Pages

.

.

Thursday, June 15, 2017

பொய்யர் காங்கிரஸினால் நாளை நக்குன்னிகளுக்கா இப்தார் நிகழ்வு ...? 

அகிலம் எல்லாம் படைத்து பரிபாலிக்கின்ற வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனுக்கு பயந்தவனாய்  எனது உணர்வுகளை இறைவனுக்கு சாட்டி  எனது பேனா முனையை நான்வைத்த நோன்பாடு சுளற்றுகின்றேன்.

பொய்யும் ஏமாற்றுதல் எத்தனை காலம் நிலைக்கும் .....?

காலாகாலமாக பொய்யர் காங்கிரஸினால் ஏமாறுகின்ற  கிழக்கில் உள்ள பொய்யர் காங்கிரஸை ஆதரிக்கின்ற மக்கள் அனைவரும் நாளைய இப்தாரை புறக்கணிப்பது மாத்திரமல்லாமல் கறுப்புக்கொடி ஏந்தி இப்தாருக்கு வருகின்ற பொய்யனை விரட்டி அடிக்கவும் வேண்டும்.

முனாபிக்கிக்கு அடயாளம் காட்டுங்கள் என்றால் நான் கூறும் அடயாளம் பொய்யர் காங்கிரஸின் தலைவனைத்தான் கூறுவேன். அந்த அளவுக்கு கிழக்கானை மடயனாக வைத்துக்கொண்டு கிழக்கானுக்கு தேர்தல் காலங்களில் கள்ள வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுகின்ற பொய்யர் காங்கிரஸின் தலைவனை நம்பி நம்பி மக்கள் ஏமாறுவதைவிட தங்கத்தலைவன் பெருந்தலைவர் அஸ்ரப் அவர்களினுடைய அடியொட்டி நடக்கின்ற தங்கமகன் தேசியத் தலைவர் றிஸாட் பதியுதீனை ஆதரிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல்

இறக்காம மாணிக்கமடு சிலை

நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம்

கல்முனை நகர அபிவிருத்தி

சாய்ந்தமருது பிரதேச சபை

மாவடிப்பள்ளி ஜும்மா பள்ளிவாயல்

என்று ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் வழங்கிய வாக்குறுதிகளை இன்னும் ஏறெடுத்தும் பார்க்காமல் ஒவ்வொரு ஊர்களிலும் பித்னாவையும் பொய்யையும் கூறி கூறி மக்களை மடயானாக நினைத்துக்கொண்டு ஏமாற்றி வாக்குப்பிச்சை எடுத்து தானும் தனது குடும்பமும் சுகபோகம் அனுபவிக்கின்ற பொய்யர் காங்கிரஸின் தலைவனை இன்னும் நம்புவதற்கு கிழக்கான் மடயனா என்ற கேள்வி அனைத்து இடங்களிலும் பரவலாக பேசப்படுகின்றது ஒருபுறமிருக்க பாராளுமன்ற ஆசனம் ஒன்றுமே இல்லாமல் கிழக்கிலே சேவை செய்கின்ற தங்கமகன் முஸ்லிம்களின் ஏகோபித்த தலைவன் றிஸாட் பதியுதீனை ஆதரிக்க வேண்டும் என்றும் பரவலாக ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற சுலைமானும், தாஹிரும் , இத்ரீசும், ஆயிஸாவும் பேசுகின்றாள்.

நோன்பு வைத்தவன் அதைத்திறப்பதா முஸ்லிம்களின் பிரட்சினை...?

நீ உன் நாவால் சொன்ன அத்தனை பொய்களையும் மக்கள் மண்றின் முன் போய் மண்ணிப்புக்கேட்டு இந்த றமழான் மாதத்தில் பிரயச்சித்தம் தேடு. இன்னும் இன்னும் உண்பின்னால் ஏமாறுகின்ற மடயனாக கிழக்கானை நினைக்காதே....!

ஈச்சம்பழமும் ஒருமுடர் தன்னீரும் கிழக்கானுக்கு போதும் என்று நினைக்காதே....!

அல்லது அடுத்த தேர்தலுக்கு முன் போய் பொய்கள் 2 சொல்லிவிட்டுப் போனால் போதும் என்று நினைக்காதே ....!

இனி அடுத்த முஸ்லிம்களின் ஆனந்த சங்கரி நீதான் என்பதையும் மறவாதே இறைவன் உன்னை புறந்தள்ளும் நாள் வெகுதூரமில்லை.

₹ புறக்கணிப்போம் ₹ புறம்தள்ளுவோம் ₹ பொய்யர் காங்கிரஸை விரட்டி அடிப்போம் ₹



எஸ். எம். இஹ்ஸான் மாவடிப்பள்ளி

Tuesday, June 13, 2017

பதவிகளை கருத்தில் கொள்ளாது முஸ்லிம்களின் பிரச்சனைகளை சர்வதேசம் கொண்டு செல்லும் றிஷாத்

(ஹபீல் எம்.சுஹைர்)

இன்று அமைச்சர் றிஷாதின் உத்தியோக முக நூல் பக்கத்தில் ஒரு செய்தி பதிவிடப்பட்டிருந்தது

“இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலவரம் குறித்து அமைச்சர் றிஷாத், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்செனிடம் விளக்கமளித்திருந்தார் ”  என்பதே அச் செய்தியாகும்.

இலங்கை அரசு சர்வதேச அழுத்தங்களை எதிர்நோக்கி இருக்கின்ற நிலையில் இலங்கை முஸ்லிம் தலைவர்கள் இவ்வாறான முன்னெடுப்புக்களை செய்வது இலங்கை நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இருந்தாலும் இன்று முஸ்லிம்கள் எதிர்நோக்கி கொண்டிருக்கும் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இதனை செய்யும் முஸ்லிம் அரச தலைவர் இலங்கை ஆட்சியாளர்களின் வெறுப்பை சம்பாதிப்பார் என்பதிலும் ஐயமில்லை. தற்போது அமைச்சர் றிஷாத் இவ்வரசின் அமைச்சுப் பதவியில் இருந்து கொண்டு இவ்வாறான செயற்பாடுகள் தனது பதவிகளுக்கு ஆப்பாக அமைந்து விடும் என நன்கு அறிந்திருந்தும் தைரியமாக முன்னெடுக்கும் அவரது சமூக பற்றை பாராட்டாமல் இருக்க முடியாது.

அமைச்சர் றிஷாத் பதவி பட்டங்களை முதன்மையாக கொண்டிருந்தால் இதனை அவர் பகிரங்கப்படுத்தாமல் இரகசியமாக பாதுகாத்திருக்க முடியும். இதன் மூலம் இவ்வாட்சியாளர்களுக்கு பயப்படும் கோழை நானல்ல என்பதை நிரூபித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பல பக்கங்களை கொண்ட அறிக்கையை 2014ம் ஆண்டு ஹசனலி கட்சி சார்பாக அந் நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளராக இருந்த  நவநீதம் பிள்ளையிடம் ஒப்படைத்திருந்தார்.  இந்த விடயம் இரகசியமாக இருக்கும் என்று நினைத்தே செய்தார். இது பகிரங்கமாக அதனை தான் வழங்கவில்லையென ஹசனலியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் மாட்டிவிட்டு நல்ல பெயர் வாங்கியிருந்தார்.

இதன் மூலம் நான் கூற வருகின்ற விடயமானது அமைச்சர் றிஷாத் இந்த விடயத்தை தனது முக நூல் பக்கத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளதன் மூலம் அன்று அமைச்சர் ஹக்கீம் அதனை செய்தது தானல்ல என மறுத்து நல்ல பெயர் வாங்கி தனது பதவிகளை பாதுக்காத்தது போன்று செய்ய முடியாது என்பதாகும். இவ்விடயமானது அமைச்சர் றிஷாத் பதவி பட்டங்களுக்கு ஆசைப்பட்டவரல்ல என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

இப்படி ஆட்சியாளர்களுக்கு அஞ்சாத ஒரு தலைவரே எமக்கும் தேவையாகும்.


Sunday, June 11, 2017

அம்பாறையில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த அமைச்சர் றிஷாத்

(ஹபீல் எம்.சுஹைர்)

அம்பாறை மாவட்டத்துக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் றிஷாத் செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம் அலை கடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது. இதற்கு முன்பு அமைச்சர் றிஷாத் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட போது காணக்கிடைக்காத பல புதுமுக ஆதரவாளர்கள் இம் முறை கலந்து கொண்டமையே இதிலுள்ள விசேடமாகும்.

அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாதின் துணிவுமிக்க பேச்சுக்கள் பலரை கவர்ந்தமையே புதுமுக ஆதரவர்களின் பிரசன்னத்துக்கு காரணம் என அங்கு வருகை தந்திருந்த புது முக ஆதரவாளர்களிடம் பேசக் கிடைத்த போது அறிந்து கொள்ள முடிந்தது. இதன் பிறகு ஊமைத் தலைவர்களின் கட்சிகளை ஆதரிக்காமல் அஷ்ரப் பாணியில் மிக இளம் வயதில் துணிவுமிக்க அரசியல் பயணம் மேற்கொள்ளும் அமைச்சர் றிஷாத்துடன் அவர்கள் தொடர்ந்து பயணிக்க போவதாக உறுதி மொழி வழங்கினர்.

இவரது இரு நாள் விஜயங்களின் போது ஒன்று கூடிய மக்கள் எண்ணிக்கையானது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆதரவானது பல மடங்கால் அதிகரித்துள்ளதை துல்லியமாக்கியுள்ளது. இதன் பிறகு மு.காவின் ஆதரவாளர்கள் யாருமே நிம்மதியாக தூக்க மாட்டார்கள் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.


Thursday, June 8, 2017

சவூதி நிறுவனம் இலவசமாக வழங்கிய நீர் இணைப்புக்கு இறக்காமம்  முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு பணம் பெற்றதா?

இறக்காம பிரதேச செயலகத்தின் கீழுள்ள முகைதீன் கிராமம் மற்றும் ஜபல் ஆகிய பிரதேச மக்களுக்கான முழுமையான இலவச குடி நீர் இணைப்பை சவூதி அரேபியாவின் நிதாவுல் கைர் நிறுவனம் வழங்கியிருந்தது. இதற்கான நிதியானது அம்பாறை மாவட்ட உலமா சபையின் தலைவர் எஸ்.எச் ஆதம்பாவா மௌலவியினூடாக குறித்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந் நிதி வழங்கலுக்கும் மு.காவுக்குமிடையில்  எந்த தொடர்புமில்லையுமென எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களினூடாக அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்பு செயலாளர் ரகுமத் மன்சூர்  கலந்து கொண்டிருந்தார். இது அரசியல் மயப்படுத்தப்பட்டமை இதிலுள்ள முதற் தவறாகும்.

குறித்த நிகழ்வுகளினூடாக  80 அளவிலானோர் இலவச குடிநீர் இணைப்பை பெற்றிருந்தனர். *இங்கு இலவச குடிநீர் வழங்கப்பட்ட  ஒவ்வொரு குடும்பத்தினரிடையே இருந்தும் தலா 1500 ரூபாய் பணமானது அறவிடப்பட்டுள்ளது.* குறித்த பணத்தை வழங்காவிட்டால் இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்படாது எனவும் அம் மக்களிடம் பகிரங்கமாகவே கூறப்பட்டுள்ளது. அந்த மக்கள் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதால் குறித்த பணத்தை மிகவும் சிரமப்பட்டே வழங்கியுள்ளனர். குறித்த மக்கள் அன்றாடம் உணவு உண்பதற்கே மிகவும் சிரமப்பட்டு வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

*இது தான் இலவச குடிநீர் இணைப்பின் இலட்சணையா?* அன்று குறித்த பணத்தை முழுமையாக பயன்படுத்துமளவு செலவுகள் கூட இடம்பெறவில்லையென குறித்த மக்கள் கூறுவதை அவதானிக்க முடிகிறது. இக் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளராக அறிவிப்பு உட்பட அனைத்து விடயங்களுக்கும் மு,காவின் இறக்காம மத்திய குழுவின் நாமமே போடப்பட்டுள்ளது. யாரோ நீர் வழங்குகிறார்கள். மக்களின் பணம் வசூலிக்கப்பட்டு நிகழ்வு இடம்பெறுகிறது. பெயர் பெறுவது மு.காவினரா? இப் பெயர் பெரளுக்காவது  இந்த சிறு பணத்தை செலவிட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யுமளவாவது மு.காவிடம் பணம் இல்லையா?

வசூலிக்கப்பட்ட பணம் மீள வழங்கப்படுமா?



துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Tuesday, June 6, 2017

அமைச்சர் றிஷாதின் உயிரை பணயம் வைக்கும் துணிவுமிக்க பாராளுமன்ற பேச்சுக்கள்

அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் பேசுகின்ற பேச்சுக்களை அவதானிக்கும் போது அதில் எந்த விதமான ஒழிவு மறைவுகளுமின்றி  அரசை நேரடியாக தாக்கி பேசுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கொண்டு வந்த ஒத்தி வைப்பு பிரேரணையில் உரையாற்றிய அமைச்சர் றிஷாத் குருநாகலில் வைத்து ஞானசார தேரரை கைது செய்வதற்கு பொலீசார் மேற்கொண்ட முயற்சிகள் நாடகம் என நேரடியாகவே கூறி இருந்தார். இன்று ஜெனீவா மனித உரிமைகள் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் றிஷாத் ஞானசார தேரரை கைது செய்ய நான்கு போலிஸ் குழுக்களை நியமித்து அரசு பூச்சாண்டி காட்டுவதாக நேரடியாகவே கூறி இருந்தார்.

இந்த பேச்சுக்கள் பேசுவதற்கு அலாதித் துணிவு வேண்டும். இவ்வரசானது ஞானசார தேரரை கைது செய்ய மேற்கொள்ளும் முயற்சிகள் போலியானது என்பது வெளிப்படையாகவே விளங்குகிறது. இன்று ஆசாத் சாலி ஜனாதிபதி கூறினால் தாங்கள் ஞானசார தேரரை கைது செய்ய தயாராக இருப்பதாக பொலிசார் தன்னிடம் கூறியதாக கூறியுள்ளமை இதனை இன்னும் தெளிவாக்குகிறது. இது தொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகள் யாருமே இப்படி காட்டமான உரையை ஆற்றி இருக்கவில்லை.இரு நாட்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹக்கீம் இனவாத முன்னெடுப்புக்கள் அரசை கவிழ்க்கவே என அரசுக்கு  சார்பான அறிக்கையையே விட்டிருந்தார்.

இப்படியான பேச்சுக்களை அமைச்சர் றிஷாத் தொடர்வாராக இருந்தால் ஆளும் அரசின் இரு தேசிய கட்சிகளின் அதிக எதிர்ப்பை பெறுவார். அமைச்சர் றிஷாத் இவ்வாறு பேசி ஆளும் ஆட்சியாளர்களின் அதிக எதிர்ப்பை மக்களுக்காக சம்பாதித்துள்ளார் என்பதே உண்மை. இன்று அவர் இனவாதிகளிடத்திலும் ஒரு வில்லனாகவே பார்க்கப் டுகிறார்.  குருநாகலில் வைத்து ஞானசார தேரரை கைது செய்ய நாடகம் அரங்கேறிய போது கூட ஞானசார தேரர் அமைச்சர் றிஷாதின் பெயரைக் கூறி தூற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இனவாத ஊடகங்களை எடுத்துக்கொண்டால் நாளாந்தம் அமைச்சர் றிஷாதை இகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பெரும்பான்மை இன மக்களிடத்தில் மாத்திரமல்ல. முஸ்லிம்களின் விடயத்தில் தமிழ் தலைவர்களிடத்திலும் துணிவுடன் பேச தவறவில்லை. இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் றிஷாத் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தடையாக இருப்பதாகவும் நேரடியாக கூறி அவர்களையும் விமர்சித்திருந்தார். துணிவுடன் குரல் கொடுப்பதானது பலவாறான அச்சுறுத்தல்களை தானாக தேடிச் செல்வதற்கு சமனாகும். முஸ்லிம்களுக்காக அனைவருடன் கருத்தியல் முரண்பாடு கொண்டு துணிவுடன் குரல் கொடுத்தால் அமைச்சர் றிஷாதுக்கு அச்சுறுத்தல் வருகின்ற போது உதவப் போவது யார்?

அமைச்சர் றிஷாத் இவ்வாறு மக்களுக்காக பலருடன் முரண்பட்டு துணிவுடன் குரல் கொடுப்பதன் காரணமாக தனது உயிரை பணயம் வைத்துள்ளார் என்பதே உண்மையாகும். அன்று மறைந்த மு.காவின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் எவ்வாறு மரணத்தை எதிர்பார்த்து கபன் சீலையோடு திரிந்தாரோ அதே நிலையில் தான் அமைச்சர் றிஷாதும் திரிகிறார். இதுவெல்லாம் எதற்காக? எமது முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட பற்றுக்கல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? அமைச்சர் றிஷாதின் துணிவுமிக்க பேச்சுக்களால் அவர் ஏந்தளவு முஸ்லிம்களின் எதிரிகளிடத்தில் எதிர்ப்பை சம்பாதிக்கின்றாரோ அதை விட அதிகமான ஆதரவை முஸ்லிம்கள் அவருக்கு வழங்க வேண்டும்.

அல் ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்




அட்டாளைச்சேனை தேசியப்பட்டியலில் தவத்துக்கே அதிகம் அக்கறை

( ஹபீல் எம்.சுஹைர் )

அமைச்சர் ஹக்கீமின் பகிரங்கமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் இன்னும் கனவாகவே உள்ளது. அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதில் அமைச்சர் ஹக்கீமுக்கு எந்த விதமான சிறு பிரச்சினைகளும் இல்லாத போதும் ( தற்போது ஹசனலியின் தடையுமில்லை ) இன்னும் அதனை இழுத்தடிப்பு செய்தே வருகிறார்.

இந்த இழுத்தடிப்பின் பின்னால் அமைச்சர் ஹக்கீமுக்கும் சல்மானுக்கும் இடையில் உள்ள மறைமுக ஒப்பந்தம் இருப்பதான கதைகள் இருப்பதோடு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே மு.கா முதலமைச்சரை பெற்றுக்கொள்ளாது போனால் நஸீர் ஹாபிசுக்கு அதனை வழங்கி பாராளுமன்றம் அனுப்பி வைத்தல் போன்ற பல பல விடயங்கள் உள்ளன. இவற்றுக்கு பின்னாலேயே அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் வழங்கப்படும். பாவம் அட்டாளைச்சேனை மக்கள். பல காலமாக முஸ்லிம் காங்கிரசை ஆதரித்து வருகின்ற போதும் பலர் நுகர்ந்த எச்சியைத் தான் உண்ண வேண்டிய நிலைமை.

நான் சொல்லும் இந்த கதை முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த பலரும் அறிந்த கதையே. இருந்த போதிலும் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்பதில் தவம் குறியாகவே உள்ளார். அட்டாளைச்சேனை மக்கள் தேசியப்பட்டியல் கதையை மறைந்துள்ள நிலையில் தனது சார்பு ஊடகம் ஒன்றினூடாக இன்னும் சில நாட்களிலே அட்டாளைச்சேனையில் நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொள்ளும் போது அட்டாளைச்சேனை முக்கியஸ்தர்கள் சிலர் அமைச்சர் ஹக்கீமிடம் தேசியப்பட்டியல் பற்றி கேட்கவுள்ளதாக கதைகளை பரப்பி அட்டாளைச்சேனை மக்களிடையே தேசியப்பட்டியல் உணர்வை தூண்டி விடும் வேலையை செய்கிறார். அமைச்சர் ஹக்கீமிடம் நல்ல பிள்ளையாக நடிப்பதில் வல்லவர். இதுவெல்லாம் அமைச்சர் ஹக்கீம் அறியாமல் இருக்குமளவு மடையனுமல்ல.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கிடைத்தால் அது மாகாண அமைச்சர் நசீருக்கு கிடைக்கும். அவரது மாகாண அமைச்சு தனக்கு கிடைக்கும். அதனூடாக விரைவான சேவைகளை செய்து எதிர்வரும் கிழக்கு மாகாண சபையில் தெரிவாவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிப்பதே  தவத்தின் சிந்தனையாகும். தவம் என்ன தான் தவம் இருந்தாலும் அந்த தவத்துக்கு அமைச்சர் ஹக்கீம் ஒரு போதும்  ஆட மாட்டார். தவத்தின் இந்த செயற்பாடு ஒரு வகையில் நோக்கும் போது சரியானதும் கூட. இருந்தாலும் அதனை வெளிப்படையாக கூற முடியாது தவிக்கின்றார்.


ஒரு சமூகத்தின் தலைவனது  நோன்பு நாள் ஒன்று...!

இது நோன்பு மாதம்...அதிகாலை மூன்று மணிக்கு ஸஹருக்கு எழுந்து, நோன்பு வைத்து, பஜ்ர் தொழுது முடித்துக் கொஞ்சம் தூங்கலாமென எண்ணித் தலையைச் சாய்த்தால், தொலைபேசி அலறுகிறது. ''முஸ்லிம் ஒருவரின் கடைக்குத் தீ வைத்து விட்டார்கள்...''

உடனே எழுந்து உடுத்தியிருந்த அதே சாரத்துடன் காரிலேறிக் குறிப்பிட்ட இடம் வந்து, கடைக்குச் சொந்தமானவரிடம் விபரங்கள் கேட்டு, போலீஸ் மா அதிபருக்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் நடந்த அநியாயத்தைப் பற்றி உறக்கப் பேசி நியாயம் கேட்டு, தக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி விட்டு வீட்டுக்குப் போனால், மண் சரிவால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரியிலிருந்து தகவல் வருகிறது. அவசர அவசரமாகக் குளித்து முடித்து, ஆடை மாற்றிக் கொழும்பிலிருந்து இரத்தினபுரி போய் அங்கு நிவாரணப் பணிகளைக் கவனித்துவிட்டு, அதிகாரிகளுக்குக் கட்டளை பிறப்பித்து மீண்டும் கொழும்புக்கு வந்து, அமைச்சுக்குப் போய் அலுவல்களைக் கவனித்து, லுஹர் தொழுது, பாராளுமன்றம் போய் அங்கே, நாட்டில் முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அநியாயங்கள் பற்றி யாருக்கும் அஞ்சாமல் நெஞ்சு நிமிர்த்தி , ''நான்கு போலீஸ் குழுக்களை அமைத்து இனவாதியைப் பிடிப்பதாகச் சொல்கிறீர்களே, இன்னும் அவரைப் பிடிக்காமலிருக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா...?'' என ஆக்ரோஷமாகக் குரலெழுப்பி, சீற்றத்துடன் சிங்கமாய்க் கர்ஜித்து வெளியே வந்து, அஸர் தொழுத பின்னர் தமிழ் பேசும்  மக்கள் விடயமாக அந்த வெளிநாட்டுத் தூதுவருடன்  உரையாடி முடிக்கையில்,  சில முக்கியஸ்தர்கள் வந்து 'தோப்பூரில் தொல்பொருள் என்று கூறி தமிழ்,முஸ்லிம்களின் காணிகளை துவேஷம் கொண்ட சிலர் அபகரிக்கப் பார்க்கிறார்கள்.' என்று சொல்ல, உடனடியாகவே அது சம்பந்தமாக உரிய திணைக்களங்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் உரிய பணிப்புரைகளை வழங்கி நோன்பு திறக்க வீடு வந்தால், வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஏழைகளும் தேவையுடையோர் பலரும். அவர்களிடம் அன்பாகப் பேசி நோன்பு திறக்க வைத்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து ஆவன செய்த பின்னர் மக்ரிப் தொழுது முடிக்க, மட்டக்களப்பில் ஒரு சமூக சேவகரின் மரணச் செய்தி வருகிறது. இன்னா லில்லாஹி என்று கூறி, அவசரமாகப் போகும் வழியில் இஷாவைத் தொழுது, அங்கு போய்த் தன்னால் முடிந்த உதவிகளை வழங்கி, ஜனாஸா நல்லடக்கத்திலும் கலந்துவிட்டு, வரும் வழியில் ஸஹர் செய்து வீடு வந்து சுப்ஹு தொழுது, கண்ணை மூடிக் கொஞ்ச நேரம் படுக்கலாமென்று பார்த்தால்....தொலைபேசி ஒலிக்கிறது!

எங்கள் தலைவரே... றிசாத் பதியுதீனே...

காமமும் தூக்கமும் விஸ்கியும் ஓய்வுமாகப்  பலர் தம்மையும்  தலைவர்களெனச் சொல்லிக் கொண்டு வாழும் இந்த உலகில், தனது வாழ்வையே இந்தச் சமூகத்துக்காக அர்ப்பணித்து வாழ்கின்ற உங்களுக்கான நற்கூலியை அந்த இறைவன் நிச்சயம் தருவான். இன்ஷா அல்லாஹ்...!