Pages

.

.

Monday, May 8, 2017

அமைச்சர் ஹக்கீமின் யாப்பு மாற்ற அழைப்பில் தேர்தல் முறை மாற்றம்

அமைச்சர் ஹக்கீம் இம் முறை இடம்பெற்ற ஐ.தே.கவின் மே தின கூட்டத்தின் போது புதிதாக வரவுள்ள அரசியலமைப்புக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.இதன் போது புதிதாக வரவுள்ள அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றம் வரவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

தற்போதுள்ளது போன்ற தேர்தல் முறையே முஸ்லிம்களின் பிரநிதித்துவ காப்புக்கு சிறந்தது என்பது இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம்.அப்படி இருக்க இவர் அதனை கூறியே அழைப்பு விடுத்தமை எதற்காக? அனைவரும் கெடுதி உள்ளதெனும் போது அமைச்சர் ஹக்கீம் மாத்திரம் நலவு உள்ளது என்கின்றார் என்றால் அதில் அமைச்சர் ஹக்கீமுக்கு மாத்திரம் நலவு உள்ளது என்பதுவே உண்மை.அவர் இன்று ஆதரவு வழங்க கோரும் தேர்தல் முறை மாற்றம் முஸ்லிம்களுக்கு பாதிப்பானதென பல இடங்களில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தேர்தல் முறைமை ஏற்படுத்தப்படும் போது கண்டி மாவட்டத்தில் தனக்கு வாசியான வகையில் ஒரு தொகுதியை அமைத்து அதில் தன்னையே ஐ.தே.க சார்பாக போட்டியிடச் செய்ய வேண்டும் என ஒப்பந்தம் ஒன்றை செய்தால் இன்று அவரது அரசியலுக்குள்ள பாரிய சவால்களை மிக இலகுவாக எதிர்கொண்டு விடுவார்.

அமைச்சர் ஹக்கீமுக்கு கண்டி மாவட்டத்தில் சொல்லுமளவு வாக்கு வங்கி இல்லை.இம் முறை ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குக்களில் நனைந்து கொண்டார் என்பதே உண்மை.இவ்வாறு செய்வதனூடாக தொடர்ச்சியாக தனது அரசியல் தெரிவை அவரால் உறுதி செய்ய முடியும்.

தொகுதி முறை வருகின்ற போது இன்று அவருக்கு பெருந் தலையிடியை வழங்கி வரும் அமைச்சர் றிஷாத் பாராளுமன்றம் தெரிவாவது கடினமாகிவிடும்.வன்னி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஒரு தொகுதியை ஏற்படுத்தினால் வன்னி மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து கொள்ளலாம்.இதனூடாக அமைச்சர் றிஷாத் பாராளுமன்றம் செல்ல முடியும்.வன்னி மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் தெரிவாகும் வழியை தடுத்து விட்டால்...?
*அமைச்சர் ஹக்கீம் தனது சுயநலங்களை அடிப்படையாக கொண்டு முஸ்லிம் சமூகத்தையே பலி கொடுக்க தயாராகவுள்ளார்.*இது தொடர்பில் முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


0 comments:

Post a Comment