அ.இ.ம. காங்கிரசின் உறுப்பினரான அஸாம் ஹாபிஸ் அவர்களைப்பற்றிய பொய்யான வதந்தி ஒன்றை அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக சிலர் சமூக வலையத்தளங்களில் வெளியிட்டுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும்.
அஸாம் ஹாஃபிஸ் அவர்கள் காரைதீவு தமிழ் பெண் ஒருவரிடம் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பணம் வாங்கியதாகவும் தப்பாக பேசியதாகவும் உண்மைக்கு புறம்பாக வதந்திகள் வெளியாகியுள்ளன.
சமூகத்தில் அரசியல் போட்டி இருக்கலாம். அதற்காக ஒருவர் பற்றி இட்டுக்கட்ட கூடாது. அஸாம் அவர்கள் பல காலம் முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். அக்கட்சியின் போக்கு பிடிக்காமல் வெளியேறியவர். அது அவரது ஜனநாயக உரிமை. தற்போது அவர் அ.இ. மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியமானவராக இருப்பதற்காக அவரை இலக்கு வைத்து இவ்வாறு பொய் பரப்பப்பட்டுள்ளது.
அந்தப்பெண்ணின் தொலைபேசி இலக்கம் என போலியான இலக்கம் தரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் உண்மை என்றால் நவீன சமூக வலையத்தளம் இருக்கும் இக்காலத்தில் அப்பெண்ணிடமிருந்து நேரடி குற்றச்சாட்டை வீடியோ மூலம் பெற்றிருக்க முடியும். அவ்வாறு செய்யாமல் ஒரு முஸ்லிம் பற்றி பொய்யாக சொல்வது கண்டிப்புக்குரியதாகும்.
அரசியல்ரீதியாக யாரும் யாரையும் விமர்சிக்கலாம். ஆனால் அதில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும். இவ்வாறான அபாண்டங்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
0 comments:
Post a Comment