இன்றைய நஸீர் ஹாபிசின் உரை எவ்வாறு அமைந்திருந்தது?
(அபு ரஷாத்)
இன்று நிந்தவூரில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிசின் உரை வழமைக்கு மாற்றமாக மு.கா தலைமைக்கு அதிகம் மதிப்பளித்ததை அவதானிக்க முடிந்தது.எனது இந்த அவதான இடைவெளி மிக குறுகிய காலத்திற்குள் என்பது தான் குறிப்பிடத்தக்கது.
சில மாதங்கள் முன்பு சாய்ந்தமருதில் இடம்பெற்ற கூட்டமொன்றில் (கூக்கிரல் இடப்பட்ட பிரச்சாரக் கூட்டம்) கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் பேசிய போது அவர் அமைச்சர் ஹக்கீமின் நாமத்திற்கு உயர்ந்த கௌரவம் கொடுத்து பேசியதாக அவதானிக்க முடியவில்லை.அமைச்சர் ஹக்கீம் இல்லாவிட்டாலும் இந்த கட்சி இருக்கும் என அவர் அக் கூட்டத்தில் கூறியமை குறிப்பிடத்தக்கது.
இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் அமைச்சர் ஹக்கீமை புகழ்வதையே தனதுரையின் பிரதான பங்காக அமைத்திருந்தார்.இப்படி புகழ்ந்துவிட்டு பஷீர் சேகுதாவூதின் (இப் பெயரை நேரடியாக உச்சரிக்காமல் மறைமுகமாகவே கூறியிருந்தார்) மீது அமைச்சர் ஹக்கீம் எதிர்வரும் பேராளர் மாநாட்டில் கடும் எடுக்க வேண்டும் என்ற பாணியில் அமைத்திருந்தார்.பேராளர் மாநாட்டில் நிர்வாகிகளை தெரிவு செய்வதில் ஹக்கீம் நேரடியாக எதுவும் செய்ய முடியாது என்பது நஸீர் ஹாபிசிற்கு தெரியாதா? இவர் தனது குறித்த வேண்டுகோளை மு.காவின் உயர் பீட உறுப்பினர்களை நோக்கி விடுத்திருந்தால் அது பொருத்தமானதாக அமைந்திருக்கும்.
ஏன் இந்த மாற்றம்? இவ்வளவு நாளும் கொதிக்காத இவர் தற்போது ஏன் அதிகம் கொதிக்கின்றார்? இந்த வினாக்களுக்கான விடைகளை தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தக வெளியீட்டுடன் சம்பந்தப்படுத்திப் பார்த்தால் பெற்றுக்கொள்ளலாம்.
.

Saturday, January 28, 2017
Home »
srilankan news
»
Related Posts:
அமைச்சர் ஹக்கீம் அறிந்து பேசுகிறாரா? அல்லது அறியாமல் பேசுகிறாரா? நேற்று ஐ.தே.கவின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீம் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் கை கோர்க்க வேண்டுமென கோர… Read More
பட்டதாரிகளின் பதறல் இன்று உலகில் சிறந்த வியாபாரம் செய்யும் நிறுவனங்களாக கல்வி நிறுவனங்களும் சுகாதார நிறுவனங்களும் காணப்படுகின்றன.இவை இரண்டும் உலகில் உள்ள அனைவருக்கும் நாளாந்தம் மிகவும் அவசியமானதென்பதால் இவற்றிற்கான கேள்வி… Read More
இறக்காமத்திலும் ஹக்கீமை நோக்கி கேள்வி கணைகள் தொடுத்த மக்கள் அமைச்சர் ஹக்கீம் செல்லுமிடமெல்லாம்,மக்கள் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்து கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் நேற்று இறக்காமம் சென்ற அமைச்சர் ஹக்கீமை நோக்கியும் அங்கிர… Read More
வடக்கு,கிழக்கு இணைப்பு பற்றிய முதலமைச்சரின் கூற்று முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றது அமைச்சர் ஹக்கீம் ஐ.தே.கவின் மே தின கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு முஸ்லிம்களுக்கு பாதகாமான வகையில் அமையும் என்ற நிலை இருந்தும் புதிய… Read More
அமைச்சர் ஹக்கீம் இறக்காமத்திற்கு தடுக்க சென்றாரா அல்லது படம் காட்ட சென்றாரா? நேற்று அமைச்சர் ஹக்கீம் இறக்காம பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார்.அவரின் முக நூல் பதிவில் பௌத்த மடாலயம் அமைப்பதற்கான முஸ்தீபு மற்றும் &nbs… Read More
0 comments:
Post a Comment