Pages

.

.

Monday, November 28, 2016

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் .

நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் ...!
ஏன் கட்சி மாறினேன்...!
By : Ilham Marikar
*****************************************************************************

நான் பல வருடங்களாக கல்வித்துறையில் பல சேவைகளை புத்தள மாவட்டத்திட்கு செய்து வந்துள்ளேன்.

எமது புத்தள மாவட்டத்திலே உண்மையிலேயே ஒழுங்கான ஒரு அரசியல் வாதி இல்லை
என்ற பலரின் குமுறலை கேட்டுருக்கிறேன்.

மேலும் புத்தள மாவட்டத்திலே ஒரு சில நேர்மையான அரசியல் வாதிகளே இருக்கின்றனர். மற்றவர்களை பற்றி நான் சொல்ல தேவை இல்லை.

எமது மக்கள் படுகின்ற பல கஷ்டங்களை அவதானித்தேன்.

அபிவிருத்திகளை செய்ய வேண்டுமானால்
அரசியல் அதிகாரம் தேவை என்பதையும்  உணர்தேன்.

சிறுவயதிலிருந்து SLMC கட்சியின் பொருந்தலைவர் M H M அஷ்ரப் அவர்களின் பல உரைகளை கேட்டு அந்த கட்சியின் விசுவாசியானேன்.
இதுதான் என்னை SLMC கட்சியில் இணைவதற்கு ஊன்றுகோளாக இருந்தது.

ஆகவே 2013 ம் ஆண்டு புத்தள மாவட்ட மாகாண சபைத்தேர்தலிலே SLMC கட்சியில் போட்டியிட்டு, 2 மாதங்களே பிரச்சாரம் செய்து 2450 வாக்குகள் பெற்று புத்தள நகரத்திலே SLMC கட்சியில் அதி கூடிய வாக்குகளை நான் பெற்றேன் .

15 வருடங்கள் அரசியல் அனுபவமான SLMC கட்சியின்
உறுப்பினர் ஒருவரே 3950 வாக்குகளால் மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

என்னை தோற்கடிக்கவே St.Andres கல்லூரியிலே பல எண்ணப்படாத வாக்குகள் ஒளித்துவைக்கப்பட்டது. அந்த வாக்குகள் சாலைகள் எனக்கு அதிகம் கிடைத்த சாலைகளேயாகும்.
(இதற்கான பல ஆதாரங்கள் இன்னும் என்னிடம் உள்ளன.)

அந்த காலப்பகுதியில் ACMC கட்சி புத்தள மாவட்டத்தில் போட்டியிடவில்லை.

நான் கொழும்பிலும் பல கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் 2014 ம் ஆண்டு கொழும்பிலும் என்னை தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை பெற்றுத்தருமாறு கட்சி வேண்டிக்கொண்டது.

45 நாற்காள் பிரச்சாரம் செய்து 48 பேர்கள் போட்டியிட்டதில் - 13 வது இடத்தை பிடித்து
கணிசமான வாக்குகளை கட்சிக்கு பெற்றுக்கொடுத்து
ஒரு மாகாண சபை உறுப்பினரையும் பெற்றுக்கொண்டோம். (ஆதாரங்கள் என்னிடம் உள்ளன)

இவ்வாறு SLMC கட்சிக்கு பல திட்டங்கள் , ஒரு பாராளுமன்ற தேர்தல், ஒரு ஜனாதிபதி தேர்தல் என, அவர்களுக்கு ஆதரவாகவும்  இருந்தேன்.

சென்ற வருடங்களில் புத்தள மாவட்டத்திற்கு சில  அபிவிருத்திகள் வருவதற்கும் எதோ ஒருவகையில் நானும் காரணமாகவே இருந்துளேன்.
இதனை SLMC கட்சிக்காரர்களால் மறுக்க முடியாது.

SLMC யிலிருந்து அதிரடியாக
வெளியேறுவதற்கான 10 காரணங்கள் :
*********************************************************
1. November 11, 2016 புத்தளத்தில் நடந்த நிகழ்வுக்கு என்னை அழைக்காமல் நிராகரித்தமை.
(No any Invitations, Verbally or by written, no any SMS even)

2. November 11, 2016 புத்தளத்தில் நடந்த நிகழ்வில் , SLMC தலைவரின் உரையில் வேறொரு கட்சித்தலைவறையும் ஏனைய பல இஸ்லாமிய சகோதரர்களை கேவலமாக தூற்றியமை.

3. புத்தள மாவட்டத்திட்கு பல திட்டங்களையும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும்
முறையாக கையளித்தும் - எதையுமே கணக்கெடுக்காதமை.

4. போக்குவரத்து அமைச்சின் புத்தள மாவட்ட இணைப்பாளர் என்ற போலியான ஒரு
பதவியை தந்து ஏமாற்றியமை.

5. SLMC புத்தள கிளையில் கல்வி பகுதியை தருவதாக பல ஆண்டுகள் ஏமாற்றியமை..

6. SLMC புத்தள கிளையில் பல கருத்து முரண்பாடுகள் உள்ளவர்கள் , வெவ்வேறாக
    செயல்படுகின்றமை , குழிபறிக்கின்றமை.

7. SLMC புத்தள கிளை மிக முக்கிய கூட்டங்களுக்கு என்னை அழைக்கத்தமை.

8. SLMC தலைவர் வருடத்திற்க்கு ஒருமுறை வந்து எமது மக்களையும்  ஏமாற்றியமை.

9. உடைந்து வரும் கட்சியை புனர்நிர்மாணம் செய்யத்தமை.

10. SLMC தலைவரை அவசரத்திற்கு கூட தொடர்பு கொள்ள முடியாமை.

ஆகவே இந்த மேலுள்ள காரணங்களின்
விரக்தியில் நான் இருந்த போது ...
**********************************************************
புத்தளத்தில் என் வாழ்நாளில் காணாத பல அபிவிருத்திகளையும் , ஒரு இலவச பாராளுமன்ற பிரதிநிதியையும் வழங்கிய என் பாடசாலை நண்பராகிய அமைச்சர் Rishard Badiyutheen உடன் இணைந்து ACMC கட்சியினை பலப்படுத்தி கஷ்டத்தில் வாழும் எமது புத்தள மாவட்ட மக்களுக்கு இன்னும் பல சேவைகளை
செய்யலாம் என்று என் பிறந்த நாள் தினம் (25 November) முடிவெடுத்து, எந்தவித உடன்பாடுகளோ அல்லது பண பரிமாற்றங்களோ இன்றி இணைந்துகொண்டேன் - வல்லாஹி.

அதுமட்டுமல்ல SLMC யின் இன்னும் 10 முக்கிய கட்சி அங்கத்தவர்கள்  ACMC யுடன் வெகு விரைவில் இணைவார்கள் என்ற விடயத்தையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இப்படிக்கு
இல்ஹாம் மரைக்கார்
0777 34 14 98

0 comments:

Post a Comment