Pages

.

.

Wednesday, February 1, 2017

அரசன் ஆண்டு அறுப்பான் தெய்வம் நின்று 
அறுக்கும் 

இன்று இலங்கையில் அனைவராலும் பேசப்படும் விடயம் தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கிம் அவர்கள்  பற்றிய விடயம்

கடந்த 17 வரூடமாக அம்பாறை மாவட்ட மக்கள் நம்பிக்கை கொண்டு வாழ்ந்த தலைவர் அந்த மக்களுக்கு செய்த துரோகம் என்றால் (கியலா விடக் நே ) சொல்லி வேலை இல்லை அது  நாட்டுக்கே தெரியும் அதன் பலனை இன்று றவூப் ஹக்கிம் அனுபவிக்கிறார் இந்த தன்டனை என்பது ஹசன் அலிக்கு செய்த துரோகம் என்று சிலர் பேசுகின்றனர் அப்படி ஒரு சூழ்நிலை இருந்தாலும் இந்த  தன்டனை என்பது அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் என்னும் மரம் ஓங்கி உயர்ந்து வாழ உறுதுணையாக இருந்த முன்னால் மாகான சபை உறுப்பினர் ஜெமீலுக்கு செய்த கழுத்தறுப்புக்கு இறைவன் கொடுத்த தண்டனை என்று தான் கூற வேண்டும்

தலைவரின் இலட்சியத்தை நிறைவேற்ற கட்சியின் வளர்ச்சிக்காக  இரவு பகல் தன் வாழ்வை அர்பனித்த dr ஜெமீல் மக்கள் ஆதரவை பெற்று பல தேர்தலில் வெற்றி  பெற்றார் அது சில அரசியல்வாதிகளுக்கு வயிற்று  ஏரிச்சலை ஏற்படுத்தியது அதில் முதல் நபர் றவூப் ஹக்கிம் என்று தான் கூற வேண்டும்

வெளிநாட்டு தொடர்பு தெரியாத ஹக்கிமை மலேசியா பாகிஸ்தான் இரான் போன்ற நாடுகளுக்கு அழைத்து சென்று அவர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்தார் அதன் மூலம் மறைமுகமாக பல நன்மைகளை அடைந்தார்

அதுமட்டுமல்ல மற்றவர்களை போல்  அரசியல் வியாபாரம் செய்யாமல் தேர்தல் காலங்களில் தனது சொந்த பணத்தை கட்சிக்காக செலவு செய்தவர் drஜெமீல்  அவர் மூலம் பல நன்மைகளை அடைய முதல்வர் பதவி தருவதாக ஆசை காட்டினார்dr ஜெமீல் ஆசை வார்த்தைகளை நம்பவில்லை இறுதியில் ஹபீஸ் நசீர் அவர்களிடம் பேரம் பேசி பணத்தை வேண்டிக் கொண்டு முதலமைச்சர் பதவியை கொடுத்தார்  இப்படியெல்லாம்  மோசம் செய்ததை drஜெமீல் மக்காவில் வைத்து அல்லாஹ்விடம் கூறினார் இப்போது அல்லாஹ் தண்டனை கொடுத்துள்ளான்

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த drஜெமீல் அவர்களுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை தடுக்க வேண்டும் drஜெமீலை கட்சியை விட்டு துரத்த வேண்டும் என்ற நயவஞ்சக சிந்தனையோடு ஹக்கிம் மறைமுகமாக செயல்பட்டார் அதனால் ஹக்கிம் drஜெமீல் முறுகல் ஏற்பட்டது

 இரு தடவைகள் மாகான சபை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவிக்கு தகுதியான உறுப்பினராக இருந்த வேலை முதலமைச்சர் பதவியை தருவதாக கூறி விட்டு கட்சியின் சொத்தை அபகரித்து கட்சிக்கு துரோகம் செய்த நசீர் அகமட்டுக்கு கொடுத்தார்

மாகான சபையில் சமுதாயத்துக்காக drஜெமீல் குரல் கொடுக்க இருக்கும் போது அதை சிலரின் நலனுக்காக தடுத்து நிறுத்துதல்

கட்சி உறுப்பினர்களிடையே இரு பக்க மேளத்தை தட்டி பகைமையை ஏற்படுத்தல்

மற்றவன் தூன்பத்தை ரசித்து சிரிக்கின்ற  அநியாயக்காரனாக நடித்தல்

இப்படி ஒரு தலைவனுக்கு தகுதியற்ற கருமங்களை செய்வதை உணர்ந்த ஜெமீல்  தனது சமுதாயத்துக்காக அரசியல் பாதையை மாற்றி நாட்டில் மக்களுக்காக அரசியல் செய்யும் ஒரு செயல் வீரன் சொல் வீரன் அமைச்சர் றிசாத் அவர்களின் கரத்தை பலப்படுத்த தனது மாகாண சபை உறுப்பினர் பதவியையும் கூட  தூக்கி ஏறிந்து விட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இனைந்தார்

Drஜெமீல் அவர்களின் வருகை என்பது அம்பாறை மாவட்டத்தில் மக்கள்  காங்கிரஸ் கட்சிக்கு பெறும் வரப்பிரதாசமாக இருந்தது  கடந்த தேர்தலில் 33000 வாக்குகள் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர் drஜெமீல் என்பது அமைச்சர் றிசாத் அவர்களுக்கு தெரியும் அதனால் மக்கள் ஆதரவு கொண்ட சாய்ந்தமருது முத்து drஜெமீல் அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட  அதிகாரம் கொண்ட இலங்கை வர்த்தக கூட்டுத்தாபன தலைவராக இருக்கிறார் இதனால் மக்களுக்கு அதிக சேவைகள் செய்து தனது ஊர்  மண்ணில் கூட பாரிய அபிவிருத்தி வேலைகள் செய்து வருகிறார் அது மட்டுமல்ல அம்பாறை மாவட்டம் இன்று அபிவிருத்தி அடைவதற்கு இந்த ஜெமீல் தான் காரணம் என்று கூற வேண்டும்

ஒரு  நல்லவனை மதிக்காத ஹக்கிம் இன்று மக்கள் பேசும் நகைச்சுவை மண்னனாகி விட்டார் பாவம்
இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு பஷிரோடு பேச யாருமில்லை ஹக்கீமுக்கு துனையாக கூட போக யாருமில்லை போகும் எவரும் உத்தமனுமில்லை இதனால் ஜெமீல் போன்ற நல்ல மனிதனை நினைத்து ஹக்கிம் அழுதாலும் ஆச்சரியப்பட தேவையில்லை எல்லாம் இறைவன் செயல்

ஜெமீல் இன்று முஸ்லிம் காங்கிரஸில் இருந்தால் ஹக்கிமுக்கு உறுதுணையாக இருந்திருப்பார் அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்து இருக்காது
ஜெமீல் அவர்களின் ஆலோசனையால் கட்சி மறுசீராமைப்பு செய்யபட்டு இருக்கும் இவைகளை நினைத்து இனி அழுது என்ன பலன் செய்தார் செய்த பலன் அனுபவிக்க தான் வேண்டும்  வேண்டும்

0 comments:

Post a Comment