Pages

.

.

Sunday, June 11, 2017

அம்பாறையில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த அமைச்சர் றிஷாத்

(ஹபீல் எம்.சுஹைர்)

அம்பாறை மாவட்டத்துக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் றிஷாத் செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம் அலை கடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது. இதற்கு முன்பு அமைச்சர் றிஷாத் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட போது காணக்கிடைக்காத பல புதுமுக ஆதரவாளர்கள் இம் முறை கலந்து கொண்டமையே இதிலுள்ள விசேடமாகும்.

அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாதின் துணிவுமிக்க பேச்சுக்கள் பலரை கவர்ந்தமையே புதுமுக ஆதரவர்களின் பிரசன்னத்துக்கு காரணம் என அங்கு வருகை தந்திருந்த புது முக ஆதரவாளர்களிடம் பேசக் கிடைத்த போது அறிந்து கொள்ள முடிந்தது. இதன் பிறகு ஊமைத் தலைவர்களின் கட்சிகளை ஆதரிக்காமல் அஷ்ரப் பாணியில் மிக இளம் வயதில் துணிவுமிக்க அரசியல் பயணம் மேற்கொள்ளும் அமைச்சர் றிஷாத்துடன் அவர்கள் தொடர்ந்து பயணிக்க போவதாக உறுதி மொழி வழங்கினர்.

இவரது இரு நாள் விஜயங்களின் போது ஒன்று கூடிய மக்கள் எண்ணிக்கையானது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆதரவானது பல மடங்கால் அதிகரித்துள்ளதை துல்லியமாக்கியுள்ளது. இதன் பிறகு மு.காவின் ஆதரவாளர்கள் யாருமே நிம்மதியாக தூக்க மாட்டார்கள் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.


0 comments:

Post a Comment