Pages

.

.

Saturday, January 28, 2017

ஏன் ஹரீஸ் புறக்கணிக்கப்பட்டார்?

(இப்றாஹீம் மன்சூர்)

இன்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதி அமைச்சர்  ஹரீசுக்கு முறையான அழைப்பிதல் வழங்கப்படவில்லை.அது போன்று அவர் இன்று நடாத்திய நிகழ்விற்கு மு.காவின் முக்கிய பிரமுகர்கள் செல்லவில்லை.இந்த நிகழ்வின் மீதான புறக்கணிப்பு எதற்கு?

என்ன தான் குறை கூறினாலும் கல்முனையை சேர்ந்த காணாமல் போன மீனவர்களை கண்டு பிடிப்பதில் அவர் காட்டிய அக்கறையும் அண்மைக் காலமாக சமூக விடயங்களில் அவர் காட்டிக்கொண்டிருக்கும்  அக்கறையும் ஹரீசை ஹீரோவாக மாற்றிக்கொண்டிருக்கின்றது.சிலரது வாய்களில் மு.காவின் அடுத்த தலைவர் இவர் தான் என்ற பேச்சுக்களும் வருவதை அவதானிக்க முடிகிறது.கிழக்கு மாகாணத்தில் சிறந்த தலைமைத்துவம்மிக்கவர் யார் உள்ளார் என்ற வினாவிற்கு இவரது செயற்பாடுகள் பதில் வழங்குகின்றன.இப்படியான நிலையில் இவரை இன்னும் இன்னும் ஹீரோவாக மாற்றுவது நல்லதல்ல.

இந் நிகழ்விற்கு அமைச்சர் ஹக்கீம் சென்றிருந்தால் அந் நிகழ்வு பாரிய பேசு பொருளான நிகழ்வாக மாறியிருக்கும்.இது ஹரீஸ் மீதான மதிப்பெண்ணை இன்னும் அதிகரித்திருக்கும்.அது மாத்திரமல்ல மீனவர்கள் தான் மு.காவிற்கு கண் மூடித் தனமாக ஆதரவளிப்பவர்கள்.இவர்கள் மு.காவின் ஆதரவாளர்களாக இருக்காது ஹரீசின் தனிப்பட்ட ஆதரவாளர்களாக மாறுவது எதிர்காலத்தில் அமைச்சர் ஹக்கீமால் பிரதி அமைச்சர் ஹரீஸை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.அவரது புறக்கணிப்பு இதற்காகவே எப்பதே பலரது ஊகமாகும்.


0 comments:

Post a Comment