Pages

.

.

Sunday, February 5, 2017

வன்னி மக்களை மடையர்களாக்க நினைத்த சாணக்கியமும் அதன் தும்பு தூக்கிகளும்.

இன்று 05.02.2017 ஞாயிற்றுக்கிழமை  சிலாவத்துறை முச்சந்தியில் முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ஹீனைஸ் பாறுக் தலைமையில் கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததன் நோக்கம் வன்னி மக்களை மடையர்களாக்கவும், பொய் பூச்சான்டி காட்டவும், கிழக்கில் விரட்டப்பட்டுவிட்டோம் வட மாகாணத்தை ஏமாற்றுவோம் எனும் தொனிப் பொருளில் இக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர்.  தமக்கும் தமது கட்சிக்கும் ஆதரவாளர்கள் இல்லாத குறையை அறிந்த சாணக்கியமும் அதன் தும்பு தூக்கிகளும் புத்தளத்திற்கும், கிழக்கிற்கும்  ஏனைய சில ஊர்களுக்கும் 10ற்கு அதிகமான பேரூந்துகளை அனுப்பி சோற்றுப் பாரிசலும் ஆயிரம் ரூபா பணமும் கொடுத்து ஆதரவாளர்களை அதிகமாக்க எண்ணி மடப்பட்டம் கேட்டனர். அங்கு வந்தவர்கள் பணத்துக்காக வந்தவர்களே தவிர சிலாவத்துறையை சேர்ந்தவர்கள் அல்ல என உறுதியான தகவல் கிடைத்தது.

பொதுக் கூட்டமும் ஆரம்பமானது பணம் கொடுத்து வாடகைக்கு பெறப்பட்ட கூலியாட்களைத் தவிர ஆதரவாளர்கள் என்று சொல்லுவதற்கு யாருமில்லை. பொதுக் கூட்டம் ஆரம்பமானது. நிகழ்வின் பிரதம அதிதியாக சாணக்கியம் ரவூக் ஹக்கீம் கலந்து கொண்ட போதும் அவரின் முகத்தில் புன்முறுவலில்லை காரணம் பசீர் சேஹுதாவுத் எந்த நேரமும் CD யை வெளியிடலாம் என்ற அச்சம்.

நிகழ்வில் உறையாற்றிய பிரமுகர்கள் யாரும் ஹக்கீமுக்கு எதிராக பசீர்சேகுதாவுத் இனால் வெளியிடப்பட்ட உண்மைகளைப் பற்றிப் பேசவுமில்லை அதற்கான சரியான விளக்கங்களையும் அழிக்காமல் சலப்பிக் கொண்டிருந்ததை சாணக்கியத்தால் அவதானிக்க முடிந்தது.

இதன் போது பேசிய கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நஸீர் அவர்கள் தான் ஒரு ஹாபிஸா என்று வினவும் அளவில் பொய்யான பித்தலாட்ட பேச்சுக்களைப் பேசியது மாத்திரமன்றி வன்னிக்கு அபிவிருத்தி வேலைகள் ஆரம்பமாகும் என்றும் கட்சியின் அடுத்த பாராளுமன்ற உறுப்பினர் தேசியப்பட்டியல் வன்னி மாவட்டத்திற்கு அதாவது ஹூனைஸ் பாருக்கிற்கு வழங்கப்படுமென்றும் அப்பட்டமான பொய்யைக் கூறினார். கட்சியின் தேசியப்பட்டியல் ஆனது சல்மானுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டு 02 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அந்த இரண்டு வருடத்திற்குல் தலைவர் ரவூப் ஹக்கீமால் அட்டாளைச்சேனைக்கும், ஹஸனளிக்கும், குருனாகலுக்கும், புத்தளத்திற்கும், கட்டாருக்கும் என்று பொய்ப் பூச்சான்டி காட்டி தற்பொழுது வன்னிக்கு வழங்கப்படும் என்றும் பொய் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. வன்னி மக்களை மடையர்களாக்கவா இந்த பூச்சாண்டி காட்டப்பட்டது என்பது நகைச்சுவைக்குறிய விடயமாகும்.

அதுமாத்திரமின்றி இன்னும் பல அபிவிருத்திகள் செய்யப்படவுள்ளதாகவும் முதலமைச்சரின் வாயால் பம்மாத்தாக மொழியப்பட்டுள்ளது மாத்திரமின்றி மாமனிதர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களைப் பற்றியும் பேசினார்.  மாமனிதரைப் பற்றி பேசுவதற்கு முதல் முதலமைச்சர் அவர்களே நீங்களும் சேர்ந்துதான் தாறுஸ்ஸலாம் சொத்தை அபகரித்ததாக தாறுஸ்ஸலாம் மர்மங்கள் எனும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. கூறப்பட்டுள்ள உண்மைக்கு உங்களால் எதுவிதமான பதிலும் அளிக்காமல் கூறப்பட்ட விடயங்கள் உண்மைதான் என்று அமைதியாக வாய் மூடி மறைமுகமாக ஏற்றுக் கொண்ட உங்களுக்கு மாமனிதரைப் பற்றிப் பேச என்ன தகுதியுன்டு என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

மேடைப் பேச்சைக் கேட்டு உங்களுக்கு ஆதரவு தெரிப்பது போல் கூலிக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட கூட்டங்கள் உங்களைப்போன்றவர்களை ஏற்றுக் கொண்டதா என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது??? இந்த பேச்சை நீங்கள் தற்பொழுது கிழக்கில் வந்து ஆற்ற முடியுமா ??? கல்லறி நிச்சயம்??கட்சியின் தற்போதைய நிலமை அவலம் அதனை சரிபடுத்த முடியாமல் வாய் மூடியாக இருக்கும் நீங்கள் சமூகத்திற்கு ஏதும் பிரச்சினைகள் வரும் போது எப்படி வாய் திறந்து பேசுவீர்கள்??....

முதலமைச்சர் அவர்களே!! தவிசாளர் பசீர் சேகுதாவுத் கூறிய சில விடயங்களை ஞாபகமூட்டுகிறேன்... பாசிக்குடாவில் பெண்களுடன் கூத்தாடி  கொள்ளுப்பிட்டிய பொலிஸ் வரைக்கும் கொண்டு சென்றுள்ளாராம் உங்களுடைய சாணக்கியத் தலைவர் இதற்கான CD ஆதாரமும் உண்டாம் வீடியோ காட்சிகள் பல உள்ளதாம் இதனை வெளியிடுவேன் எனக்கூறியுள்ளார் உங்கள் கட்சியின் தவிசாளர் அவர்கள் அதற்கு நீங்களோ உங்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களோ அல்லது காமசூஸ்திரத் தலைவர் சாணக்கியமோ வாய் திறந்து ஏதாவது கூறினார்களா??? இது பொய் உண்ணால் முடிந்தால் ஆதாரங்கள் உள்ளது எனில் வெளியிடலாம் என்றாவது எதிர்பைக் காட்டமுடிந்ததா????  பதிளளிக்க முடியாமைக்கான காரணம் தவிசாளர் கூறியவைகள் உண்மை என்ற காரணத்தினாலா??? அல்லது நீங்கள் வாய்மூடி இருப்பது உங்களுக்கும் பங்குன்டா??? ....  இதற்கு பதிளளிக்காமல் பயத்தில் நடுங்கி தவிசாளரை நீக்கினார்களாம் சிரிப்பானவிடயம். இவ்வாறு உங்களுடைய கட்சியினதும் கட்சித் தலைவரினதும் மானம் கப்பல் ஏறிக் கொண்டிருக்கும் போது எங்கள் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் அதன் தேசியத் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீனையும் பற்றி பேச முதலமைச்சரே,  சாணக்கியமே!! உங்களுக்கு என்ன தகுதியுண்டு...???

முதலமைச்சரே! உங்கள் நடத்தையால் எங்களால் ஊகிக்க முடிந்தது கட்சியையும் தலைமையையும் நீங்கள் அபகரிப்பதற்கான நாடகம் போன்று தோன்றுகிறது... நீங்கள் சாய்ந்தமருது பொதுக்கூட்டத்தில் கூறினீர்கள் மாமனிதர் உருவாக்கிய கட்சி வளர்ச்சிப் பாதையில் பயனித்துக்கொண்டே இருக்கும் சேர்ந்து பயனிக்கவிரும்புவவர்கள் பயனிக்கலாம் முடியாதவர்கள் குழப்படி பண்ணாமல் தானாகவே விலகிச் செல்லலாம் இது அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும் குறிப்பாக தலைவருக்கும் தான் முடியவில்லை எனில் தானாக விலகிக் கொள்ளளாம் கட்சி பயனிக்கும் என்று கூரினீர்கள்..... ஞாபகமுள்ளதா அதன்பிறகு கட்சியின் உயர்பீடக் கூட்டத்திலோ பிரச்சாரக் கூட்டங்களிலோ எதுவித பேச்சையும் பேசாமல் கூலிக்கு ஆள் வைப்பது போல் தவம், ஆரிப்சம்சுடீன் போன்றவர்களைப் பேசவிட்டது மாத்திரமில்லாமல் தற்போது தலைவருக்கு எதிராக தவிசாளரால் சாட்டப்பட்ட குற்றங்களுக்கும் நீங்கள் வாய் திறந்து பதிளளிக்காமல் தவம் ஆரிப்சம்சுடீனை பேசவிட்டு நீங்கள் மெளனியாக இருந்து கட்சித் தலைமையையும் கட்சியையும் நீங்கள் பெறுவதற்கான நாடகமா????
இல்லை தவிசாளரால் சாட்டப்பட்ட குற்றத்தில் உங்களுக்கும் பங்குன்டா???

கட்சியின் தலைவர் சாணக்கியமவர்களால் சில நாட்களாக அவரின் முகத்தில் சந்தோசமில்லை புன்முறுவலில்லை பயம் பயம் அச்சத்தில் இருக்கின்றார் காரணம் தவிசாளர் எந்த சமயத்திலும் CD யை வெளியிட வாய்ப்புள்ளது. உங்களின் நிலையே கவலைக்கிடம் தவிசாளர் ஆதாரத்தை வெளியிட்டு உண்மையானால் உங்கள்  கட்சியின் நிலை குர்ஆன் ஹதீஸ் யாப்பில் உறுவாக்கப்பட்ட கட்சியின் நிலை இதுவா,,,,??

மக்களே விழித்தெழுங்கள் கிழக்கில் விரட்டப்படும் முஸ்லிம் காங்கிரஸினர் தற்போது வட மாகாண மக்களை ஏமாற்ற வந்து கொண்டிருக்கின்றனர் அவதானமாக இருங்கள் சோற்றுப் பாரிசலுக்கும் பணத்துக்கும் சோரம் போய் உங்களுடைய உரிமையை விட்டுவிடாதீர்கள்.....

வன்னி மக்களே பயப்பட வேண்டாம் உங்களுக்கு என்றும் பக்கபலமாக உங்கள் மண் பெற்றுத்தந்த எங்கள் தேசியத் தலைவர் றிஸாட் பதியுதீன் உள்ளார். அவரே உங்களுக்கு சேவை செய்ய முடியும் உங்களை பாதுகாக்க முடியும்.வன்னியின் ஒளி, விடியல் என்றும் இன்ஸா அல்லாஹ் எப்போதும் றிஸாட் பதியூதீனே...

அஹமட் ஸாஜித்



0 comments:

Post a Comment