ஆடத் தெரியாதவன் அரங்கை கோணல் என்டானாம் என்ற கதை போன்றே மாகாண சபை உறுப்பினர் நஸீரின் பேச்சு அமைந்துள்ளது
வன்னியின் ஒளி நிகழ்ச்சியில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் நஸீர் அமைச்சர் றிஷாத் வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மு.காவிற்கு எதிராக சதி செய்வதாக கூறியுள்ளார்.மு.காவை வெளிநாடுகள் சதி செய்து அழிக்குமளவு எந்த தேவையுமில்லை என்பதை சிறு பிள்ளையும் அறியும்.கோடிகள் கொடுத்தால் அவர்களை விரும்பியவர்கள் விரும்பிய பாட்டுக்கு வலைத்துக்கொள்ளலாம் என்பது வேறு விடயம்.இலங்கையின் தேசிய அரசியலில் வெளிநாட்டு பணங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற செய்தி அதிகம் பேசப்படுகிறது.இந்த பேச்சுக்களை மாகாண சபை உறுப்பினர் நஸீர் இங்கும் அடித்து விட்டுள்ளார்.
இன்று மு.காவில் நடைபெறும் வெட்டுக்குத்துக்கும் அமைச்சர் ரிஷாதுக்கும் என்ன சம்பந்தமுள்ளது? பஷீரின் பிரச்சினையாக இருந்தாலும் சரி ஹசனலியின் பிரச்சினையாக இருந்தாலும் சரி இன்று மு.காவில் இடம்பெறும் பிரச்சினைக்கு பிரதான காரணம் தேசியப்பட்டியலாகும்.இதனை யாவரும் ஏற்றுக்கொள்வார்கள்.இப்படி இருக்க இதனை முஸ்லிம்களின் கணிசமான ஆதரவைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாத்துடன் தொடர்பு படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.அவர் இந்த பிரச்சனைகளை தனது சிந்தனைக்கும் எடுக்காது செயற்பட்டு வருகிறார்.இதனை அவரது செயற்பாடுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.ஆடத் தெரியாதவன் அரங்கை கோணல் என்டானாம் என்ற கதை போன்றே மாகாண சபை உறுப்பினர் நஸீரின் பேச்சை நோக்கலாம்.
இதில் ஒரு மறைமுக உண்மையும் உள்ளது.முன்பெல்லாம் இலங்கை முஸ்லிம்களுக்கு மாற்று கட்சி பற்றிய சிந்தனைகள் இல்லாததன் காரணமாக அடித்தாலும் பிடித்தாலும் மு.காவுடன் ஒட்டி உறவாடினார்கள்.தற்போது மயில் மரத்திற்கு நிகராக,இன்னும் சொல்லப் போனால் மரத்தையும் விட அதிக வளர்ச்சியில் உள்ளது.இது ஹக்கீமிற்கு பலத்த சவாலை ஏற்படுத்தியுள்ளது.முன்பு போன்று தான் நினைத்த பாங்கில் முடிவுகளை எடுக்க முடியாது.எனவே,அமைச்சர் றிஷாதினால் மு.கா அழிகிறது என மாகாண சபை உறுப்பினர் நஸீர் கூறியதில் உண்மையும் இல்லாமல் இல்லை.
இப்படிக்கு
அபு ரஷாத் (அக்கரைப்பற்று)
.

Friday, February 10, 2017
Home »
srilankan news
»
Related Posts:
ஹக்கீம் எனும் நீரோ மன்னன்! அளுத்கம பற்றி எரிகிறது. முஸ்லிம்கள் சிங்கள இனவாதிகளின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு அல்லல்படுகிறார்கள். முஸ்லிம்களது உயிர், உடமைகளனைத்தும் கேள்விக்குறியாக்கப்படுகிறது. தம் இனத்தை பாதுகாக்க கூடிய … Read More
நிரந்தர பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் தற்காலிகமானார் எல்.எம் இர்பான் பொத்துவில் பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக கடந்த ஒரு வருடமாக கடமையாற்றியிருந்தார்.இங்கு கடமையாற்றிக்கொண்டு அவர் இரண்டு நாள் அட்டாளைச்சேனை பிரதேச சபைய… Read More
பிசு பிசுக்காமல் பரபரப்பான ஹசனலியின் எதிர்ப்பு (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்புவதொன்றும் புதிதல்ல.கிளம்பியவைகள் பல பிசு பிசுத்துப் போன வரலாறுகள் தான் அதிகமாகும்.அண்மையில் கூட கிழ… Read More
ஏவல் நாய்களே மின்னலில் குரைக்கின்றன (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) கடந்த மின்னல் நிகழ்ச்சியில் அமைச்சர் றிஷாதிற்கு எதிரானவர்களை அழைத்து வந்த ரங்கா அவர்களோடு தானும் சேர்ந்து அமைச்சர் றிஷாதை கழுவி ஊத்தி இருந்தார்.இதில் கலந்து க… Read More
அரசியலுக்காக முஸ்லிம்களை பேரின வாதிகளிடம் அடகு வைக்கும் மு.காவின் போராளிகள்..! (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) நேற்று தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற புத்தக வெளியீடு தொடர்பில் மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு … Read More
0 comments:
Post a Comment