Pages

.

.

Sunday, February 26, 2017

சாய்ந்தமருது மக்களின் கனவுடன் விளையாட வேண்டாம்

ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து வை.எல்.எஸ் ஹமீத் சாய்ந்தமருது மக்களின் பல நாள் கனவான சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் கை வைத்துள்ளார்.இவரின் அறிக்கை சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை தடுக்கும் சிந்தனையை விதைக்கும் வகையில் அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.சகோதரர் வை.எல்.எஸ் ஹமீத் அவர்கள் சாய்ந்தமருது மக்களுக்கு இந்த துரோகத்தை ஒரு போதும் செய்து விட வேண்டாம்.சாய்ந்தமருது மக்களுக்கு துரோகம் செய்வது இவருக்கொன்றும் புதிதல்ல.இவர் சாய்ந்தமருதின் எல்லையை மாற்றியதன் பிரதான சூத்திரதாரியாக கருதப்படுபவர்.இதனை ஏன் செய்தார் போன்ற விளக்கங்களை இன்னுமொரு கட்டுரையினூடாக தெளிவுபடுத்த எண்ணியுள்ளேன் (இன் சா அல்லாஹ்).

அண்மையில் அ.இ.ம.காவினுடையை தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன்,பிரதி அமைச்சர் அமீர் அலி,அரச வர்த்தக கூட்டு தாபனத்தின் தலைவர் ஜெமீல் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக சாய்ந்தமருது மக்கள் மிக விரைவில் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுக்கொள்வார்கள் என்பது உறுதியாகியுள்ளது.இது நடைபெற்றால் சாய்ந்தமருதை அமைச்சர் றிஷாத் மிக இலகுவாக கைப் பற்றுவார்.அமைச்சர் றிஷாத் சாய்ந்தமருதை கைப்பற்றினால் அம்பாறை மாவட்டத்தை வீழ்த்துவது அவருக்கு மிக இலகுவாகிவிடும்.இதனை தடுக்கும் நோக்கிலேயே வை.எல்.எஸ் ஹமீத் இவ்வாறான விடயங்களை கூறி தடுக்க முனைவதாக ஊகிக்க முடிகிறது.

இத்தனை காலமும் அமைதியாக இருந்த வை.எல்.எஸ் ஹமீத் தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இவர் இத்தனை காலமும் எங்கிருந்தார்? சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கை நியாயமானதா? என பல இடங்களில் விவாதிக்கப்பட்டு மக்களின் ஆணையை பெற்ற அனைத்து அரசியல் வாதிகளும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அப்போதெல்லாம் இவர் வாய் மூடி மௌனமாக இருந்துவிட்டு இப்போது கொதிப்பதன் மர்மம் என்ன? இவரின் பின்னணியில் அ.இ.ம.காவின் எதிரிக் கட்சியின் பின்புலம் உள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.எது எவ்வாறு இருந்தாலும் சாய்ந்தமருது மக்களுக்கு துரோகமிழைக்கும் இவ்வாறான பேச்சுக்களை வை.எல்.எஸ் ஹமீத் தவிர்க்க வேண்டும்.

அல்-ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ் (சாய்ந்தமருது)

0 comments:

Post a Comment