Pages

.

.

Wednesday, February 8, 2017

ஹரீஸ் மக்களால் தலைவராக இனங்காட்டப்படுகிறார்



(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

மு.காவின் அடுத்த தலைவர் யார் என்ற வினாவிற்கான விடையை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.அது ஹரீஸ் என்ற நாமம் தான்.தற்போது அமைச்சர் ஹக்கீமின் நாமம் பல இடங்களில் அசிங்கப்பட்டுக் கொண்டிருப்பதால் இரத்தம் சிந்தி வளர்க்கப்பட்ட மு.காவின் நலன் கருதி மு.காவின் அமைச்சர் ஹக்கீம் தலைமைத்துவத்திலிருந்து அமைச்சர் ஹக்கீம் விலக வேண்டும் என்பதுவே இலங்கை முஸ்லிம் மக்களின் கருத்தாகவுள்ளது.

இன்று மக்களின் வாய்களில் மு.காவின் தலைமைத்துவத்திற்கு தகுதியானவராக ஹரீஸ் இனங்காட்டப்படுகிறார்.மக்கள் இவரை தலைவராக்குங்கள் என கூறுவதால் இவருக்கு தலைமைப் பதவியை வழங்குவது பொருத்தமானது.தற்போது மு.காவின் தவிசாளர் பஷீர்  உயர்பீடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் குறைந்தது  இவருக்கு தவிசாளர் பதவியாவது இம் முறை வழங்கப்பட வேண்டும்.

மக்கள் சேவை,ஒழுக்க விழுமியம் நிறைந்தவராக காணப்படுகின்றமை,பாராளுமன்றத்தில் ஹரீசின் குரல் ஓங்கி ஒலிக்கின்றமையே ஆகியவையே அவரை மக்கள் தலைமைத்துவத்திற்கு தகுதியானவராக இனங்காட்டுவதற்கான காரணமாகும்.

0 comments:

Post a Comment