அமைச்சர் ஹக்கீம் சுவிஸ் லொக்கறை திறந்து காட்டுமாறு சவால் விடுவாரா?
( ஹபீல் எம்.சுஹைர் )
அமைச்சர் ஹக்கீம் பற்றிய சில முக்கிய இரகசிய ஆவணங்கள் மு.காவின் முன்னாள் தவிசாளரிடமிருப்பதான கதைகள் பல காலம் தொட்டு சென்றிகொண்டிருக்கின்ற போதும் தற்போது முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் அவைகள் தன்னிடமிருப்பதாக ஒத்துக்கொண்டுள்ளார். அவ் ஆவணங்களை தான் மாத்திரம் வைத்திருக்கும் போது தனது மரணத்தோடு அது முடிவுக்கு வந்துவிடும் என்பதால் இன்னும் சிலரது வங்கி லொக்கரில் பாதுக்காக்கப்படுவதாக கூறி இருந்தார்.
தனது வங்கி லோக்கருக்கு முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆவணங்களை அனுப்பியதாக ஒருவர் பகிரங்கமாகவே கூறியுள்ளார். இருந்த போதிலும் அமைச்சர் ஹக்கீம் என்னவோ எல்லாம் பேசுகிறார். இவைகள் பற்றி சிறிதும் வாய் திறந்ததாக தெரியவில்லை.மடியிலே கணம் இல்லை என்றால் பயமெதற்கு ?
அமைச்சர் றிஷாதுக்கு வன்னியிலே பல ஏக்கர் காணிகள் உள்ளதாக யாராவது கூறினால் அல்லது வேறு ஏதாவது விமர்சனங்களை முன் வைத்தால் உடனே அவர், அவர்களை நோக்கி முடிந்தால் நிரூபியுங்கள் என சவால் விடுவார். அமைச்சர் ஹக்கீமை நோக்கியும் அவரது சவால்கள உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏன் இந்த தைரியம் அமைச்சர் ஹக்கீமுக்கில்லை?
இவ்வாறு அவர் சவால் விட்டால் இதன் பிறகு அவர்கள் இது பற்றி கதைக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். சமூக வலைத்தளங்கள் அவர் பற்றிச் சென்று கொண்டிருக்கும் எல்லையற்ற விமர்சனங்கள் ஒரு நொடியில் முடிந்து விடும். இப்படி இருந்தும் அமைச்சர் ஹக்கீம் இது பற்றி கதைக்காமல் தவிர்ப்பதன் மூலம் அவருக்கெதிராக முன் வைக்கப்படும் விமர்சனங்களின் உண்மை தன்மையை உறுதி செய்கிறார் என்றே கூற வேண்டும்.
.

Monday, June 5, 2017
Home »
srilankan news
»
Related Posts:
வடக்கு மக்களுக்காக இனவாதிகளுடன் தனித்து போராடும் றிஷாத் (இப்றாஹிம் மன்சூர்) அமைச்சர் றிஷாத் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள் அனைத்திற்கும் எதிராக இனவாதிகளுடன் எவ்வித அச்சமுமின்றி போராடி வருகிறார்.அமைச்சர் … Read More
இவ்வாட்சிக்கு சோரம் போன மு.கா பிரதிநிதிகள் (அபு றஷாத்) இவ்வாட்சியை கொண்டு வருவதில் முஸ்லிம் மக்களின் பங்களிப்பு அபரிதமானதென்பதை யாராலும் மறுத்துரைக்க முடியாது.இலங்கை முஸ்லிம்கள் பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புக்களிடமிருந்த… Read More
உண்மைக்கு ஒருபோதும் அழிவில்லை! ♦°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°♦ வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வில்பத்து தேசிய சரணாலயம் மற்றும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான முன்னைய மற்றும் தற்போதைய தகவல்களைச் சேகரித்து … Read More
Woman’s body found in Bolgoda River The body of a 35-year-old woman was found in the Bolgoda River near the Panadura Railway Station today, Police said. The cause of the victim’s death and her identity had not been ascerta… Read More
Colombo High Court grants bail to Fmr. UNP General Secretary The Colombo High Court granted bail to former General Secretary of the United National Party Tissa Attanayake, who was in remand custody. Tissa Attanayake was… Read More
0 comments:
Post a Comment