ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் கூற்றானது அவரை ஜனாதிபதியாக்க உதவிய முஸ்லீம் சமூகத்திற்கு செய்யும் துரோகமாக மாறியுள்ளது.......
இன்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போது வில்பத்து சரணாலய பிரதேசத்தை மேலும் விரிவாக்கி,வனவிலங்குகள் வலயமாக அறிவித்து வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இவ் அறிவிப்பானது மிகவும் ஆபத்தானது என்பதை முஸ்லிம் சமூகம் அறியாமல் உள்ளார்கள்.
மரிச்சிக்கட்டி,கரடிக்குழி,காயாக்குழி,பாலக்குழி,முசலி,கொண்டச்சி மற்றும் வேப்பங் குளம் ஆகிய பிரதேசங்கள் வில்பத்து வனத்திற்கு அப்பால் இருந்த போதும் 2012ம் ஆண்டளவில் இரவோடு இரவாக வில்பத்து வன பரிபாலன சபையின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.இன்றும் குறித்த பிரதேசங்களில் அந்த மக்கள் வாழ்ந்ததற்கான வரலாற்று தடயங்கள் பலவுள்ளன. இந்த தடயங்கள் மூலம் மக்கள் வாழ்ந்தது 100 க்கு 60 வீதம் உறுதியாகியது.
இதற்கெல்லாம் இவ்வாட்சியில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே முஸ்லிம்கள் ஜனாதிபதி மைத்திரிக்கு வாக்களித்தனர்.தற்போது இப் பிரச்சினை முன்னர் இருந்ததை விடவும் சிக்கலான நிலைமைக்கு சென்றுகொண்டிருக்கின்றது.கடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை முஸ்லிம்கள் இஞ்சியை கொடுத்து மிளகாய் வாங்கியதை உணர்ந்து கொள்ள பல நாட்கள் எடுக்கவில்லை.
இந் நிலையில் ஜனாதிபதி மைத்திரி இவ் அறிவிப்பை விடுத்திருப்பதானது இனவாதிகளின் பிடிக்குள் அவர் அகப்பட்டிருப்பதை தெளிவாக அறிந்து கொள்ளச் செய்கிறது.அவர் இனவாதிகளுடன் உரையாடிய சில நாட்களில் இந்த அறிவிப்பை விடுத்திருப்பதானது இனவாதிகளின் கூற்றை ஏற்று செவிசாய்த்ததானது அவர்களுக்கு வாழாட்டுவதற்கு தயார் என்பதை விளக்குகிறது. இந் நிலை தொடர்வது மிகவும் ஆபத்தானது. இவ்விடயத்தை சிங்கள பத்திரிகைகள் தூக்கிப் பிடித்த இன்றைய தினமே ஜனாதிபதியும் தூக்கிப் பிடித்துள்ளமை பலமான நிகழ்ச்சி நிரல் ஒன்றில் கீழ் இவைகள் பேசப்படுவதை அறிந்து கொள்ளச் செய்கிறது. இதற்கு முன்பு வில்பத்துவில் காடு அழிக்கப்பட்டுள்ளமை உண்மை தான் என ஜனாதிபதி கூறி இனவாதிகளின் வாயில் சக்கரை ஊட்டி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளதை காட்டுகிறது.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு கீடைக்க வேண்டும் அத்தோடு முஸ்லிம்கள் வாழ்ந்த இடங்களுக்கு அவர்கள் மீள் குடியேற வேண்டும் என்பதற்காகவும் முஸ்லிம் சமூகம் இனவாதிகளால் துன்புறுத்தப்பட்டும் மதஸ்தளங்கள் தாக்கப்பட்டும் மத சம்பிரதாயங்களை கேழிக்கைக்கு உட்படுத்தியதையும் தாங்காத முஸ்லிம் சமூகம் நல்லாட்சி எனும் அரசாங்கத்தை உறுவாக்கி முன்னாள் ஜனாதிபதியை தோற்கடித்து நல்லாட்சியின் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்களை உறுவாக்கியதன் நோக்கத்தை அறிந்தும் ஜனாதிபதி தற்போது இனவாதிகளின் கருத்துக்கு சோரம்போனமையானது மிகவேதனையான விடயமாகும்,,,, எனவே உடனடியாக இப்பிரச்சினைகளுக்கும் முஸ்லீம் சமூகத்துக்கும் உரிய தீர்வை வழங்குமாறும் அவ்வாறு இல்லாமல் இனவாதிகளின் ஆலோசனைப்படி நடந்தால் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் வரும் என்பது இன்ஷா அல்லாஹ் உருதியாகிவிடும்.... எனவே அனைத்து முஸ்லிம்களும் இவ்விடயத்தில் விளகி நிட்காமல் ஒருமித்து நமது சமூகத்துக்காய் போராடுவோம் வாரீர்.....
அஹமட் சாஜித்
மாவடிப்பள்ளி
.

Friday, December 30, 2016
Home »
srilankan news
»
Related Posts:
“சல்மானே தேசியப்பட்டியலுக்கு தகுதியானவர்” போராளிகளை வைத்து கூறும் ஹக்கீம் (இப்றாஹீம் மன்சூர்) சல்மானிடமுள்ள தேசியப்பட்டியல் அதற்கு சொந்தமானவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கருத்து எழும் போதெல்லாம் சல்மானும் தேசிய… Read More
நஷீர் ஹாபிஸ் பஷில் ராஜபக்ஸ பற்றி கதைப்பது ஏளனமானது (இப்றாஹீம் மன்சூர்) இன்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வில் நஷீர் ஹாபிஸ் பஷீர் செகுதாவூதை மறைமுகமாக சுட்டிக் காட்டி அவர் பஷில் ராஜபக்ஸவிற்கு ஆதரவாக செயட்பட்டவராக மக்களிடையே க… Read More
மௌலவி ஆசிரியர் நியமனம் குறித்து அமைச்சர்களான றிஷாட் மற்றும் கல்வி அமைச்சர் சந்திப்பு..!! சுஜப் எம்.காசிம். தொடர்ந்தும் இழுபறியில் இருந்து வரும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்புச் செய்யாமல் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு… Read More
இன்றைய நஸீர் ஹாபிசின் உரை எவ்வாறு அமைந்திருந்தது? (அபு ரஷாத்) இன்று நிந்தவூரில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிசின் உரை வழமைக்கு மாற்றமாக மு.கா தலைமைக்கு அதிகம் மதிப்பளித்ததை அவதானிக்க … Read More
பஷீரின் அதிர்வு நேற்று 2017-01-29ம் திகதி வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் மு.காவின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் கலந்து கொண்டிருந்தார்.இந் நிகழ்வில் அவர் மு.காவின் இரகசியங்கள் பலவற்றை கூறிச் சென்… Read More
0 comments:
Post a Comment