ஞானசேர தேருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுத்தீன் பொலீஸ் தலைமையத்தில் முறைப்பாடு. .
இன்று 03.12.2016 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுத்தீன் , கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் , சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் ஆகியோர் இன்று கொழும்பு பொலீஸ் தலைமையகத்துக்கு சென்று , பொதுபால சேனையின் செயலாளார் இஸ்லாத்துக்கும் அதன் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் எதிராக மிக அசிங்கமான முனறயிலும் உலக வாழ் முஸ்லீம்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் கருத்துக்களை பரப்பி வரும் ஞானசேர தேரரை சட்டத்திற்கு முன் நிறுத்தக் கோரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுத்தீன் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.....
இந்த நல்லாட்சி அரசாங்கம் இந்த விடயத்தில் நல்லாட்சி தன்மையை தெளிவுபடுத்துமாறும் மக்களுக்கு சட்டத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தனது முறைப்பாட்டில் வேண்டி கொண்டார்.
0 comments:
Post a Comment