Pages

.

.

Saturday, February 4, 2017

வன்னி மக்கள் அரசனை நம்பி புரிசனை இழப்பார்களா?

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

நாளை அமைச்சர் ஹக்கீம் வன்னிக்கு விஜயம் செய்யவுள்ளார்.இவர் என்ன செய்துவிட்டு அங்கு செல்கிறார் என சிந்திக்க வேண்டியது அங்குள்ள ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.இதனை பெரும் தூரம் சென்று சிந்திக்காமல் மிக எளிமையாக சில விடயங்களைக் கொண்டு விளங்கிக்கொள்ளலாம்.

வன்னி மக்கள் சுத்தமான குடிநீரை பெறுவதற்கு மிகவும் கஸ்டப்படுவது யாவரும் அறிந்ததே.இதனை நிவர்த்திக்கும் அமைச்சு அமைச்சர் ஹக்கீமிடம் தான் உள்ளது.அவர் என்ன செய்துள்ளார்.அவரை விட இத் தேவையை நிவர்ப்பிப்பதில் அமைச்சர் றிஷாத் ஈடுபாடு காட்டி சாதித்திருப்பது யாருமே மறுக்க முடியாத உண்மை.

இன்று அமைச்சர் றிஷாதிற்கு எதிராக இனவாதிகளின் தாக்குதல் எதற்காக? சிந்தித்து பாருங்கள்.எத்தனை விவாதம்? எத்தனை ஏச்சு பேச்சு? அமைச்சர் ஹக்கீம் கூட வில்பத்து பிரச்சினை இனவாத பின்னணி என்பதை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இவ் விடயத்தில் மூக்கை நுழைத்ததற்காக தனது தனிப்பட்ட மற்றும் குடும்பத்தை இழுத்ததெல்லாம்  எத்தனை அவமானங்கள்? இதெல்லாம் எதற்காக? வன்னி மக்களின் விடிவிற்காக.அமைச்சர் ஹக்கீமைப் போன்று அமைச்சர் றிஷாதும் மௌனம் காத்தால் இன்று இனவாதிகள் வன்னியை சுருட்டி அந்த மக்களை வீதியில் விட்டிருப்பார்கள்.இதனை அந்த உணரத் தவறினால் அவர்களைப் போன்ற கை சேதவாளர்கள் யாருமே இல்லை.

இப்போது வன்னி ஒளியேற்ற வருகிறாராம் அமைச்சர் ஹக்கீம்.ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன்.வன்னிக்கு ஒளி அமைச்சர் றிஷாத் தான்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மக்கள் அமைச்சர் ஹக்கீமுக்கு தகுந்த பாடம் புகட்டி இருந்தார்கள்.நாளை இடம்பெறவுள்ள வன்னியின் ஒளிக்கும் பாடம் புகட்டுவார்கள் என நம்புகிறேன்.அல்லாது போனால் அவர்களை துரோகிகள் யாருமே உலகில் இருக்க மாட்டார்கள்.நாளை மு.காவிற்கு புகட்டப்படும் பாடம் அமைச்சர் றிஷாதின் செயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக அமைய வேண்டும்.


0 comments:

Post a Comment