“சல்மானே தேசியப்பட்டியலுக்கு தகுதியானவர்” போராளிகளை வைத்து கூறும் ஹக்கீம்
(இப்றாஹீம் மன்சூர்)
சல்மானிடமுள்ள தேசியப்பட்டியல் அதற்கு சொந்தமானவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கருத்து எழும் போதெல்லாம் சல்மானும் தேசியப்பட்டியலுக்கு தகுதியானவர் என்ற விடயத்தை தூக்கி விடுவார்கள்.
நேற்று சல்மான் தொடர்பில் மறைந்த மு.காவின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப் கூறிய காணொளி வெளிவந்திருந்தது.இதனை இன்று அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களால் மாத்திரமே வெளியிட முடியும்.இதே வகையில் அமைச்சர் ஹக்கீமும் நியாயப்படுத்தியதை சில இடங்களில் அவதானிக்க முடிந்தது.
இவற்றையெல்லாம் தொடர்பு படுத்து பார்க்கின்ற போது இக் காணொளி வெளியீட்டின் பின்னால் ஹக்கீமின் திருவிளையாடல் இருக்குமென்பதை இலகுவாக அறியலாம்.
அஷ்ரபின் கருத்தியல் தொடர்பான விடயங்களை ஒரு விடயத்தை உறுதி செய்ய தூக்கலாமே ஒழிய ஒரு தனி மனிதனை பற்றி அவர் புகழ்ந்ததை பெரும் ஆதாரமாக கொள்ள முடியாது.சில வேளை அஷ்ரபின் குறித்த மனிதன் மீதான மட்டிடல் தவறாக இருக்கலாம்.கருத்தியலிலும் நூறு வீதம் சரியாக இருக்கும் என்று கொள்வதே மடமை.
அண்மைக் காலமாக சல்மான் தொடர்பான விடயங்களை நாம் பார்க்கின்ற போது அவர் பெரும் தியாகி போன்று தோன்றவில்லை.ஹசனலியின் செயலாளர் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதாக பலரும் பதறிக்கொண்டிருந்த போது அப்படி எதுவும் நடைபெறவில்லையென்ற பெரும் பொய்யை உரைத்தவரே இந்த சல்மான்.உயர் பீடக் கூட்டத்தில் யாப்பை வாசித்தவர் இந்த சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு அதிகாரம் குறைக்கப்பட்டமை தெரியாமல் இருந்திருக்குமா? இவர் ஹக்கீமை திருப்தி செய்ய சென்றதை நான் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
தாருஸ்ஸலாம் கொள்ளை விவகாரம் தொடர்பாக வெளிவந்திருந்த புத்தகத்திலும் இவரது பெயர் வெளிவந்திருந்தது.இன்று வரை அவரால் அதற்கு மறுப்புக் கூற முடியாத நிலையே உள்ளது.இவரின் தற்கால விடயங்களை கவனமா நோக்குகின்ற போது அவர் பெருந் தியாகி போன்று தோன்றவில்லை.
இவர் தற்போது ஹக்கீமின் நெருங்கியவர் என்பதில் யாருக்கும் அணுவளவும் சந்தேகம் இருக்காது.அவருக்கு வாக்காளத்து வாங்கும் முகமாக அவர் செயற்படுவதையும் யாராலும் மறுக்க முடியாது.
அவர் பற்றிய தனிப்பட்ட விடயங்களை விடுத்து அவர் பற்றி இந் நேரத்தில் போராளிகளை வைத்து சில முக்கிய புள்ளிகள் புகழ் பாடுவதன் நோக்கமென்ன? அவரிடம் அப்படியே தேசியப்பட்டியல் இருக்கட்டும் என அவர்கள் விரும்புகின்றனரா? அப்படியானால் மூஞ்சை போராளிகளின் பின்னால் ஒழித்து வெளிப்படுத்தாமல் நேரடியாக கூறலாமே!
அனைத்தையும் விடுத்து உடனடியாக தேசியப்பட்டியல் உரிய நபர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.உரிய நபர்கள் தங்களது தேசியப்பட்டியல் இன்னுமொருவர் கையில் இருப்பதை வேடிக்கை பார்க்காது பறித்தெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
.

Tuesday, January 24, 2017
Home »
srilankan news
»
Related Posts:
குவைதிர்கானின் மன்னார் பெரியகடை முஹையதீன் ஜும்மா பள்ளிவாயல் தொடர்பான குற்றச் சாட்ட்டின் உண்மை முகம் அமைச்சர் றிஷாதை ஏசுவதற்காகவே மு.காவினால் நிரந்தர கொந்தராத்து வழங்கப்பட்டிருக்கும் குவைதிர்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள … Read More
மு.காவின் நாற்றம் முஸ்லிம்களுக்கு கேடு இன்று மு.கா பணம் வாங்கிக்கொண்டு இவ் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கிய நாற்றம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வரை சென்றடைந்துள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகளே இவ் நாற்றம… Read More
மாணிக்கமடு சர்ச்சையை தீர்க்கவேண்டிய முழுப்பொறுப்பும் அம்பாறை அரசியல் அதிகாரமுள்ள மு.காவுக்கே உள்ளது.. அம்பாறை மாவட்டத்தில் மு.கா பலத்த அரசியல் அதிகாரங்களுடன் உள்ளது.அங்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.அதில் இருவர் … Read More
சமுதாயத்துக்காக துணிந்து அரசியல் செய்யும் அமைச்சர் றிசாத் பதியுதீன்,,.... அன்று முஸ்லிம் சமுதாயம் அரசியல் அனாதைகளாக இருந்ததை உணர்ந்த மறைந்த தலைவர் அஸ்ரப் தனது சமுகத்தின் விடிவுக்காக முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சியை ஆரம்ப… Read More
கண்டியாப்பால் கதிகலங்கி நிற்கும் றவூப் **************** ##ஹக்கீம் ************** கண்டியில் நடைபெற்ற பேராளர் மாகாநாட்டில் பெளத்து வரை கட்சியின் தலைவனாக இருக்க வேண்டும் என்று யாப்பில் செய்த மாற்றம் இன்று கட்சியை அழிவுப… Read More
0 comments:
Post a Comment