Pages

.

.

Wednesday, December 21, 2016

மட்டு மங்கலாராம விஹாராதிபதியை மாற்ற வேண்டும்!


மட்டக்களப்பில் இனங்களிடையே முறுகல் நிலை தோன்றக் காரணமாகவுள்ள மங்கலாராம விஹாராதிபதியை மாற்றி, வேறு ஒருவரை குறித்த விஹாரைக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதியமைச்சரிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் அம் மாவட்ட செயலகத்தில் புத்தசாசன மற்றும் நீதிதுறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. 

மாவட்ட அரசாங்க அதிபர், பட்டிப்பளை பிரதேச செயலாளர், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், அலிசாகிர் மௌலானா ஆகியோரின் பங்களிப்புடன் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. 

இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போது, 

அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டிருந்தது. சிறிய விடயம் பாரிய பிரச்சினையாக காட்டப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட முறுகல் நிலையினை போக்கும் வகையில் இந்த கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. 

இனிவரும் காலங்களில் சிறிய பிரச்சினைகளை அந்தவேளையில் தீர்த்துக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. 

ஒரு பல்லின கலாசாரம் உள்ள நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து சந்தோசமான வாழக்கூடிய நிலைமையில் சிறிய பிரச்சினைகள் கையாளப்படவேண்டும் என்றும் மக்கள் மத்தியில் பிளவுகள் பிரிவினைகளை ஏற்படுத்தாத வகையில் கருத்துகள் பரிமாறப்பட வேண்டும் என அமைச்சர் எங்களிடம் சினேகபூர்வமாக தெரிவித்தார். 

இதன்போது பிரதேச செயலாளரும் தான்சார்ந்த கருத்துகளை கூறியிருந்தார். இதன்போது தவறான கருத்தும் கூறப்பட்டிருந்தது. இங்குள்ள கால்நடைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்பட்டிருந்தது. 

எந்த கால்நடைகளும் எந்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் இல்லையென்பதை இங்கு நான் மறுதலித்துக்கூறுகின்றேன், எனத் தெரிவித்தார். 

0 comments:

Post a Comment