மு.காவினரின் அச்சத்தால் உச்சம் தொட்ட அமைச்சர் றிஷாத்
அமைச்சர் றிஷாத் துரித வளர்ச்சி கண்டமைக்கு பல காரணங்கள் இருப்பினும் மு.காவினர் அமைச்சர் தங்களுக்கு போட்டியாக வளர்ந்து விடுவாரோ என அஞ்சியமை அவரின் வளர்ச்சிக்கான பிரதான காரணமாகும்.
இன்று மு.காவின் போராளிகள் மாணிக்கமடு விடயத்தில் அமைச்சர் றிஷாத் தலையிட வேண்டுமென்பது போல கருத்து வெளியிட்டு வருகின்றனர்.இதனூடாக அமைச்சர் றிஷாத் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை எழும் போது அங்கு சென்று தீர்த்துவைக்க வேண்டும் என்ற மனோ நிலையை அவதானிக்க முடிகிறது.இம் மனோ நிலையானது அமைச்சர் றிஷாத் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டிய தலைவர் என்பதை எடுத்து காட்டுகிறது.
வில்பத்து பிரச்சினைகளின் போது வடக்கை பிறப்பிடமற்ற அமைச்சர் ஹக்கீம் தலையிட வேண்டுமென இலங்கை முஸ்லிம்கள் விரும்பியிருந்தனர்.ஆனால்,தே.கா என்ற கட்சியின் தலைவர் அமைச்சராக இருந்த போது அவரின் தலையீட்டை பெரிதும் எதிர்பார்க்கவில்லை.காரணம் தே.காவின் தலைவர் இலங்கை மக்களின் அங்கீகாரம்பெற்ற தலைவராக மக்கள் அங்கீகரிக்கப்பட வில்லை என்பதாகும்.
அது போன்றே இறக்காம சிலை வைப்பின் போது அமைச்சர் றிஷாத் தலையிட வேண்டுமென மு.காவின் போராளிகள் உட்பட அனைவரும் விரும்புகின்றனர்.இச் சேதியானது அமைச்சர் றிஷாத் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைவராக மாறிவிட்டார் என்பதை பறைசாட்டி நிற்கின்றது.
இப் பிரச்சினையை மு.காவினாலேயே தீர்க்க முடியும்.அமைச்சர் றிஷாத்தால் தீர்க்க முடியாது.அவர் இதில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்ற வகையில் அவரை புறக்கணித்து சென்றிருந்தால் அவர் இந்தளவு உச்சத்தை தொட்டிருக்க மாட்டார்.அவர் வன்னிக்குள் செயற்பட்ட போதே அவர் மீது கொண்ட அச்சத்தால் மு.காவினர் அவரை விமர்சிக்க தொடங்கினர்.அவருக்கு இலவச விளம்பரம் வழங்கியிருந்தனர்.அவர் மக்களிடையே இலவசமாக சென்றடைந்தார்.
தொடரும்...
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
.

Tuesday, April 25, 2017
Home »
srilankan news
»
Related Posts:
மு.காவின் யாப்பின் அடிப்படையிலான பேராளர் மாநாடு மு.காவின் 27வது பேராளர் மாநாடு எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந் நேரத்தில் இது பற்றி அலசுதல் பொருத்தமானதும் கூட.மு.வானது ஒவ்வொரு வருடமும் ஒரு… Read More
முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக ஹக்கீம் ஹஸன் அலியின் கோரிக்கை நிராகரிப்பு! --------------------------------------------------------------- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அவசர உயர்பீடக் கூட்டம் இன்றிரவு (11) நடைபெற்ற போது நாளைய (12… Read More
சேறு பூசலினால் துவண்டு போகும் கோழை நானல்ல நான்,அமைச்சர் றிஷாதிடம் வேலை பெற்றுத் தருவதாக கூறி காரைதீவை சேர்ந்த பூர்ணிமா என அழைக்கப்படும் செந்தளிர் என்ற இளம் பெண்ணிடம் பணம் பெற்றுக்கொண்டு அவளை படுக்கைக்கும் அழைத்ததாக சமூ… Read More
கிண்ணியாவில் அமைச்சர் றிஷாதின் ஆளுமை (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) அமைச்சர் றிஷாத் வடக்கு மக்களின் மீள் குடியேற்ற விடயத்தில் கரிசனை கொண்டு அம் மக்களை மீள் குடியேற்றம் செய்து வருகிறார்.அம் மக்களின் குடி நீர் தேவையை பூர்த்தி ச… Read More
*மு.காவின் யாப்பு மாற்றம் செல்லுமா?* எந்த விடயமாக இருந்தாலும் ஒரு கட்சியினால்,அமைப்பினால் அதன் யாப்பிற்கு அமைவாகவே செயற்பட முடியும்,செயற்பட வேண்டும்.கடந்த பேராளார் மாநாட்டிலும் யாப்பு மாற்றம் உட்பட பல விடயங்கள் இடம்பெற்றிருந… Read More
0 comments:
Post a Comment