Pages

.

.

Friday, January 13, 2017

உண்மைக்கு ஒருபோதும் அழிவில்லை!
♦°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°♦
வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வில்பத்து தேசிய சரணாலயம் மற்றும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான முன்னைய மற்றும் தற்போதைய தகவல்களைச் சேகரித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து ஜனாதிபதியிடம் புதன் கிழமை (11) கையளித்துள்ளார்கள்.

குறித்த அவ்வறிக்கையில் வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் ஜீ.பீ.எஸ் தொழில்நுட்ப உதவியுடன் ஆகாய விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட வில்பத்து தேசிய சரணாலய எல்லை நிர்ணயம், தவறாக முஸ்லிம் குடியேற்றங்களை உள்ளடக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட இடங்களை தவறாக வில்பத்து தேசிய சரணாலய எல்லைக்குற்படுத்திய தவறை திருத்துவதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தின்போது காணி ஒதுக்குதலில் கடைபிடிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் மேற்குறித்த அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பார் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனியாயத்தை தடுப்பதற்காகவும் நமது மக்களை அவர்களது பூர்வீகக் காணிகளில் குடியமர்த்துவதற்காகவும் எத்தனையோ சவால்களையும் இன்னல்களையும்
ஏன் நம்மவர்களுக்காக பல தொலைக்காட்சி நேரடி விவாதங்களில் நமது சத்தியத் தேசியத் தலைவர் துணிந்து நின்று போராடியது மட்டுமல்லாமல் மீள்குடியேற்றத்தற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டதை நாம் என்றும் மறவோம்!

தலைவா!
உங்களது முயற்சிக்கும் உண்மைக்கும் கிடைத்த உறுதியான அங்கீகாரமே இது!!!

0 comments:

Post a Comment