சவூதி நிறுவனம் இலவசமாக வழங்கிய நீர் இணைப்புக்கு இறக்காமம் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு பணம் பெற்றதா?
இறக்காம பிரதேச செயலகத்தின் கீழுள்ள முகைதீன் கிராமம் மற்றும் ஜபல் ஆகிய பிரதேச மக்களுக்கான முழுமையான இலவச குடி நீர் இணைப்பை சவூதி அரேபியாவின் நிதாவுல் கைர் நிறுவனம் வழங்கியிருந்தது. இதற்கான நிதியானது அம்பாறை மாவட்ட உலமா சபையின் தலைவர் எஸ்.எச் ஆதம்பாவா மௌலவியினூடாக குறித்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந் நிதி வழங்கலுக்கும் மு.காவுக்குமிடையில் எந்த தொடர்புமில்லையுமென எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களினூடாக அறிந்து கொள்ள முடிந்தது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்பு செயலாளர் ரகுமத் மன்சூர் கலந்து கொண்டிருந்தார். இது அரசியல் மயப்படுத்தப்பட்டமை இதிலுள்ள முதற் தவறாகும்.
குறித்த நிகழ்வுகளினூடாக 80 அளவிலானோர் இலவச குடிநீர் இணைப்பை பெற்றிருந்தனர். *இங்கு இலவச குடிநீர் வழங்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரிடையே இருந்தும் தலா 1500 ரூபாய் பணமானது அறவிடப்பட்டுள்ளது.* குறித்த பணத்தை வழங்காவிட்டால் இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்படாது எனவும் அம் மக்களிடம் பகிரங்கமாகவே கூறப்பட்டுள்ளது. அந்த மக்கள் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதால் குறித்த பணத்தை மிகவும் சிரமப்பட்டே வழங்கியுள்ளனர். குறித்த மக்கள் அன்றாடம் உணவு உண்பதற்கே மிகவும் சிரமப்பட்டு வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
*இது தான் இலவச குடிநீர் இணைப்பின் இலட்சணையா?* அன்று குறித்த பணத்தை முழுமையாக பயன்படுத்துமளவு செலவுகள் கூட இடம்பெறவில்லையென குறித்த மக்கள் கூறுவதை அவதானிக்க முடிகிறது. இக் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளராக அறிவிப்பு உட்பட அனைத்து விடயங்களுக்கும் மு,காவின் இறக்காம மத்திய குழுவின் நாமமே போடப்பட்டுள்ளது. யாரோ நீர் வழங்குகிறார்கள். மக்களின் பணம் வசூலிக்கப்பட்டு நிகழ்வு இடம்பெறுகிறது. பெயர் பெறுவது மு.காவினரா? இப் பெயர் பெரளுக்காவது இந்த சிறு பணத்தை செலவிட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யுமளவாவது மு.காவிடம் பணம் இல்லையா?
வசூலிக்கப்பட்ட பணம் மீள வழங்கப்படுமா?
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
.

Thursday, June 8, 2017
Home »
srilankan news
»
Related Posts:
ஏவல் நாய்களே மின்னலில் குரைக்கின்றன (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) கடந்த மின்னல் நிகழ்ச்சியில் அமைச்சர் றிஷாதிற்கு எதிரானவர்களை அழைத்து வந்த ரங்கா அவர்களோடு தானும் சேர்ந்து அமைச்சர் றிஷாதை கழுவி ஊத்தி இருந்தார்.இதில் கலந்து க… Read More
நிரந்தர பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் தற்காலிகமானார் எல்.எம் இர்பான் பொத்துவில் பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக கடந்த ஒரு வருடமாக கடமையாற்றியிருந்தார்.இங்கு கடமையாற்றிக்கொண்டு அவர் இரண்டு நாள் அட்டாளைச்சேனை பிரதேச சபைய… Read More
பிசு பிசுக்காமல் பரபரப்பான ஹசனலியின் எதிர்ப்பு (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்புவதொன்றும் புதிதல்ல.கிளம்பியவைகள் பல பிசு பிசுத்துப் போன வரலாறுகள் தான் அதிகமாகும்.அண்மையில் கூட கிழ… Read More
ஹக்கீம் எனும் நீரோ மன்னன்! அளுத்கம பற்றி எரிகிறது. முஸ்லிம்கள் சிங்கள இனவாதிகளின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு அல்லல்படுகிறார்கள். முஸ்லிம்களது உயிர், உடமைகளனைத்தும் கேள்விக்குறியாக்கப்படுகிறது. தம் இனத்தை பாதுகாக்க கூடிய … Read More
அரசியலுக்காக முஸ்லிம்களை பேரின வாதிகளிடம் அடகு வைக்கும் மு.காவின் போராளிகள்..! (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) நேற்று தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற புத்தக வெளியீடு தொடர்பில் மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு … Read More
0 comments:
Post a Comment