை ஏற்படுத்தினால் வன்னி மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து கொள்ளலாம்.இதனூடாக அமைச்சர் றிஷாத் பாராளுமன்றம் செல்ல முடியும்.வன்னி மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் தெரிவாகும் வழியை தடுத்து விட்டால்...?
*அமைச்சர் ஹக்கீம் தனது சுயநலங்களை அடிப்படையாக கொண்டு முஸ்லிம் சமூகத்தையே பலி கொடுக்க தயாராகவுள்ளார்.*இது தொடர்பில் முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Wednesday, May 3, 2017

வடக்கு,கிழக்கு இணைப்பு பற்றிய முதலமைச்சரின் கூற்று முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றது

அமைச்சர் ஹக்கீம் ஐ.தே.கவின் மே தின கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு முஸ்லிம்களுக்கு பாதகாமான வகையில் அமையும் என்ற நிலை இருந்தும் புதிய அரசியலமைப்பை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.நேற்று நியூஸ் பெஸ்டில் வெளியான ஒரு காணொளியை பார்த்த போது கிழக்கு முதலமைச்ச நஸீர் அஹமத் வடக்கு-கிழக்கு இணைக்காமல்  இழுத்தடிப்பது மிகவும் கவலையான விடயம் போன்று பேசியுள்ளார்.இதனையெல்லாம் இவர்கள் அறிந்து பேசுகிறார்களா? அல்லது அறியாமல் பேசுகின்றார்களா? என்றே தெரியவில்லை.இலங்கை முஸ்லிம்கள் பெரும் விலைக்கு கூறி விற்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை.

அக் குறித்த காணொளியில் கூறப்பட்ட விடயம் (எந்த வித திரிவு படுத்தலுமின்றி)

*“முப்பது வருடகாலத்திற்குள் வடக்கு,கிழக்கை இணைத்த போது கூட முஸ்லிம்கள் எந்த ஒரு குரலும் எழுப்பவில்லை.நிலத்தொடர்பற்ற ஒரு அலகை பற்றி மறைந்த தலைவர் கதைத்திருக்கின்றார்கள்.பிரித்த போதும் ஒன்றும் சொல்லவில்லை.நீங்கள் தானே பிரித்திங்க.நீங்கதான் இணைத்திங்க.என்னன்னான ஒண்ட செய்ங்கோ.இன்று முஸ்லிம்களும் ஆலோசனை கேட்பதும்,தமிழ் மக்களுடன் ஆலோசனை கேட்டு முப்பது வருடத்தை கடத்தி விட்டீர்கள்.நீங்கள் என்ன தெரிவு எண்டாலும் தெளிவான தீர்வை முன்னுக்கு வைங்கோ,அது,இந்த இணைப்பு பிரிப்பு என்ற வார்த்தைகளால் முஸ்லிம்களை பிரிக்க வேண்டிய அவசியமில்லை.நீங்கள் தெளிவான தெளிவான நிலைப்பாட்ட மத்திய அரசு வைக்க வேண்டிய தேவை உள்ளது.நாங்கள் முஸ்லிம் சமூகம் பல விட்டு கொடுப்புக்களை செய்து.ஏதாவது ஒரு உடன்பாட்டுக்கு வர முடியும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதும் கௌரவ இரா சம்பந்தன் ஐய மீதும் நம்பிக்கை வைத்துள்ளோம்.இவ்வருடத்திற்குள் ஒரு தெளிவான தீர்வை சொல்ல வேண்டும்”*

//////////முப்பது வருடகாலத்திற்குள் வடக்கு,கிழக்கை இணைத்த போது கூட முஸ்லிம்கள் எந்த ஒரு குரலும் எழுப்பவில்லை.நிலத்தொடர்பற்ற ஒரு அலகை பற்றி மறைந்த தலைவர் கதைத்திருக்கின்றார்கள்.பிரித்த போதும் ஒன்றும் சொல்லவில்லை.////////

இணைந்த வடக்கு,கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் கிடைக்கவில்லை.மு.காவின் மாகாண சபை பிரதிநிதிகள் ஒழுங்காக மாகாண சபைக்கு கூட சென்றிருக்கவில்லை.ஆரம்பத்தில் மர்ஹூம் அஷ்ரப் இணைந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் மனோ நிலையில் கூட இருந்திருக்கவில்லை.பின்னர் அதில் போட்டியிட்டதன் பின்னால் சில பண கொடுக்கல் வாங்கல் கதைகள் உலா வருகின்றன. இணைந்த வடக்கு,கிழக்கு மாகாண அமைச்சர் அதாவுல்லா வடக்கு,கிழக்கை பிரிக்க பல்வேறு தடவைகள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார்.வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டதன் பின்னர் வேறு வழி இல்லாமையினால்  தான் முஸ்லிம்களுக்கான தனியான அலகு சிந்தனை என்பதே தோற்றம் பெற்றது.இன்றும் குறித்த வடக்கு,கிழக்கு இணைப்பு முஸ்லிம்களிடையே அடிமை சாசனமாக வர்ணிக்கப்படுகிறது.இவ்வாறிருக்க எவ்வாறு இவ்வாறு கூற முடியும்?

/////நீங்கள் தானே பிரித்திங்க.நீங்கதான் இணைத்திங்க.//////

ஜே.ஆர் தலைமையிலான இலங்கை அரசு வடக்கு,கிழக்கை இணைத்தது என்பதை விட இந்திய அரசின் நிர்ப்பந்தத்தாலேயே அதனை இணைத்தது என்பது என்பது யாவருக்கும் தெரியும்.ஜே.ஆர் அரசு சில காலங்களின் பிறகு வடக்கு,கிழக்கு நிரந்தரமாக இணைய முடியாதவாறான ஏற்பாடுகளை தந்திரமாக  சொருகி இருந்தமை குறிப்படத்தக்கது.வடக்கு,கிழக்கு இணைப்பை பிரித்ததும் இவ்வரசல்ல.ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய இணைந்து செய்த வழக்குத் தாக்கல் மூலமாகும்.இதனை அரசு பிரித்து,இணைத்து விளையாடியதாக கூறுவது அறியாமையின் வெளிப்பாடு.

////என்னன்னான ஒண்ட செய்ங்கோ////
என்னன்னான ஒண்ட செய்ங்கோ ஒன்றை செங்கோ என்று விட்டு விட்டு இருக்க இது ஒன்றும் சிறு பிள்ளைகள் விளையாடும் சுரட்டை விளையாட்டல்ல.இந்த மனோ நிலை மிகவும் ஆபத்தானது.

/////நாங்கள் முஸ்லிம் சமூகம் பல விட்டு கொடுப்புக்களை செய்து.ஏதாவது ஒரு உடன்பாட்டுக்கு வர முடியும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.//

விட்டுக் கொடுப்புக்கள் செய்த இது ஒன்றும் விளையாட்டல்ல.எமது உரிமை சம்பந்தப்பட்ட விடயம்.அதில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்களையும் மேற்கொள்ள முடியாது.சிறு தவறும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

//////தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதும் கௌரவ இரா சம்பந்தன் ஐய மீதும் நம்பிக்கை வைத்துள்ளோம்.////

நீங்கள் நம்பிக்கை வைக்குமளவு அவர் செயற்பட்ட ஒரு விடயத்தை கூற முடியுமா? தற்போது அவர்களுக்கு முஸ்லிம்களின் தேவை உள்ளதால் சில விடயங்களில் நடித்து கொண்டிருக்கின்றார்கள்.வடக்கு முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பல்வேறு சவால்களை ஏற்படுத்தி இருந்தனர்.வடக்கு முஸ்லிம்களை விடுதலை புலிகள் பலவந்தமாக வெளியேற்றியதை கூட ஏற்கும் மன நிலையில் அவர்கள் இல்லை.கல்முனை மாநகர சபையில் கொண்டு வரப்பட்ட கல்முனை கரையோர மாவட்டத்தை கூட ஏற்கும் மன நிலையில் அவர்களில்லை.இப்படி இருக்கையில் எவ்வாறு நம்ப முடியும்?

முதலமைச்சரின் கூற்றை அவதானிக்கின்ற போது இவ்வரசு எது செய்தாவது வடக்கு,கிழக்கை இவ்வருடத்திற்குள் இணைத்து அவர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்ற வகையில் அமைந்துள்ளது.இதன் பின்னால் என்ன நிகழ்ச்சி நிரல் உள்ளதோ தெரியவில்லை.முஸ்லிம்கள் அவதானமாக இருக்காவிட்டால் எம் மீது மீண்டுமொரு அடிமை சாசனம் எழுதப்படுவதை தவிர்க்க முடியாது.இதனை இணைக்கத் தான் என்னவோ அமைச்சர் ஹக்கீமுடன் அரசியலமைப்பை ஆதரிக்க அனைவரையும் கோரியுள்ளார்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.



Tuesday, May 2, 2017

அமைச்சர் ஹக்கீம் அறிந்து பேசுகிறாரா? அல்லது அறியாமல் பேசுகிறாரா?

நேற்று ஐ.தே.கவின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீம் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் கை கோர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.இது பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

தற்போது வரவுள்ள அரசியலமைப்பில் முஸ்லிம்களுக்கு சாதகமான எந்தவொரு விடயமும் வர வாய்ப்பில்லை.தற்போதுள்ளது போன்று அரசியலமைப்பு இருப்பதே சிறப்பு என்பதே முஸ்லிம்கள் பலருடைய நிலைப்பாடு.வடக்குடன் கிழக்கு இணைப்பு,தேர்தல் முறை மாற்றம்,ஜானாதிபதி ஆட்சி  முறைமை  உட்பட பல விடயங்களில் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் வகையிலான மாற்றம் வரலாமென முஸ்லிம்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.இந் நிலையில் அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென அமைச்சர் ஹக்கீம் கூறுவதை நோக்கும் போது அவர் அறிந்து பேசுகிறார்? அல்லது அறியாமல் பேசுகிறாரா என சிந்திக்க தோன்றுகிறது.

இக் கூற்றினூடாக அமைச்சர் ஹக்கீம் யாரை திருப்தி செய்ய முனைகிறார் ? *அமைச்சர் ஹக்கீம் எம்முடன் இணையுங்கள் என கூறுவதன் மூலம் இவ் அரசியலமைப்பு வரைபின் பின்னணியில் அவர் முக்கிய வகிபாகம் வகிப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.*இவ் அரசியலமைப்பானது தமிழர்களுக்கு சாதகமாக வரலாம் என்பது பலருடைய கருத்து.மு.காவின் முக்கியஸ்தர்கள் அமைச்சர் ஹக்கீம் இந்தியா “றோ” இடம் இருந்து பணம் வாங்கியதாகவும் கூறியுள்ளனர்.இவற்றையெல்லாம் தொடர்பு படுத்தி பார்த்தால்  *இவ் அரசியலமைப்பு வரைபில்,தமிழர்கள் சாதகாமான நிலைப்பாட்டை எட்ட,அது முஸ்லிம்களுக்கு எதிராக அமையும் என்ற நிலை இருந்தும் அமைச்சர் ஹக்கீம் பணியாற்றுகிராரோ என்று சிந்திக்க தோன்றுகிறது.*

நான் கூறுவது பிழை என்று வைத்து கொள்வோம்.மாற்றம் பெறவுள்ள அரசியமைப்பினூடாக அப்படி என்ன நன்மை வரவுள்ளது என்பதை அமைச்சர் ஹக்கீம் தரப்பினர் மனச் சாட்சியை முன்னிறுத்தி விளக்குவார்களா?

இறக்காமத்தில் வைக்கப்பட்ட சிலையை அகற்ற ஜனாதிபதி மைத்திரியை நாடிய அமைச்சர் ஹக்கீம் மே தின கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மேடை ஏறியுள்ளார்.இதனை ஜனாதிபதி மைத்திரி  பார்த்தால் இவருக்கு ஆதரவளிப்பது நமக்கு ஆபத்தானது என சிந்திக்க மாட்டாரா? இன்று ரணிலும் மைத்திரியும் இணைந்து ஆட்சி நடாத்தினாலும் கட்சி வேறு தான்.

இறக்காம சிலை வைப்பு விடயத்தை கையாள அமைச்சர் ஹக்கீம் பிரதமர் ரணிலை அணுகியதாக எந்த செய்திகளுமில்லை.ஆனால்,அமைச்சர் ஹக்கீம் அவருடனேயே அதிகம் தொடர்பில் உள்ளதை பலவற்றை சுட்டி காட்டுவதனூடாக விளக்க முடியும்.சிலை வைப்பில் அமைச்சர் தயா சம்பந்தப்படுவதால் இவ்விடயத்தை பிரதமர் ரணிலின் கையில் வழங்குவதே பொருத்தமானது.அதற்கான தொடர்புகளும் அமைச்சர் ஹக்கீமுடன் உள்ளன.இருந்தும் மைத்திரியுடன் ஒப்படைத்ததன் காரணம் என்ன? இவற்றை சிந்தித்தாலே அமைச்சர் ஹக்கீமின் ஏமாற்று வித்தைகளை அறிந்து கொள்ளலாம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Monday, May 1, 2017

அமைச்சர் ஹக்கீம் இறக்காமத்திற்கு தடுக்க சென்றாரா அல்லது படம் காட்ட சென்றாரா?

நேற்று அமைச்சர் ஹக்கீம் இறக்காம பிரதேசத்திற்கு  விஜயம் செய்திருந்தார்.அவரின் முக நூல் பதிவில் பௌத்த மடாலயம் அமைப்பதற்கான முஸ்தீபு மற்றும்  அத்துமீறிய காணி அபகரிப்பு போன்றவற்றை தடுப்பதற்காகவே அங்கு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.நேற்று இறக்காமம் சென்ற அமைச்சர் ஹக்கீம் இறக்காம பிரதேசத்து மக்களை சந்தித்து பேசியிருந்தார்.மேலும்,அம்பாறை மாவட்டத்தின் ஒரு திருமண நிகழ்விலும் கலந்து கொண்டதாக அறிய முடிகிறது.இதனால் எப்படி  பௌத்த மடாலயம் அமைப்பதற்கான முஸ்தீபு மற்றும்  அத்துமீறிய காணி அபகரிப்பு போன்றவற்றை தடுக்க முடியும்?

பெளத்த சிலையை நிறுவியவர்கள் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள்.பௌத்த மடாலயத்தை கட்ட முயற்சிப்பவர்களும் பௌத்தர்கள்.அப்படி இருக்க இறக்காம முஸ்லிம் மக்களுடன் பேசி தடுக்க முடியும் என்றால் உன் சாணக்கியத்தை போற்ற வார்த்தைகளில்லை.முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதிகள் சிலர் இதற்கு கையொப்பம் வழங்கியதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகிறார்.கையொப்பம் வைத்தவர்கள் முஸ்லிம் என்பதால் அச் சிலையை முஸ்லிம்களே வைத்தார்கள் என அமைச்சர் ஹக்கீம் சிந்தித்திருக்கலாம்.

நான் ஜனாதிபதியுடன் கதைத்துள்ளேன்.இப் பிரச்சினை விரைவில் தீருமென கூற விசேட உலங்கு வானூர்தி ஏற்பாடு செய்து வர வேண்டிய அவசியமில்லை.இதற்கு முன்பு பிரதமருடன் கதைத்து ஒரு வாரத்தில் சிலை அகற்ற நடவடிக்கை எடுத்தது போன்றா ஜனாதிபதியுடனும் கதைத்தீர்கள்? பணம் மிச்சமாக இருந்தால் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்.மறுமைக்காவது பயன்படும்.உலங்கு வானூர்தி கண்டு இறக்காம மக்கள் வாய் பிளந்து விடுவார்கள்.நாம் அவர்களை இலகுவாக நம்பவைத்து சென்று விடலாம் என்று அமைச்சர் ஹக்கீம் கணக்கு போட்டிருக்கலாம்.ஜனாதிபதியுடன் கதைத்த செய்தியை கூற தனது கிழக்கு மாகாண படை பட்டாளம் எல்லோரையும் இறக்காமம் அழைத்தமையே அவர் அந்த மக்களை படம் காட்டி ஏமாற்ற முனைவதை எடுத்துக் காட்டுகிறது.அப்போது தானே வாகனங்களும் ஆட்களும் நிறைந்து தெரிவார்கள்.

இறக்காம சில வைப்பென்பது அமைச்சர் ஹக்கீமுக்கு சவாலான விடயமாக மாறி இருந்தாலும் அதனை வைத்து அவர் இயன்றளவு அரசியல் செய்ய முனைகிறார்.சிலை வைப்பென்பது இறக்காம முஸ்லிம்களின் பிரச்சினை மாத்திரமல்ல.அந்த மக்கள் கட்சி பேதமின்றி முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தையும் தாங்கள் செய்தது போன்று காட்ட முற்பட்டார்கள்.இவ்விடயத்தில் தாங்கள் உளச் சுத்தியுடன் செயற்படுகிறோமென மக்களிடம் காட்டுவதே அமைச்சர் ஹக்கீமுக்குள்ள தேவையாகும்.அது போன்று *கடந்த சனிக்கிழமை ஓட்டமாவடி வந்த அமைச்சர் றிஷாதை இறக்காமத்தை சேர்ந்த சிலர் சென்று சந்தித்துள்ளனர்.அமைச்சர் றிஷாதின் பதில் இவர்களுக்கு திருப்திகரமாக அமைந்ததால் எங்கே இறக்கமமும் தங்களை விட்டு சென்று விடுமோவென அமைச்சர் ஹக்கீம் அஞ்சி இருக்கலாம்.இதனை குறித்த மக்கள் சந்திப்பில் ஒரு நபர் அமைச்சர் ஹக்கீமிடம் கேள்வி எழுப்பும் போது உறுதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.*

இப் பிரச்சினையில் தயா கமகே சம்பந்தப்பட்டிருப்பதால் இவ்விடயத்தை ஜனாதிபதியிடம் பேசுவதை விட தயா கமகே அங்கம் வகிக்கும் ஐ.தே.கவின் தலைவரான பிரதமரிடம் கதைப்பதே பொருத்தமானது.மேலும்,பௌத்த மடாலயம் அமைப்பதென்பது அண்மைக் காலத்தில் தோன்றிய பிரச்சினை என்றாலும் ஆறு மாதங்களுக்கு முன்பே சிலை வைக்கப்பட்டுள்ளது.இதற்கு அமைச்சர் ஹக்கீம் மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கை என்ன? அவரால் இதில் சிறிதும் முன்னேற்றம் காண முடிந்ததா?

சிலை வைத்த போது ரணிலை சந்தித்ததாக கதை ஒன்றை வெளியிட்டதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக இருந்தனர்.இப்போது மடாலய பிரச்சினை எழ ஜனாதிபதியுடன் கதைத்ததான கதை எழுகிறது. பிரச்சினைகள் துளிர் விடும் காலத்தில் துள்ளித் திரிவதை விட பிரச்சினை முடியும் வரை அவைகள் தொடர்பிலான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதே ஒரு சமூக தலைவனின் கடமை.

ஜனாதிபதியிடம் கதைக்கும் போது அவர் பேசுபவர்களுக்கு சாதகமாகத் தான் அந் நேரத்தில் கதைப்பார்.அதனையெல்லாம் நம்பி விட முடியாது.அவர் இது வரை இவ்விடயம் தொடர்பில் செய்த முன்னேற்பாடுகள் என்ன.குறித்த இறக்காம மக்கள் சந்திப்பில் சிலவற்றை பகிரங்கமாக கூற முடியாதென அமைச்சர் ஹக்கீம் கூறுகிறார்.அப்படியானால் சாதித்துவிட்டு மக்கள் சந்திப்பை நடாத்தி காட்டியிருக்கலாமே! அன்று சிலை வைத்தது முதல் இன்று வரை அதனை அகற்ற உறுதியாக இருந்திருந்தால் அவர்கள் இந்தளவு வந்திருக்க மாட்டார்கள்

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.