Pages

.

.

Friday, February 10, 2017

மு.காவில் தலைமைத்துவ மாற்றம் வேண்டும்

எதிர்வரும் பேராளர் மாநாட்டில் மு.காவின் தலைமைத்துவத்தில் மாற்றம் வர வேண்டுமென்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.இதற்கு பலவாறான நியாயங்கள் (அமைச்சர் ஹக்கீம் காலத்து மு.கா தலைமைத்துவம் பற்றி பல முறை பலராலும் கதைக்கப்பட்டுள்ளதால் அது பற்றி இன்னும் கதைப்பது அவசியமற்றது என கருதி அது பற்றி எழுதுவதை தவிர்ந்து கொள்கிறேன்) முன் வைக்கப்படுகின்றன.

அவைகள் பிழைகள்  தான் என்பதை ஏற்றுக்கொள்ளும் மு.காவினர் அதற்கு தலைவர் காரணமல்ல பஷீர் தான் காரணம் (இன்று நீர் வளங்கள் அதிகார சபையின் ஊடகப்பிரிவில் பணியாற்றும் சகோதரர் ஒருவர் நவமணியில் எழுதிய கட்டுரையிலும் இந்த நியாயத்தை பார்க்க முடிந்தது) என்ற நியாயத்தை எடுத்து போடுகின்றனர்.அப்படியானால் இவ்வளவு நாளும் ஒரு டம்மித் தலைமையாகத் தான் அமைச்சர் ஹக்கீம் இருந்தார் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு தனிப்பட்ட நபரால் ஹக்கீமை தான் நினைத்த திசைக்கு மாற்ற முடியுமாக இருந்தால் நிச்சயமாக அந்த தலைமைத்துவத்திற்கு அமைச்சர் ஹக்கீம் தகுதியற்றவர்.ஒரு கட்சியின் தலைவர் காலத்தில் இடம்பெற்ற பிழைகளை அமைச்சர் ஹக்கீமே ஏற்க வேண்டும்.

இப்படிக்கு
அபு ரஷாத் (அக்கரைப்பற்று)


0 comments:

Post a Comment