Pages

.

.

Monday, June 5, 2017

அமைச்சர் ஹக்கீம் சுவிஸ் லொக்கறை திறந்து காட்டுமாறு சவால் விடுவாரா?

( ஹபீல் எம்.சுஹைர் )

அமைச்சர் ஹக்கீம் பற்றிய சில முக்கிய இரகசிய ஆவணங்கள் மு.காவின் முன்னாள் தவிசாளரிடமிருப்பதான கதைகள் பல காலம் தொட்டு சென்றிகொண்டிருக்கின்ற போதும்  தற்போது முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் அவைகள் தன்னிடமிருப்பதாக ஒத்துக்கொண்டுள்ளார். அவ் ஆவணங்களை தான் மாத்திரம் வைத்திருக்கும் போது தனது மரணத்தோடு அது முடிவுக்கு வந்துவிடும் என்பதால் இன்னும் சிலரது வங்கி லொக்கரில் பாதுக்காக்கப்படுவதாக கூறி இருந்தார்.

தனது வங்கி லோக்கருக்கு முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆவணங்களை அனுப்பியதாக ஒருவர் பகிரங்கமாகவே கூறியுள்ளார். இருந்த போதிலும் அமைச்சர் ஹக்கீம் என்னவோ எல்லாம் பேசுகிறார். இவைகள் பற்றி சிறிதும் வாய் திறந்ததாக தெரியவில்லை.மடியிலே கணம் இல்லை என்றால் பயமெதற்கு ?

அமைச்சர் றிஷாதுக்கு வன்னியிலே பல ஏக்கர் காணிகள் உள்ளதாக யாராவது கூறினால் அல்லது வேறு ஏதாவது விமர்சனங்களை முன் வைத்தால் உடனே அவர், அவர்களை நோக்கி முடிந்தால் நிரூபியுங்கள் என சவால் விடுவார்.  அமைச்சர் ஹக்கீமை நோக்கியும் அவரது சவால்கள உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏன் இந்த தைரியம் அமைச்சர் ஹக்கீமுக்கில்லை?

இவ்வாறு அவர் சவால் விட்டால் இதன் பிறகு அவர்கள் இது பற்றி கதைக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். சமூக வலைத்தளங்கள் அவர் பற்றிச் சென்று கொண்டிருக்கும் எல்லையற்ற விமர்சனங்கள் ஒரு நொடியில் முடிந்து விடும். இப்படி இருந்தும் அமைச்சர் ஹக்கீம் இது பற்றி கதைக்காமல் தவிர்ப்பதன் மூலம் அவருக்கெதிராக முன் வைக்கப்படும் விமர்சனங்களின்  உண்மை தன்மையை உறுதி செய்கிறார் என்றே கூற வேண்டும்.

0 comments:

Post a Comment