Pages

.

.

Tuesday, June 6, 2017



அட்டாளைச்சேனை தேசியப்பட்டியலில் தவத்துக்கே அதிகம் அக்கறை

( ஹபீல் எம்.சுஹைர் )

அமைச்சர் ஹக்கீமின் பகிரங்கமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் இன்னும் கனவாகவே உள்ளது. அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதில் அமைச்சர் ஹக்கீமுக்கு எந்த விதமான சிறு பிரச்சினைகளும் இல்லாத போதும் ( தற்போது ஹசனலியின் தடையுமில்லை ) இன்னும் அதனை இழுத்தடிப்பு செய்தே வருகிறார்.

இந்த இழுத்தடிப்பின் பின்னால் அமைச்சர் ஹக்கீமுக்கும் சல்மானுக்கும் இடையில் உள்ள மறைமுக ஒப்பந்தம் இருப்பதான கதைகள் இருப்பதோடு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே மு.கா முதலமைச்சரை பெற்றுக்கொள்ளாது போனால் நஸீர் ஹாபிசுக்கு அதனை வழங்கி பாராளுமன்றம் அனுப்பி வைத்தல் போன்ற பல பல விடயங்கள் உள்ளன. இவற்றுக்கு பின்னாலேயே அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் வழங்கப்படும். பாவம் அட்டாளைச்சேனை மக்கள். பல காலமாக முஸ்லிம் காங்கிரசை ஆதரித்து வருகின்ற போதும் பலர் நுகர்ந்த எச்சியைத் தான் உண்ண வேண்டிய நிலைமை.

நான் சொல்லும் இந்த கதை முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த பலரும் அறிந்த கதையே. இருந்த போதிலும் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்பதில் தவம் குறியாகவே உள்ளார். அட்டாளைச்சேனை மக்கள் தேசியப்பட்டியல் கதையை மறைந்துள்ள நிலையில் தனது சார்பு ஊடகம் ஒன்றினூடாக இன்னும் சில நாட்களிலே அட்டாளைச்சேனையில் நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொள்ளும் போது அட்டாளைச்சேனை முக்கியஸ்தர்கள் சிலர் அமைச்சர் ஹக்கீமிடம் தேசியப்பட்டியல் பற்றி கேட்கவுள்ளதாக கதைகளை பரப்பி அட்டாளைச்சேனை மக்களிடையே தேசியப்பட்டியல் உணர்வை தூண்டி விடும் வேலையை செய்கிறார். அமைச்சர் ஹக்கீமிடம் நல்ல பிள்ளையாக நடிப்பதில் வல்லவர். இதுவெல்லாம் அமைச்சர் ஹக்கீம் அறியாமல் இருக்குமளவு மடையனுமல்ல.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கிடைத்தால் அது மாகாண அமைச்சர் நசீருக்கு கிடைக்கும். அவரது மாகாண அமைச்சு தனக்கு கிடைக்கும். அதனூடாக விரைவான சேவைகளை செய்து எதிர்வரும் கிழக்கு மாகாண சபையில் தெரிவாவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிப்பதே  தவத்தின் சிந்தனையாகும். தவம் என்ன தான் தவம் இருந்தாலும் அந்த தவத்துக்கு அமைச்சர் ஹக்கீம் ஒரு போதும்  ஆட மாட்டார். தவத்தின் இந்த செயற்பாடு ஒரு வகையில் நோக்கும் போது சரியானதும் கூட. இருந்தாலும் அதனை வெளிப்படையாக கூற முடியாது தவிக்கின்றார்.


0 comments:

Post a Comment