Pages

.

.

Monday, April 3, 2017

சேறு பூசலினால் துவண்டு போகும் கோழை நானல்ல

நான்,அமைச்சர் றிஷாதிடம் வேலை பெற்றுத் தருவதாக கூறி காரைதீவை சேர்ந்த பூர்ணிமா என அழைக்கப்படும் செந்தளிர் என்ற இளம்  பெண்ணிடம் பணம் பெற்றுக்கொண்டு அவளை படுக்கைக்கும் அழைத்ததாக சமூக வலைத் தளங்களில் ஒரு செய்தி பரப்பப்பட்டுள்ளது.இச் செய்தியை ஒரு உண்மைத் தன்மையான செய்தி போன்று வடிவமைத்துள்ளார்கள்.அவர்களது செய்தியில் குறித்த பெண்ணின் தொலைபேசி (0777072354) இலக்கமும்,விலாசமும் (காரைதீவு கன்னையம்மன் தெரு 175 இலக்கம்) வழங்கப்பட்டிருந்தது.எம்மவர்கள் இவை இரண்டும் வழங்கப்படும் போது அதனை உறுதி செய்ய முயற்சிக்காது,ஆதாரங்களுடனான செய்தி போன்று கருதி நம்பிவிடுவார்கள்.அதில் வழங்கப்பட்ட விலாசத்தில் அப்படி ஒரு பெண் இல்லை என்பதோடு குறித்த தொலைபேசியானது அநுராதபுரத்தை சேர்ந்த ஹேரத் என்ற விவசாயினுடையது என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.தேவையானவர்கள் தேவையான வழிகளில் உறுதி செய்து கொள்ளலாம்.

நான் இவ்வாறு செய்திருந்தால் பொலிஸ் நிலையம்  சென்று முறையிடலாம்.இன்றைய நவீன உலகத்தில் எத்தனையோ வழிகள் மூலம் இதனை ஆதாரங்களோடு வெளிக்கொண்டு வரலாம்.இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுப்போரை சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இதனை யாராவது உரிய ஆதரங்களுடன் என்னிடம் காட்டினால் ஒரு கோடிப் பணத்தை தர தயாராகவுள்ளேன்.இது தொடர்பில் நான் நேற்று பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதோடு குறித்த தொலை பேசி இலக்கமுடைய நபரும் பொலிசில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் அறிய முடிகிறது. இது தொடர்பில் போலிஸ் விசாரணைகளை முன்னெடுத்த போது அப்படி ஒரு விலாசமே இல்லை என கூறியிருந்தார்க என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

நான் ஒரு கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவன்.இச் செய்தியினால் நான் உட்பட எனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.நான் அ.இ.ம.காவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவன்.இதற்கு முன்பு அமைச்சர் ஹக்கீமுடன் சில காலம் பயணித்திருந்தேன்.தற்போதும் அரசியல் செய்திகள் குவியும் பிரதான இடங்களில் நான் உள்ளேன்.இதன் காரணமாக எனக்கு பல இரகசியமான உண்மைகள் தெரியும்.அவற்றை நான் எனது முக நூலில் பகிரங்கமாக போடுவேன்.இதனை தடுத்து நிறுத்துவதே இவர்களின் நோக்கமாகும்.இவ்வாறான சேறு பூசல்களினால் துவண்டு போகும் கோழை நானல்ல.இதன் பிறகு எனது செயற்பாடுகளில் வீரியம் அதிகரிக்குமே தவிர குறைந்து போகாது.

இச் செய்தியானது  விடியலைத் தேடி என்ற இணையத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.இவ் இணையத்தளமானது சபான் சிராஜ் என்ற நபரால் இயக்கப்படுகிறது.அண்மையில் சவூதி அரேபியா சென்ற அமைச்சர் ஹக்கீம் இவருக்கு முக்கியத்துவம் அளித்து சந்தித்திருந்தார்.இதன் பின்னரே இவ் இணையத்தின் வசை பாடல்கள் அதிகரித்துள்ளன.அப்படியானால் காதுக்குள் மந்திரம் ஓதப்பட்டிருக்க வேண்டும்.இவ் இணைய தளத்தில்அமைச்சர் றிஷாதை போலியாக  வசைபாடி இகழ்தலும் அமைச்சர் ஹக்கீமை போலியாக எதையாவது கூறி புகழ்தலும் இடம்பெறும்.சில காலங்கள் முன்பு அமைச்சர் ஹக்கீம் கட்டார் சென்ற போது சவூதியை தலைமையமாக கொண்டு இயங்கும் முஸ்லிம்களும் நாடுகளின் கூட்டமைப்பை சந்திக்க செல்கிறார் என்ற போலி போலி பிரச்சாரம் இவ் இணையத்தின் மூலமே முன்னெடுக்கப்பட்டிருந்தது.இச் செய்தி பலரது கண்டனைத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவரை அமைச்சர் ஹக்கீம் சந்திக்கின்றார் என்றால் இது போன்று இன்னும் செய்யுங்கள் என ஊக்கமளிக்கின்றார் அல்லவா?  இவ் இணையதளத்தை அமைச்சர் ஹக்கீமின் சகோதரர்களில் ஒருவரும் பின்னின்று செய்வதாக சிலர் கூறுகின்றனர்.

இப்படி மு.காவினர் போலி இணையங்களை வைத்துக் கொண்டு பகிரங்கமாக போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்ற போதும் பழி என்னவோ அமைச்சர் றிஷாதின் மீதுள்ளது.ஒரு வேசையும் பத்தினியும் சண்டைக்கு செல்லும் போது வேசை முந்திக் கொண்டு பத்தினியை பார்த்து “நீ வேசைடி என்பாளாம்”.இவளுடன் சண்டைக்கு போனால் நமது மானம் போய் விடும் என்பதால் பத்தினி சண்டை போடாமல் ஒதுங்கி கொள்வாள்.அதைத் தான் இன்று மு.காவினர் அ.இ.ம.காவை நோக்கி செய்து கொண்டிருக்கின்றார்கள்.செய்வதெல்லாம் அவர்கள்,பழியை அமைச்சர் றிஷாதின் மீது போட்டு தப்பித்துக்கொள்வது.இவ் இணையத்தின் பின்னால் முக நூல்  குழுவொன்று இயங்கிக்கொண்டிருக்கின்றது.அவர்களுக்கு அமைச்சர் றிஷாதை இகழ்வதே தொழில்.அவர்களுக்கு மு.காவின் தலைமையகத்தில் ஒரு குறித்த இடம் வழங்கப்பட்டுள்ளது.இதில் இருந்தவர்கள் மு.காவின் மீடியாவிலும் உள் வாங்கப்பட்டு மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது.இவ்வாறானவர்களுக்கு இவ்வாறான சேறு பூசல்களை மேற்கொள்ள தரமிக்க தொலை பேசிகளும் மடி கணணிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.அண்மையில் அமைச்சர் ஹக்கீம் இவர்களை நுவரெலியாவிற்கு சுற்றுலா அழைத்து சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

நான் இவ்வாறான சில்லறை சத்தங்களுக்கு அஞ்சப் போவதில்லை.எனது செயல் முன்பை விட வீரியமாக இருக்கும்.கருத்தை கருத்தால் வெல்ல முயற்சி செய்யுங்கள்.இவ்வாறான சேறு பூசல்களை உங்களை நோக்கி திரும்பி இன்னும் இன்னும் நாறப் போகிறீர்கள்.இன்று மு.காவினர் செய்த துரோகங்கள் தான் அவர்களை அழிவின் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது.குர்ஆன் ஹதீதை யாப்பாக கொண்ட மு.கா,தங்களது போராளிகளுக்கு அழகிய வழி முறைகளை கற்றுக்கொடுக்காது இவற்றிற்கு ஊக்கமளிப்பது மிகவும் கவலையான விடயமாகும்.

அல்-ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்
சாய்ந்தமருது.


0 comments:

Post a Comment